ஆண்கள் எதற்காக மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்?

மாதுளம் பழத்தில் அதிக அளவில் பிளேவனாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.

குறிப்பாக ஆண்களுக்கு இது உகந்த பழமாகும்.

அடங்கியுள்ள சத்துக்கள்

பிளேவனாய்ட்ஸ், பாலிபினால்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

ஒரு கப் மாதுளம்பழக்கொட்டையில், நார்ச்சத்து 7 கிராம், புரோட்டின் 3 கிராம், விட்டமின் சி 30 சதவீதம், விட்டமின் கே 36 சதவீதம், போலேட் 16 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 12 சதவீதம் உள்ளது.

மேலும், 24 கிராம் சர்க்கரை மற்றும் 144 கலோரி உள்ளது.

எதற்காக ஆண்கள் சாப்பிட வேண்டும்?

1. ஆண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவது அதிகம் என்பதால், இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

2. புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். மேலும் மாதுளை நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.

3. ஆண்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்.

4. ஆனால் மாதுளையை தினமும் ஆண்கள் சிறிது உட்கொண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

5. மேலும் ஆய்வுகளிலும் மாதுளை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6. கருவுறுதலுக்கு மாதுளம் பழம் உதவியாக இருக்கிறது, சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும், அவர்கள் மாதுளம் சாற்றினை அருந்தி வந்தால், அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் விறைப்புத்தன்மை செயல்பாட்டை சீராக்கும்.

விமல் மீண்டும் நிதி மோசடி பொலிஸில் ஆஜர்

வீடமைப்புத்துறை அமைச்சராக இருந்த வேளையில் முறைகேடாக வாகனங்களை பயன்படுத்தியகுற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமானவிமல் வீரவன்ச இன்று நிதிமோசடி பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதும்சுகவீனம் காரணமாக விசாரணையின் இடையில் வெளியேறியிருந்தார்.

இந்தநிலையில் இன்று அவர் மீண்டும் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவும் வாகன முறைகேடு தொடர்பில்தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க…

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும்.

அதேப் போல் நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்ஸிஜனை சுவாசித்து சேகரித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் பலப்படுத்த உதவும் ஓர் பானம் கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தான் அதிகம்
சளி, இருமல் போன்ற பொதுவான உடல் நல பிரச்சனையால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒருவருக்கு சளி நீண்ட நாட்கள் நீடித்திருந்தால், நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒரு நாளில் சளியின் உற்பத்தி
நம் உடல் ஒரு நாளில் 1-2 லிட்டர் சளியை உற்பத்தி செய்கிறது. அதில் பெரும்பாலானலை அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிடும். ஒருவேளை ஒருவருக்கு சளி பிடித்தால், மூச்சுக்குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு, அது வேறுபல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மஞ்சள் அல்லது பச்சை நிற சளி
சிலருக்கு சளியானது நீண்ட நாட்கள் நீடித்து, அந்த சளி பச்சை, மஞ்சள் நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வெளியேறினால், உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அப்போது மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.

அற்புத பானம்
நுரையீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிக்க ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. அதைப் பருகினால் நுரையீரலில் உள்ள சளி மட்டுமின்றி, இதர நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்பட்டுவிடும்.

பானம் செய்ய தேவையான பொருட்கள்:
* தேன் – 100 கிராம்
* தண்ணீர் – 100 மிலி
* எலுமிச்சை சாறு – 4 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
* ஓட்ஸ் – 50 கிராம்

செய்முறை:
* முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும்.
* பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால், சளி முற்றிலும் வெளியேறி, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்திருப்பதை நன்கு உணரலாம். வேண்டுமானால் இந்த முறையை 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
குழந்தைகள் தான் அதிக அளவில் சளி பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். எனவே இந்த பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். கண்டிப்பாக, இந்த பானத்தைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு சளி பிரச்சனை முற்றிலும் நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.

சளியை நீக்கும் வேறொரு வழி
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்ற மற்றொரு சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு போர்வையினுள் 10-15 நிமிடம் நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள் செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.

நோயை மாற்றுவதும் மாரகம் ஆக்குவதும் காலத்தின் அசைவே!

ஒருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக் கொண்டால் அந்த நோய் குணமடைவதற்கு சில நாட்களோ அல்லது சில வாரங்களோ ஆகலாம்.

எடுத்த எடுப்பில் – ஒரு கணப்பொழுதில் நோயை குணப்படுத்துதல் என்பது ஒருபோதும் சாத்திய மற்றது.

ஆக, நோய்க்கிருமி உடலில் நுழைந்துவிட்டால் அது அழிந்து பாதிக்கப்பட்டவர் மீள்வது என்பது காலத்தின் அசைவிலேயே தங்கியுள்ளது.

இதேவேளை ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால் அந்த நோய் ஒரு கணப்பொழுதிலேயே ஆளை முடித்துவிடாது.

நோயின் தாக்கத்தால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தீர்மானிப்பதும் காலத்தின் அசைவுதான்.

நோய்ப் பாதிப்புக்கு ஆளானவர் நாட்கள் செல்லச் செல்ல அந்த நோயின் கடுமைக்கு உட்படுகிறார். இந்நிலையில் காலத்தின் அசைவு நோய் முற்றி ஆளையே முடித்து விடுகிறது.

மேற்குறிப்பிட்ட நோய் குணமாதல்; நோய் முற்றி ஆள் முடிதல் என்ற இரண்டு நேர் மறையான சம்பவங்கள் காலத்தின் அசைவிலேயே நடக்கக்கூடியவை.

எனவே காலம் என்பது மிகவும் முக்கியமானது. காலம் கடந்துவிட்டது என்றால் பின்னர் எதுவும் செய்ய முடியாது என்றாகிவிடும்.

தமிழர்கள் உயிரைக் காவு கொள்பவனை யமன் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். தமிழர்களைப் பொறுத்து இன்று வரை நடந்த அத்தனை கொலைகள், மரணங்கள் அனைத்தையும் யமன் செய்ததாகவே அடையாளப்படுத்தியுள்ளனர்.

அதனைச் சற்று நுட்பமாக எல்லாம் காலம் என்று சொல்வதன் ஊடாக இனந்தெரியாத கொலைகள் அப்படியே ஆக்கப்பட்டுள்ளன.

எதுவாயினும் காலம் என்ற இயற்கையின் அசைவில் தன் கடமையை ஒழுங்காகச் செய்பவன் யமன் ஒருவனே என்பதால் அவனைக் காலன் என்று நம் தமிழ் முடிவு செய்தது.

காலத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழ் மொழி மிகவும் அருமையான கருத்தை முன் வைத்துள்ளது.

காலத்தே பயிர் செய் என்று உரைக்கும் நம் தமிழ் மொழி பருவத்தால்… அன்றிப் பழா என்றும் கூறி வைத்துள்ளது.

ஆக, காலம் நன்மைக்கும் தீமைக்கும் பொதுவானது சில விடயங்களுக்கு காலம் கடப்பது நல்லது. இன்னும் சில விடயங்களுக்கு காலம் கடப்பதே ஆபத்தானது.

இந்த வகையில் இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் விடப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் நிலைமை எதிர்முகமாகச் செல்வதற்கே வழிவகுக்கும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டிருந்தால் இன்று இலங்கைத் திருநாட்டின் உயர்வு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்திருக்கும்.

என்ன செய்வது காலப்பிழை என்று சொல்லித் தப்பிப்பதை தவிர வேறு வழியேதும் இல்லை.

எது எப்படியாயினும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எனது கடமை என்று வெளிப்படையாகக் கூறும் ஜனாதிபதி மைத்திரி அதனை உடனடியாகச் செய்யத் தவறுவாராயின் அவர் அவ்வாறு சொன்னது மட்டும் என்பதையே காலம் எழுதிச் செல்லும்.

ஆகையால் காலம் கடப்பதற்கு இடம் கொடாமல் தான் சொன்னதை ஜனாதிபதி மைத்திரி இக்கணமே செய்தாக வேண்டும்.

குழந்தைகள் கடத்தப்படாமல் இருக்கட்டும்

குழந்தைகள் கடத்தப்படுவது உலகையே அச்சுறுத்தும் பயங்கரமாகும். ஆண்டு தோறும் ஒரு கோடியே 20 லட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் கடத்தப்படுகிறார்கள். வேலைக்காகவும், பாலியலுக்காகவும், பிச்சை எடுக்கவும், போதைப் பொருட்கள் கடத்தப்படவும் குழந்தைகள் கடத்தப்படுகின்றன.

குழந்தை கடத்தலைத் தடுக்க பெற்றோர் முதலில் விழிப்புணர்வு பெறவேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்தே உடை அணிவித்துவிடவேண்டும். நினைவு தெரிய ஆரம்பித்த சிறுவர்- சிறுமியர்களிடம் ஆடையிட்டு மறைக்கவேண்டிய உடல் உறுப்புகள் பற்றியும், அவைகளை பெற்றோர், தாத்தா பாட்டி தவிர வேறு யாரும் தொட்டால் ‘அனுமதிக்கக்கூடாது’ என்றும் உணர்த்தவேண்டும். அவர்கள் ஓரளவு வளரத் தொடங்கிய பின்பு உடல் உறுப்புகள் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் எடுத்துக்கூறுங்கள்.

சிறுவர், சிறுமிகள் இருவரிடமுமே ‘குட் டச்’ எனப்படும் ‘நல்ல தொடுதல்’, ‘பேட் டச்’ எனப்படும் ‘தவறான தொடுதல்’ இரண்டையும் விளக்கிவிடவேண்டும். தலை, கைகள், முகம் போன்றவைகளில் தொடுவது நல்லதொடுதல். நெஞ்சு, முன்-பின் பக்கங்களில் தொடுவது தவறான தொடுதல் என்பதை விளக்கிவிடுங்கள். தவறான தொடுதல்களை அனுமதிக்கக்கூடாது என்பதையும், அத்தகைய தொந்தரவுகள் இருந்தால் அதுபற்றி பெற்றோரிடம் கூறவேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள்.

100-ல் 72 குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே செல்போனில் விளையாடத் தொடங்கிவிடுகின்றன என்கிறது, சமீபத்திய ஆய்வு ஒன்று. அதில் 58 பேருக்கு 13 முதல் 15 வயதுக்குள் சொந்தமாக செல்போன் கிடைத்துவிடுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது.

குழந்தைகளிடம் தங்கள் அன்பை வெளிக்காட்ட லேப்டாப், டேப்லெட் போன்றவைகளை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவைகள் மூலம் சிறுவர், சிறுமியர்கள் ஆபத்தில் சிக்குவது பெருகிவருகிறது. வாங்கிக்கொடுத்து, பிரச்சினைகளில் சிக்கிய பின்பு கண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை. 18 வயது வரை கம்ப்யூட்டர், லேப்டாப்களில் இன்டர்நெட் தொடர்புக்கு ‘பாஸ்வேர்டு’ வைத்துக்கொள்ளுங்கள்.

இன்டர்நெட் தொடர்புள்ள கம்ப்யூட்டரை எல்லோரும் புழங்குகின்ற பொது அறையில் வைத்திருங்கள். பள்ளிப் பருவத்தினர் இன்டர்நெட்டில் தகவல்கள் சேகரிக்க, நீங்கள் விழித்திருக்கும் நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொடுங்கள்.

பள்ளியில் படிப்பவர்களுக்கு போன் வாங்கிக்கொடுப்பதாக இருந்தால், சாதாரண போன்களை வாங்கிக்கொடுங்கள். அவர்களுக்கு ‘போஸ்ட் பெய்டு’ முறையே சிறந்தது. பில் அனுப்பும்போது யார், யாரிடம் பேசினார்கள் என்பதை அறிய ‘கால் லிஸ்ட்’டையும் கேளுங்கள்.

குழந்தைகளை வெளியே எங்கேயாவது அழைத்துச் செல்லும்போது தெரிந்தவர்கள் கடையில் சிறிதுநேரம் நிறுத்திவிட்டு செல்வது, ஆட்டோவில் உட்காரவைத்துவிட்டு செல்வது, அடுத்த வீடுகளில் பார்த்துக்கொள்ளும்படி ஒப்புவித்துவிட்டு செல்வது போன்றவைகளை தவிர்த்து விடுங்கள். ஏன்என்றால் நம்மை சுற்றியிருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களா, கெட்டவர்களா என்பது நமக்கு தெரியாது. அதனால் அடுத்தவர்களுக்கும்- குழந்தைகளுக்கும் இடையே எப்போதும் இடைவெளி இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். அந்த இடைவெளி ஏன் தேவை என்பதை பற்றி குழந்தைக்கும் எடுத்துச்சொல்லுங்கள்.

வேறுவழியே இல்லாமல் உறவினர் வீட்டிலோ, நண்பர் வீட்டிலோ குழந்தைகளை விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டால், நீங்கள் வீடு திரும்பியதும் முதல் வேலையாக குழந்தைகளை அழைத்து, ‘அந்த வீட்டில் எப்படி நடந்துகொண்டார்கள்? என்னென்ன நடந்தது?’ என்பதை எல்லாம் முழுமையாக, நிதானமாக விசாரியுங்கள். வெகுளித்தனமாக குழந்தை பேசுவதையும் உற்றுக்கவனித்து, அதன் உள்அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள். ‘இனிமேல் நான் அந்த வீட்டிற்கு செல்லமாட்டேன். அந்த வீட்டில் உள்ளவர்களை எனக்கு பிடிக்கவில்லை’ என்று குழந்தை சொன்னால், அதற்கான காரணத்தை தெளிவாகக் கேளுங்கள்.

குழந்தைகளின் சில விருப்பங்களை பெற்றோர்கள் பொதுவாகவே நிறைவேற்றுவதில்லை. இருசக்கர வாகனத்தில் முன்னால் இருந்து செல்ல சில குழந்தைகள் விரும்பும். அது பாதுகாப்பற்றது என்று பெற்றோர் கருதி அதை தவிர்த்திருக்கலாம். சாக்லேட்களை நிறைய வாங்கித்தரச் சொல்லி கேட்பார்கள். அது நல்லதில்லை என்று பெற்றோர் கருதி அதை வாங்கிக்கொடுக்காமல் தவிர்த்திருக்கலாம். இதை எல்லாம் உணர்ந்துகொண்டுதான் கடத்தல் காரர்கள் குழந்தைகளை அணுகுகிறார்கள். மோட்டார் சைக்கிளை குழந்தை அருகில் கொண்டு வந்து விட்டுக்கொண்டு, ‘உனக்கு இதில் பயணம் செய்ய பிடிக்கும்தானே? வா.. ஒரு ரவுண்டு போய் வரலாம்’ என்று அழைக்கிறார்கள். ‘இதோ உனக்கு பிடித்த சாக்லேட்!’ என்று கொடுக்கிறார்கள்.

சாலை ஓரங்களில் வாடிய முகத்துடனோ, கண்களை கசக்கிக்கொண்டோ நிற்கும் குழந்தைகளை பார்த்து, ‘உன்னை புறக்கணிக்கும் பெற்றோருக்கு ஒரு பாடம் புகட்டலாம். நீ என்னோடு வந்துவிடு..’ என்று அழைப்பு விடுக்கலாம். இத்தகைய வார்த்தைகளுக்கு குழந்தைகள் செவிசாய்த்துவிட்டால், அவர்களை கடத்திவிடக்கூடும்.

சில கடத்தல்காரர்கள் குழந்தைகளை அறியாமல் நடந்துவிட்டதுபோல் தட்டுவார்கள். குழந்தை எதிர்ப்பு தெரிவித்தால் ‘சாரி’ சொல்லிவிட்டு அகன்றுவிடுவார்கள். எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் மறுநாளும் தட்டுவார்கள். குழந்தையை பார்த்து சிரிப்பார்கள். அப்படியே நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, தங்கள் காரியத்தை சாதித்துவிடுவார்கள். சிலர், ‘உன்னோடு ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன்’ என்று ஆரம்பித்து, படம் எடுத்துவிட்டு, அந்த படத்தைக்காட்டியே நெருக்கத்தை உருவாக்குவார்கள். ‘நீ எங்களோடு வராவிட்டால் உன் பெற்றோரை கொன்றுவிடுவேன்’ என்று கூறி, குழந்தையை கடத்துகிறவர்களும் உண்டு.

குழந்தைகள் பெருமளவு கடத்தப்படுவதால், அவர்களை எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி கூறுங்கள். குழந்தைகளை கண்காணியுங்கள். குழந்தைகளிடம் நெருக்கமாக இருந்து அவர்களிடம் எப்போதும் மனம்விட்டு பேசுங்கள்.

வாக்காளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

நான்கு தொகுதிகளில் நடைபெற இருக்கும் தேர்தலில் அதிமுக வெற்றியை தனது வெற்றியாக கருத வேண்டும் என்று வாக்காளர்கள் மற்றும் அதிகமுக வினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லிக்குப்பம் தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தல் குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் நான்கு தொகுதி தேர்தல்களிலும் அதிமுக-வின் வெற்றியை தனது வெற்றியாக கருத வேண்டும். வாக்காளர்கள் அன்பையும் பேராதரவையும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8பில்லியன் ரூபா இழப்பு!

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் கடன்பெற்று அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா இழக்கப்படுவதாக சிறீலங்காவின் நிதியமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அமைப்பதற்கு 175 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இதற்காக சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கு வரிசெலுத்துவோர் வட்டியைச் செலுத்தி வருகின்றனர்.

வடிவமைத்து, கட்டியமைத்து பரிமாற்றம் செய்தல் என்ற அடிப்படையில் சீனா இத்துறைமுகத்தை அமைத்துக்கொடுத்தது.

இந்த துறைமுகத்தின் 80 வீத உரிமையை 1 பில்லியன் டொலருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதன்படி, 37.2 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ஷ பெயர் பொறிக்கப்பட்ட மத்தல விமான நிலையத்தினால் ஆண்டொன்றுக்கு 5.9 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது.

இதனை அமைப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 27.5 பில்லியன் ரூபா கடனைப் பயன்படுத்தியிருந்தது.

பணம் செலுத்தும் கருவி மூலம் திருமண மண்டபத்தில் மொய்பணம் வசூல்

நாட்டில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான அளவுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக, பணத்தை மாற்ற வங்கிகளிலும், பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்கள் முன்பும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

வெகுவாக வர்த்தகம் முடங்கிய நிலையில், இந்த பணத்தட்டுப்பாடு திருமண நிகழ்வுகளையும் பாதித்துள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐப்பசி மாதம் திருமண நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் மாதம் ஆகும்.

ஆனால், கடந்த சில நாட்களாக நிலவும் பணத் தட்டுப்பாட்டால், திருமண விழாக்களில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இதை கண்கூடாகவே பார்க்க முடிந்தது. பல திருமண மண்டபங்களில் சாப்பிடக் கூட ஆள் இல்லாமல், தயாரிக்கப்பட்ட உணவு வீணானது. சில திருமண மண்டபங்களில் இருந்து முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு உணவு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டன.

பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி இரவு அறிவித்தார். பொதுவாக, மாத சம்பளம் வாங்குபவர்கள் அனைவரது கைகளிலும் அந்த நேரத்தில் புழங்கியது ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தான். ஆனால், திடீர் அறிவிப்பால் கையில் வைத்திருந்த செல்லாத அந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அவர்கள் தவியாய் தவித்தனர்.

இதனால், பொதுமக்கள் பலரால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் பணத்தட்டுப்பாடு தான். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றால், பரிசு பொருள் வழங்குவதைவிட மொய் பணம் கொடுப்பது தான் பலரது வழக்கம்.

ஆனால், ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 பணம் கையில் போதிய அளவு இல்லாததால், அவர்களால் திருமண வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. கையில் இருக்கும் ரூ.500, ரூ.1,000 பணத்தை திருமண வீடுகளில் கொடுத்தால், திருமண வீட்டார் நம்மை எவ்வாறு நினைப்பார்கள்? என்று கருதி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவித்தனர்.

பணத்தட்டுப்பாடு காரணமாகத்தான் திருமண மண்டபங்களே வெறிச்சோடி போயின. ஆனால், கோவில்பட்டியில் நேற்று நடந்த திருமணம் ஒன்றில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எளிதாக மொய் பணம் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. அதாவது, பெரிய கடைகளில் நாம் பொருட்கள் வாங்கிய பிறகு, நமது வங்கிக் கணக்கு டெபிட் கார்ட்டை பயன்படுத்தி ‘சுவைப் மெஷின்’-ல் தேய்த்து பணத்தை வழங்கும் அதே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால், திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும், தங்களது டெபிட் கார்டு மூலம் தாங்கள் விரும்பிய மொய் பணத்தொகையை மகிழ்ச்சியோடு அளித்தனர். இதே முறை பல திருமண நிகழ்வுகளில் நேற்று தமிழகம் முழுவதும் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பளம்: டொனால்ட் டிரம்ப் அதிரடி

அமெரிக்காவின் அதிரபாக பதவி வகிப்பவர்களுக்கு விடுமுறைக்கால ஓய்வுடன் கூடிய சம்பளம் மற்றும் ஆண்டு சம்பளமாக 4 லட்சம் டாலர்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

நாட்டின் அதிபராக நீங்கள் சம்பளம் வாங்குவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘இல்லை, நான் சம்பளம் வாங்கப் போவதில்லை. ஆனால், நமது நாட்டின் சட்டப்படி ஒரு டாலராவது சம்பளமாக பெற வேண்டும் என்றுள்ளது. எனவே, ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொள்வேன். ஆனால், அது (ஒரு டாலர்) என்னவென்றே எனக்கு தெரியாது’ என கூறியுள்ளார்.

மற்ற அதிபர்களைப்போல் ஓய்வுக்காக விடுமுறை எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்ற கேள்விக்கு, ‘நமக்கு ஏராளமான பணிகள் உள்ளன. மக்களுக்காக அவற்றை நான் செய்ய வேண்டியுள்ளது. அதனால், பெரிய அளவிலான ஓய்வுக்காக விடுமுறை எடுக்கும் திட்டம் ஏதுமில்லை’ என்று அவர் பதிலளித்தார்.

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய அழிவை சந்திக்க நேரிடும்: ஜனாதிபதி எச்சரிக்கை

நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளில் நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் ஈடுபட்டு வருகையில், சிலர் அதனை சமஷ்டி என விமர்சிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கனவே தாமதமாகிப்போன நல்லிணக்கத்தை இனியும் வேடிக்கை பார்த்தால் தேசிய அழிவுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயலணியின் 2016ஆம் ஆண்டுக்கான ”நம்பிக்கைக்கான சிறகடிப்பு” என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்-

”நாட்டில் பல வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தால் மக்கள் வேறுபட்டிருந்த நிலையில், நாம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளோம். எமது நாட்டிலுள்ள சிலருக்கு நல்லிணக்கம் என்ற சொல் வேடிக்கையாக தெரிவதாலேயே அந்த சொல்லை நிந்தனை செய்கின்றனர்.

குறிப்பாக நல்லிணக்கச் செயற்பாட்டினை சமஷ்டிக்கான செயற்பாடென எதிர்த்தரப்பினர் விமர்சிக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து செயற்படுவார்களாயின் அவர்கள் மீண்டும் கண்ணீர் சிந்தவேண்டிய நிலை ஏற்படும். நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை நிந்திப்பதானது தேசிய அழிவை ஏற்படுத்தும். எனவே நாம் முழு நாட்டு மக்களையும் ஒன்றுபடுத்தக்கூடிய திட்டங்களையே முன்னெடுக்க வேண்டியுள்ளது” என்றார்.

பேச்சிலும், மூச்சிலும் பொறாமை

அலுவலகத்தில் பலர் வேலைபார்ப்பார்கள். ஒருவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். பலரும் அவரிடம் வாழ்த்து தெரிவிப்பார்கள். அதில் சிலரது மனதில் எதிர்மறையான கேள்விகளும், பொறாமையும்தான் குடியிருக்கும். மலர்ந்த முகத்தோடு இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் உள்ளே, ‘நாமெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறோம்.

இவருக்கு மட்டும்தான் சம்பளம் கூடுகிறது’ என்று பொறுமுவார்கள். சிலர், ‘இவருக்கு பதவி உயர்வு கிடைக்க என்ன காரணம்?’ என்று குறுக்குவழியில் கேள்விகள் கேட்டு, ஏளனமாகப் பேசுவார்கள். பதவி உயர்வு ஒருவேளை பெண்ணுக்கு கிடைத்திருந்தால், பொறாமைத் தீ வேறு மாதிரி பற்றி எரியும்.

ஒருவருக்கு ‘டீம் லீடர்’ என்ற பதவி உயர்வு கிடைத்தது. உடனே அவரது நண்பர் ஒருவர் நெருங்கிவந்தார். ‘நீ டீம் லீடர் ஆனதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் நீ வழிநடத்தப் போவது மட்டமான டீம். இதற்கு முன்னால் இருந்த டீம் லீடர் இவர்களை மேய்க்க முடியாமல் வேலையைவிட்டே ஓடிவிட்டார். இப்போது நீ வந்திருக்கே. எவ்வளவு நாட்கள் ஓடுதுன்னு பார்ப்போம்’ என்றார்.

இவரது பேச்சிலும், மூச்சிலும் பொறாமையும், எரிச்சலும் இருப்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இப்படிப்பட்டவர்களை பகைத்துக்கொள்ளவேண்டியதில்லை. ‘நீங்கள் என்னை உஷார் படுத்தியதற்கு நன்றி’ என்று கூறிவிட்டு, உங்கள் வேலையில் கவனமாக இருப்பதுபோல், இந்த நண்பர் மீதும் கண்ணும், கருத்துமாய் இருங்கள். உங்களை எங்கேயாவது கவிழ்த்துவிட்டுவிட்டு, ‘நான் அப்பவே சொன்னேன்! நான் சொன்னதுபோலவே ஆகிவிட்டது பார்த்தாயா?’ என்பார்.

கன்டெய்னர் லாரிகளில் புதிய ரூ.500 நோட்டுக்கள் சென்னை வந்தன.. சில்லறை தட்டுப்பாடு நீங்குமா?

புதிய ரூ.500 நோட்டுக்கள் 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை வந்துள்ளன.

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றித்தருவதற்காக ரிசர்வ் வங்கி தனது அனைத்து அலுவலகங்களுக்கும் புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை அனுப்பியது.

தமிழகத்துக்கு 270 பெட்டிகளில் பெட்டிக்கு ரூ.20 கோடி வீதம் ரூ.5 ஆயிரத்து 400 கோடி அனுப்பப்பட்டது. இந்த பணம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வராமல் இருந்தது. இதனால் பணத்தட்டுப்பாடு மற்றும் சில்லரை தட்டுப்பாடு கடுமையாக நிலவியது.

கர்நாடக மாநிலம் மைசூர், மராட்டிய மாநிலம் நாசிக் ஆகிய இடங்களில் ரிசர்வ் வங்கி சார்பில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. நாசிக்கில் உள்ள அச்சகத்தில் இருந்து முதல்கட்டமாக 50 லட்சம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகத்தில் இருந்து 2 கன்டெய்னர் லாரிகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு நேற்று பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. இதனை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்றனர்.

இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு வினியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரண சக்தி தரும் சத்தான பூண்டு சட்னி

தேவையான பொருட்கள் :

பூண்டு பல் –  20
உளுந்து – 3 மேஜைக்கரண்டி
உப்பு  –  தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2

செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

* ஆறியவுடன் மிக்சியில் போட்டு அத்துடன் பூண்டு, உப்பு, சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும்.

* சுவையான சத்தான பூண்டு சட்னி ரெடி.

* தாளிக்க விரும்பினால் தாளித்து பரிமாறவும்.

* இந்த பூண்டு சட்னி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.

பினாமி சொத்துகள் மீது பாயும் மோடியின் அடுத்த அதிரடி!!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து, பினாமி சொத்துகள் மீது அடுத்ததாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கோவா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள க்ரீன்பீல்ட் விமான நிலையம் மற்றும் டியூம் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.

அப்போது, கடந்த 8-ம் தேதி இரவை பற்றி சில விஷயங்களை பேச விரும்புவதாக குறிப்பிட்டார்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் 10 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

மக்கள் படும் கஷ்டம் எனக்கு புரிகிறது. ஏழ்மையில் நானும் இருந்துள்ளேன். மக்களின் பிரச்னைகள் எனக்கு புரியும் என்றார்.

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, நான் எதற்கும் தயாராக உள்ளேன். என்னை தீயிட்டு கொளுத்தினாலும், இதனை நிறுத்த மாட்டேன் என்று ஆவேசமாக பேசினார்.

அதேபோல், ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோடி அதிரடியாக அறிவித்தார்.

நீரிழிவு நோய் சிக்கல்களை தடுப்போம்

நீரிழிவு நோய் என்று தெரிந்தவுடன், நம் மனத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், நீரிழிவுநோயை நல்லக்கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதே. அதற்கு நடைமுறை வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.

1. உணவில் கட்டுப்பாடு, 2. உடலுழைப்பு, 3. யோகா, தியானம், 4. மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை, மருந்துகளை தொடர்ந்து ஒழுங்காக எடுத்துக் கொள்ளுதல். நீரிழிவு நோயைத் தடுக்க முடியும், ஆனால், முற்றிலும் குணப்படுத்தமுடியாது. நிச்சயம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இல்லையென்றால், தலை முதல் கால் வரை அனைத்து உடல் உறுப்புக்களும் பாதிக்கப்படும். 1. கண்கள், 2. நரம்புகள், 3. சிறுநீரகம், 4. இதயம், 5. கால்கள் மற்றும் பாதங்கள் 6. தோல் ஆகியவை பாதிக்கப்படும். நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் நிச்சயமாக குணப்படுத்தலாம்.

1. கண்கள்:

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும் சாத்தியம் 20 மடங்கு அதிகம். கண்கள் பாதிப்பதற்கு ‘ரெட்டினோபதி” என்று பெயர். இதை ஆரம்பநிலையில் கண்டுபிடித்தால் ‘லேசர்” சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். கண்களில் இரத்த ஓட்டம் தடைபடுவதால்தான் பார்வை மங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

2. நரம்புகள்:

பெரும்பாலும் கால்களிலுள்ள நரம்புகள் உணர்ச்சியற்றுப் போகலாம். சிலசமயம் குத்துவது, குடைச்சல் போன்ற வலியும் ஏற்படலாம்.

3. சிறுநீரகம்:

நீண்டநாட்களாக, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை HbA1C என்ற சராசரி சர்க்கரையின் அளவைக் கண்டிப்பாக 7%க்குக் குறைவாக வைத்திருக்க வேண்டும். புகைபிடிப்பது, புகையிலையைப் பயன்படுத்துவது, மது அருந்துவது ஆகியவற்றை அடியோடு நிறுத்த வேண்டும். உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அதை உடனடியாக சிகிச்சை மூலம் குறைக்க வேண்டும். அதிக உடல் எடையை கண்டிப்பாக குறைத்தல் வேண்டும்.

4. இதயம்:

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு, நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லையென்றால், வெகுவாக இதயமும் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மார்புவலி, மூச்சுத்திணறல், ஓய்வில் இருக்கும் போது கூட திடீர் மார்பு வலி ஏற்படலாம். நீரிழிவு நோய் வந்தால், பெண்களுக்கும் அதிகமாக இதயநோய் வருகிறது. நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதால், வலி தெரியாமல் மாரடைப்பு வந்துவிடுகிறது.

5. கால்கள் மற்றும் பாதங்களில் உண்டாகும் சிக்கல்கள்:

சூடான தரையில் சரியான காலணியில்லாமல் நடக்கக்கூடாது. தினமும் கால்களை கண்ணாடி முன் வைத்து, புண், வெட்டு அல்லது ஏதும் குத்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

6. தோலில் உண்டாகும் சிக்கல்கள்:

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு எரிச்சல் அரிப்பு, தோல் தடித்தல், தோல் சம்பந்தமான தொல்லைகள் அதிகம் வரவாய்ப்பு உள்ளது.

சென்னை ஏர்போர்ட்டில் அஜித்., பல்கேரியாவுக்கு கிளம்பினாரா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் முதல்கட்ட, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கவுள்ளது.

இதற்காக படக்குழுவினர் ஏற்கனவே பல்கேரியாவுக்கு சென்றடைந்துவிட்ட நிலையில் நேற்று அஜித் பல்கேரியாவுக்கு புறப்பட்டார்.

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று அஜித் வந்திருந்ததை அறிந்ததும் பலர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் ஃபே|ஸ்புக் டுவிட்டரில் வைரலாகி வருகிறது

ஐ .நா மாநாட்டில் ஈழத் தமிழர்களிற்கான குரலை பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் அரங்கேற்றியது

ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் அரசியல் உரிமைமற்றும் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமை ஆகிய இரு சாசனங்களின் 50வது வருடத்தை கொண்டாடும் முகமாக நடாத்தப்பட்ட சர்வதேச மாநாடு போர்த்துக்கலின் தலைநகரான ஸ்பெயினில் கடந்த 10ம் திகதி முதல் நேற்று 12ம் திகதி வரை நடைபெற்றுள்ளது.

சர்வதேச வழங்கறிஞர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மாகாநாட்டிற்கு, பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம்உ த்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த இரண்டு சகாப்தங்களிற்கு மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் ஈழத்தமிழர்களிற்காக குரல் கொடுத்து வரும் தமிழர் மனிதர் உரிமைகள்மையத்தினரது நீண்டகால சேவையையும், அவர்களினால் ஈழத்தமிழர்கள்மீதான மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களிற்கமைய அவர்களது இணைய தளத்தில் ஆவணப்படுத்தப் ட்டுள்ள காரணிகளிற்காக, மாகாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த அமைப்பு சார்பாக இந்த மாகாநாட்டிற்கு, இதனது பொதுச் செயலாளர்திரு ச. வி. கிருபாகரன், சர்வதேச இயங்குனர் டியேற்றி மக்கோணல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன், உலகின் பல பகங்களிலிருந்தும்முக்கிய சர்வதேச சட்டதரணிகள், வழக்றிஞர்கள், ஆய்வாளர்கள்,கல்விமான்கள், மனித உரிமை ஆர்வளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அங்கு உரையாற்றிய, டியேற்றி மக்கோணல், இலங்கைதீவில் ஈழத்தமிழரதுஅவல நிலைபற்றியும், ஈழத்தமிழர்களிற்கு இலங்கை தீவில் நடைபெறுபவையாவும் ஓர் இன அழிப்பு என்பதை ஆதரங்களுடன் எடுத்துரைத்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பிற்கான ஆவணங்கள் இம் மகாநாட்டில்காட்சி படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச முக்கிய புள்ளிகளுடன் பலசந்திப்புக்களையும், பரப்புரைகளையும், பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி. கிருபாகரன் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக கிருபாகரன் பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் ஒன்றை அமைத்து ஈழத் தமிழர்களுக்காக ஜெனீவாவில் குரல் கொடுத்து வருகின்றார்.ஈழத்தில் நடந்துள்ள இன அழிப்பை நிருபிக்க போராடி வருகின்றார்.

2016 நவம்பர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ பல‌ன்களும்! அதிர்ஸ்ட குறிப்புக்களும்!

1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு…..

இந்த மாதத்தில் எதிர்பார்த்திருந்த தொகைக் கைக்கு வரும்.கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும்.

அரசியலில் செல்வாக்குக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பேசி தீர்க்கப்பாருங்கள். அவ்வப்போது மனஇறுக்கம், அசதி, சோர்வு வந்துப் போகும். அரசியல்வாதிகளே! புது பொறுப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி அலுவலக ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.

இங்கிதமாகப் பேசி சக ஊழியர்களின் குறை, நிறைகளை சரி செய்வீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். விவேகமான முடிவுகளால் முன்னேறும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 1, 9, 10, 12, 21
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு….

இந்த மாதத்தில் உங்கள் ரசனை மாறும். வி.ஐ.பிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். சகோதரங்கள் உங்கள் தேவையறிந்து உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.

பழைய பிரச்னைகளுக்கு ஒரு பக்கம் தீர்வுகள் கிடைத்தாலும் புதிது புதிதாக சில பிரச்னைகளும், சிக்கல்களும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.

என்றாலும் பிள்ளைகள் கோபப்படுவார்கள். நெருங்கிய உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று இருப்பார்கள்.

வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையை பற்றி சகாக்களிடம் குறை கூற வேண்டாம்.

கன்னிப் பெண்களே! வெலுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உயரதிகாரியால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே!

பழைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் தேடி வரும். பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்ட வேண்டிய மாதமிது-.

அதிஷ்ட திகதிகள்: 2, 11, 15, 16, 20
அதிஷ்ட எண்கள்: 2, 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்த நீங்கள்…..

இந்த மாதம் எதிர்ப்புகள் அடங்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள்.அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.

தாய்மாமன், அத்தை வகையில் மதிப்பு, மரியாதைக் கூடும். தாய்வழி சொத்து கைக்கு வரும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள்.

மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வாகனம் வாங்குவீர்கள்.

சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரும்.

புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். எதிர்பார்த்தைப் போல் நல்ல வரன் அமையும்.

வியாபாரம் செழிக்கும். போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

கலைத்துறையினர்களே! உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். வெற்றிப் பாதையில் பயணிக்கும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 3, 1, 9, 10, 27
அதிஷ்ட எண்கள்: 3, 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்த நீங்கள்…..

இந்த மாததத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.ஷேர் மூலமும் பணம் வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

ஆன்மிகப் பெரியோர், சித்தர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள்.

பூர்வீக சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

மாதத்தின் முற்பகுதியில் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம்.

தாயாருக்கு நெஞ்சு வலி, உங்களுக்கும் கை, கால் வலி, அசதி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்.

கன்னிப் பெண்களே!

பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.

பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.

கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். விட்டுக் கொடுத்துப் போவதால் வெற்றி பெறும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 4, 15, 17, 24, 26
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், பிஸ்தா பச்சை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் விவாதங்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு வேற்றுமாநிலத்தில் வேலை அமையும்.

பழைய வீட்டை இடித்துக் கட்டத் தொடங்குவீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். ஆனால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.

அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

திடீர் பணவரவு உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.

பங்குதாரர்கள், வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். மாறுபட்ட பாதையில் சென்று முன்னேறும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 5, 8, 15, 14, 24
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஆலிவ் பச்சை
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்த உங்களுக்கு….

இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும்.

சகோதரிக்கு திருமணம் முடியும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவி குடும்ப வருமானத்தை உயர்த்த சில ஆலோசனைகள் வழங்குவார். மனைவிவழி உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.

கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் சென்று வருவீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டா-கும். அவ்வப்போது முன்கோபம், காரியத் தாமதம், அலைச்சல் வந்துப் போகும்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை விரைந்து செலுத்தப்பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பது நல்லது. அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும்.

கன்னிப் பெண்களே!

கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும்.

கலைத்துறையினர்களே!

மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். கொஞ்சம் அலைந்தாலும் அதற்கான பலனை அடையும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 4, 6, 8, 17, 26
அதிஷ்ட எண்கள்: 5, 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, வெளிர் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்த உங்களுக்கு…..

இந்த மாதத்தில் போராட்டங்களும், தடைகளும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள்.பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடியும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும்.

அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்துப் போகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும்.

யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே!

பெற்றோரை அனுசரித்துப் போங்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள்-. வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள்.

உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். ராஜ தந்திரயுக்திகளால் வெற்றி பெறும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 7, 2, 6, 11, 25
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்த நீங்கள்….

இந்த மாதத்தில் எதிலும் வெற்றி, லாபம் கிட்டும். சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். புதிய ஆடை, அணிகலன்கள் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெகுநாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

அரசால் ஆதாயம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். திடீர் யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மாதத்தின் முற்பகுதியில் எதிலும் ஒருவித தயக்கம், சிலர் மீது நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வமின்மை வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கன்னிப் பெண்களே!

பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் தங்களின் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 8, 6, 23, 24, 26
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு……

இந்த மாதம் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

மகளின் அலட்சியப் போக்கு மாறும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார்.

வழக்கில் திருப்பம் ஏற்படும். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

பால்ய நண்பர்கள் உங்களை தேடி வந்துப் பேசுவார்கள். என்றாலும் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசியல்வாதிகளே! பினாமிகளின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.

கன்னிப் பெண்களே!

காதல் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும். வி.ஐ.பிகளால் இனம் கண்டறியப்படும் மாதமிது.

அதிஷ்ட திகதிகள்: 9, 10, 1, 3, 12
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

ஏன் வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க சொல்கிறார்கள் தெரியுமா?

பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு ஒருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா? அது தெரிந்தால், பாகற்காயைத் தவிர்க்கவேமாட்டீர்கள்.

பாகற்காய் கசப்பாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு ஒருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா? அது தெரிந்தால், பாகற்காயைத் தவிர்க்கவேமாட்டீர்கள்.

பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு ஒருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா? அது தெரிந்தால், பாகற்காயைத் தவிர்க்கவேமாட்டீர்கள்.

இங்கு பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பாகற்காயை ஒருவர் வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பது மட்டுமின்றி, ஜூஸ் தயாரித்து, தேன் கலந்து, வாரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

பாகற்காய் ஜூஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும், வலிமையை அதிகரிக்கும். எனவே உடலின் ஆற்றலை அதிகரிக்க கண்ட எனர்ஜி பானங்களைப் பருகாமல், பாகற்காயை சாப்பிடுங்கள். அதுவே போதும்.

பாகற்காய் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பாகற்காயை விட சிறந்த காய்கறி வேறொன்றும் இல்லை. ஆகவே சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாகற்காய் செரிமானத்திற்கு நல்லது. இது செரிமான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற பாகற்காய் உதவும். மேலும் பாகற்காய் உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். அதற்கு பாகற்காயை ஜூஸ் எடுத்து தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சிறை வாழ்க்கை அனுபவித்த நடிகர் நடிகைகள்