முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியிலுள்ள தனிநபர் ஒருவரின் காணி ஒன்றின் கிணற்றுக்குள் மிதிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் காணப்படுவதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இந்த வெடிபொருட்களை அழிக்கும்படி சிறப்பு அதிரடிப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான நிலையினால் கிணற்றில் நீர்வற்றி காணப்பட்டுள்ளதை தொடர்ந்து கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றிலுள்ள வெடிபொருட்களை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைத்து தகர்த்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 22 மிதிவெடிகள், துப்பாக்கி ரவைகள் 789, வெடிமருந்து ஒரு கிலோக்கிராம் என்பன மீட்டு அழிக்கப்பட்டுள்ளன.