இளஞ்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகத்தினை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகத்தினை கண்டித்து யாழ்.மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மதுசாரத்திற்கு எதிரான இளைஞர் அணி மற்றும் யாழ்.மாவட்ட பெண்கள் அணி, யாழ்.மாவட்ட இளைஞர் ஒன்றியம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியானது யாழ்.வேம்படியில் முடிவடைந்ததது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூர் பின் வீதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்திற்கு உயர்மட்டத்திலிருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் வெளிவந்த நிலையில் உள்ளன.

17 வருடங்களாக நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய சரத் ஹேமச்சந்திர என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததுடன்,யாழில் இன்றைய தினம் அவரிற்காக அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.