அடேங்கப்பா…நம்ம உடலில் இவ்ளோ ரகசியம் இருக்கா?

மனித உடல் (Human Body) என்பது இரத்தம், தசை, நரம்புகள், எலும்புகள் போன்ற இழையங்களாலான பல உள்ளுறுப்புக்களை கொண்டது. இந்த மனித உடல் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு நம்பமுடியாத உண்மைகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதோ மனித உடல் பற்றி நம்பமுடியாத சில உண்மைகள்

மனிதனின் தூக்கம்: மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம் மனிதன் உட்காரும்போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

ரத்த நாளங்கள், செல்கள்: நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும். நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீற்றராக இருக்கும்.

ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும். நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

தசை: கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும். மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கால்கள்: காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும். கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும். மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.

கண்கள்: நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

மூளை: மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்கு செல்கிறது. நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும். மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

இறப்பு: மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள்- 31 நிமிடங்கள்

மூளை- 10 நிமிடங்கள்

கால்கள்- 4 மணிநேரம்

தசைகள்- 5 நாட்கள்

இதயம்- சில நிமிடங்கள்

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

நல்லிணக்கத்தை கேவலப்படுத்தி எதிர்காலத்துடன் விளையாடாதீர் – ஜனாதிபதி

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளை பெடரல் நல்லிணக்கமெனக் கூறும் சிலர் அதனைப் கேவலப்படுத்துகின்றனர்.

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாமென அவர்களைக் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ‘விங்ஸ் 2016 நம்பிக்கையின் சிறகசைப்பு’ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அனைத்து இலங்கையர்களும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய பொது நிகழ்ச்சி நிரலே இன்று நாட்டுக்கு தேவையானது.

நாட்டின் எதிர்காலம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் ஒவ்வொருவரின் அதிகாரம் மற்றுத் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் மூலம் மறைக்கப்படக் கூடாது.

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையின் தேவையை குறைத்து மதிப்பிடக்கூடாது. நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவதற்கு அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளை பெடரல் நல்லிணக்கமெனக் கூறும் சிலர் அதனை கேவலப்படுத்துகின்றனர்.

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாமென நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அதிகாரத்தைப் பெறுவதற்கு நாடு எஞ்சியிருக்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்துக்கான தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

பண்பாடு மற்றும் கலைகள் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கான முக்கியமான காரணிகளாகும். அனைத்து மக்கள் பிரிவுகளுக்கிடையிலும் ஒற்றுமை, ஒத்துழைப்பு, நட்புறவு கட்டியெழுப்பப்படுவதற்கு அது உந்துசக்தியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை கலைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் இலங்கை கெயார் நிறுவனம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் இந்த கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் ஒன்பது மாவட்டங்களிலிருந்து இளம் கலைஞர்கள் மற்றும் 200 இற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 21ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பமான இந்நிகழ்வு ஒக்டோபர் 23ஆம் திகதிவரை அங்கு நடைபெற்றது.

27, 28, 29 ஆகிய திகதிகளில் அம்பாறையிலும் நவம்பர் 7 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை கொழும்பிலும் நடைபெற்றது.

இதனோடிணைந்ததாக 11, 12, 13 ஆகிய திகதிகளில் கிறீன் பாத்தில் நெலும் பொக்குண மாவத்தையில் அனைத்து கலாசாரங்களுக்குமுரிய உணவு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற நிறைவு நிகழ்வோடு இணைந்ததாக அறிஞர்கள் மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோர் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களும் அறிஞர்களும் இந்நிறைவு நிகழ்வில் பங்குபற்றினார்கள்.nl22

மீண்டும் இணையத்தை கலக்கும் அழகான பெண்ணின் Dubsmash!

இப்படி இந்தியாவில் மட்டும் தான் நடக்கும் போல? அதிர்ச்சி வீடியோ!

பெற்றோர்கள் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கனுமா? ஈஸியான சில டிபஸ்!

பெற்றோர்கள் நம்முடைய காதலுக்கு எதிரிகள் இல்லை, தங்களின் குழந்தைகள் எவ்வளவு பெரிய பெண்ணாக இருந்தாலும், சிறு குழந்தைகளாகவே பார்ப்பார்கள்.

காதலை பற்றி பெற்றோர்களிடம் பேசும் போது மிக பொறுமையாகவும், அவர்களுக்கு புரியும் வகையிலும் எடுத்துக்கூற வேண்டும்.

காதலுக்கு பெற்றோர்களின் சம்மதம் வாங்க என்ன செய்ய வெண்டும்?

* பெற்றோர்களிடம் தங்களின் காதலனைப் பற்றியும், அவர் உங்களை எப்படியெல்லாம் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பதையும், இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.

* பெற்றோர்கள் தங்களின் காதலை கேட்டு கோபம் அடைந்தாலும், நீங்கள் பொறுமையாக இருந்து அவர்கள் சொல்வதை நன்றாக காது கொடுத்து கேட்க வேண்டும். இதனால் பெற்றோர்கள் உங்கள் காதலை பற்றி அவர்களின் மனதில் உள்ள எண்ணத்தை நன்கு புரிந்து கொண்டு, பின் அதற்கு ஏற்றவாறு பேச வேண்டும்.

* நம்முடைய காதலைப் பற்றி பெற்றோர்களிடம் சொல்லும் போது நாம் அதிக கோபம் அடையாமல் பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுத்து பேச வேண்டும். மேலும் உங்கள் சம்மதம் இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன், நீங்கள் என்னுடைய காதலுக்கு சம்மதம் சொல்லும் வரை நான் காத்திருப்பேன் என்று மிகவும் பணிவுடன் பெற்றோர்களிடம் நடந்துக் கொள்ள வேண்டும்.

* காதலை பெற்றோர்களிடம் சொல்லும் போது நாம் மிகவும் பொறுமையை கையாள வேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களின் காதலுக்கு மறுப்பு சொல்லி உங்களை அடித்தாலும், உங்களிடம் பேசாமல் இருந்தாலும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

* நாம் பெற்றோர்களிடம் காதலை சொல்லியதும் உடனே அவர்களிடம் சம்மதத்தை எதிர்பார்த்து அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது. ஏனெனில் நீங்கள் சரியான காதலனை தேர்வு செய்துள்ளீர்களா என்று அவர்கள் யோசிப்பதற்கு சிறிது நாட்கள் கொடுக்க வேண்டும்.

* நீங்கள் காதல் செய்யும் காதலன் எவ்வளவு முக்கியமோ அதேபோல் உங்களின் பெற்றோர்களும் முக்கியம் என்று நீங்கள் நினைப்பதை உங்களின் பெற்றோர்களுக்கு நன்றாக உணர்த்த வேண்டும்.

* பெற்றோர்கள் தங்களின் காதலுக்கு மறுப்பு கூறினால், நீங்கள் அதற்கு கோபம் அடைந்து பேசுவதை தவிர்த்து விட்டு, எதற்காக உங்களின் காதலுக்கு மறுப்பு கூறுகின்றார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு அதை பெற்றோர்களுக்கு பொறுமையாக புரிய வையுங்கள்.

வாழ்க்கையில் நமக்கு பிடித்தவரை நமது பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை விட நமக்கு பெரிய பாக்கியம் வேறு எதுவும் இருக்காது.

பெண்கள் தீண்டுவதால் ஆண்களுக்கு சிலிர்ப்பு ஏற்படுவது எதனால்?

ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் சிறு வயதில் இருந்தே ஒன்றாக சேர்ந்து தொட்டுப் பேசி சர்வ சாதரணமாக விளையாடுவார்கள்.

ஆனால் இளம் வயதில் உள்ள பெண்களின் விரல்கள் சாதரணமாக ஆண்களை தொடும் போது, ஒருவித சிலிர்ப்புகள் ஏற்படும்.

ஏனெனில் ஆண்கள் மற்றும் பெண்களின் இளம்பருவத்தில், அவர்களின் உடம்பில் உள்ள ஹார்மோன்கள் அவர்களின் உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

ஆண்களுக்கு ஏற்படும் இந்த உணர்வுகள் இயல்பாக இருந்தாலும், இதற்கான ஆய்வில் சில விளக்கங்கள் உள்ளது.

பெண்கள் தொடுவதால் ஆண்களுக்கு ஏன் சிலிர்ப்புகள் ஏற்படுகிறது என்பது குறித்து, ஆன்ரியாவில் உள்ள மெஸ் மாஸ்டர் பல்கலைக்கழகத்தில், டேனியல் என்ற ஆய்வாளர் ஆராய்ச்சி செய்த போது, சில சுவாரஸ்யமான தகவல்களை அவர் கண்டுபிடுத்துள்ளார்.

டேனியல் செய்த ஆராய்ச்சியில், கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி, ஒரு பெண்ணை அழைத்து, சில ஆண்களை தொட செய்தார். அப்போது அந்த பெண் தொட்ட அனைத்து ஆண்களுக்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது என்று கூறினார்கள்.

இந்த ஆராய்ச்சியில், ஒருசில ஆண்களுக்கு கூச்சம் அதிகமாகி அவர்களின் உடம்பில் உள்ள ரோமங்கள் எழுந்து நின்றது.

உடனே டேனியல் ஆய்வாளர் அப்படி பெண்களின் கைகளை என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறது என்று மேலும் ஆராய்ச்சி செய்த போது, பெண்களின் நுனி விரல்களில் அந்த ரகசியம் மறைந்திருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

பெண்களின் விரல்கள் மற்றும் பாதங்கள் ஆண்களை விட மென்மையாகவும், குட்டையாகவும் மற்றும் கவர்ச்சியாகவும் இருப்பதால், பெண்கள், ஆண்களை தீண்டும் போது, சிலிர்ப்பை ஏற்படுத்த காரணமாக உள்ளது என்று கூறுகிறார்.

இந்த ஆய்வில், ஈடுபடுத்தப்பட்ட ஆண்களிடம் கேட்ட போது, அவர்களில் சிலர், பெண்கள் தீண்டுவதால் ஒருவித சிலிர்ப்புகள் ஏற்பட்டு அவர்களுடன் உறவில் ஈடுபட தோன்றுவதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

யப்பா என்னவொரு நடனம்டா சாமி…. இதுவரை பார்த்திருக்கவே மாட்டீங்க!…

சபர்ணாவை காதலித்து ஏமாற்றிய காதலன் இவர்தானா? திடுக்கிடும் தகவல்!

நடிகை சபர்ணாவை காதலித்து ஏமாற்றிய நபர் குறித்து பெற்றோர் மற்றும் நடிகையின் ஆண் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர், 1வது பிரதான சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நடிகை சபர்ணா உடல் அழுகிய நிலையில்  போலீசார் கண்டுபிடித்தனர். வளர்ந்து வரும் நடிகையான சபர்ணா சினிமாவில் வாய்ப்பு கேட்டு வடமாநிலத்திற்கும் சென்றுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு  முன்பு சினிமா துறையை சேர்ந்த ஆண் நண்பருடன் வாய்ப்பு கேட்டு வடமாநிலங்களில் பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளார். அப்போது சபர்ணாவுக்கும், அவருக்கும்  காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற இருவரும் ஓரே ஓட்டலில் அறை எடுத்து தங்கி படப்படிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், சபர்ணாவின் தோழிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற நடவடிக்கையை சபர்ணாவின் பெற்றோர் கடுமையாக கண்டித்தததால் தான் கடந்த ஓராண்டாக அவர் மதுரவாயலில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 மகளான சபர்ணாவின் நடவடிக்கையில் அதிர்ச்சி  அடைந்த பெற்றோரும் அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருந்து வந்தது தெரியவந்தது. இதற்கிடையே, சபர்ணா காதலித்ததாக கூறும் நபர்  திடீரென சபர்ணாவிடம் இருந்து விலக ஆரம்பித்ததாகவும், அதனால் கடந்த ஒரு மாதமாக சபர்ணா எந்தவித படப்படிப்புக்கும் செல்லாமல் அவர் வீட்டின்  அறையிலேயே முடங்கி இருந்ததாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, சபர்ணா காலை 10 மணிக்கே வெளியில் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு திரும்புவார் எனவும் அப்பகுதி வாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதற்கிடையே சபர்ணா காதலித்ததாக கூறப்படும் நபரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

 இதற்காக சபர்ணாவின் ஆண்  நண்பர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். அழுகிய நிலையில் சபர்ணா உடல் கைப்பற்றப்பட்டதால் பல்வேறு சந்தேகங்கள் ஏழுந்துள்ளது. மேலும், ஒருவர்  தற்கொலை செய்யும் போது நிர்வாண நிலையில் இருக்க வாய்ப்பு குறைவு. அதேநேரத்தில் சபர்ணா இடது கை மணிக்கட்டு அறுக்கப்பட்டுள்ளது.

வீட்டிலும் சந்தேகம்படும் படியான தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனால் சபர்ணா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகளவில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் சபர்ணா கையை அறுத்து கொண்டு தற்கொலை தான் செய்து கொண்டதாக வழக்கை முடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

காதலுக்காக பெற்றோரை பிரிந்து ஓராண்டாக தனியாக வசித்து வந்த சபர்ணா. தற்கொலை  செய்து கொள்ளும் அளவுக்கு பலவினமானவர் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர். எனவே சபர்ணாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தற்கொலையா?  அல்லது கொலையா என தெரியவரும்.

உங்களுக்கு ஏன் வாய் துர்நாற்றம் அடிக்கிறது? கண்டுபிடிப்பது எப்படி?…

பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மைக் காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், உணவுக் குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள் ஆகும்.

சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருப்பதைக் காட்டிலும், நம் வாயிலிருந்து வரும் நாற்றம்கூடக் காரணமாக இருக்கலாம்.

இதிலும், மார்க்கெட்டிங் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது வாயை துர்நாற்றமடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு ஏன் வாய் துர்நாற்றம் அடிக்கிறது என்பதை எப்படி அறிவது?

கலர் டெஸ்ட்

பின்க் நிறம் – பின்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு வாய் துர்நாற்றம் அடிக்க வாய்ப்புகள் இல்லை.

மஞ்சள் / வெள்ளை – பாக்டீரியா தாக்கம் இருந்தால் தான் நாக்கில் மஞ்சள் / வெள்ளை படிமம் படரும். இதனால் தான் வாய் துர்நாற்றம் அதிகரிக்கும்.

ஸ்பூன் டெஸ்ட்

ஸ்பூன் டெஸ்ட் என்பது தான் சரியாக கண்டறிய உதவும். ஸ்பூன் அல்லது டங் கிளீனர் பயன்படுத்தி நாக்கை சுத்தம் செய்து, அதில் வரும் வாசத்தை வைத்தே உங்களுக்கு எவ்வளவு வாய் துர்நாற்றம் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள்:

* புதினாச் சாறு அல்லது எழுமிச்சை சாறு போன்றவற்றை கொப்பளிப்பது, அல்லது, புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு தோல் போன்றவற்றை மெல்லுவதால் வாய் துர்நாற்றம் போக்கலாம்.

* தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் வாய் துர்நாற்றம் சரியாகும்.

* அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

* சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை( Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

* குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

நியூசிலாந்து பூகம்பத்தில் சிக்கி உயிர் பிழைக்க போராட்டம்: உருக வைக்கும் காட்சி!

நியூசிலாந்தில் இடம்பெற்ற பூகம்பத்தில் உயிர்தப்பிய மூன்று மாடுகள் சிறிய தீவில் சிக்கி உயிருக்கு போராடி வரும் சம்பவம் வீடியோவாக வெளியாகி உருக வைத்துள்ளது.

நியூசிலாந்தில் இடம்பெற்ற 7.8 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பயங்கர சேதங்கள் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Kaikoura அருகே உள்ள பகுதியில் பூகம்பத்தில் உயிர்பிழைத்த 2 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி சிறிய தீவில் சிக்கி உயிருக்கு போராடி வருவது ஹெலிகாப்டர் வழியாக கண்டறியப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் போது மாடுகள் சுற்றியிருந்த புல்வெளி நிலங்கள் சுமார் 20 அடி ஆழம் சரிந்துள்ளது. மாடுகள் நின்றுக்கொண்டிருந்த இடம் மட்டும் சரியாமல் அப்படியே இருந்துள்ளது.

இதனால், மாடுகள் உயிர் பிழைத்திருந்தாலும் மூன்றும் அங்கிருந்து நகர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றது.

மாடுகள் கூட்டமாக இருந்ததா? மாட்டின் உரிமையாளர் யார் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், அதிகாரிகள் மூன்று உயிர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடுவது ஏன்?

இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது அவ்வை வாக்கு. திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்றனர். திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஹைலைட். மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர்.

திருமாங்கல்ய கயிறில் மூன்று முடிச்சு இடுவது தான் தாலிகட்டுதல். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இப்படி மூன்று முடிச்சுக்குள் எத்தனையோ காரண முடிச்சுகள் உள்ளன.

இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக போடப்படுவது முதல் முடிச்சு. முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு. பெற்றோர்கள், திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக கட்டப்படுவது மூன்றாம் முடிச்சு. அறம், பொருள், இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது. கணவன், மூத்தோன், இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க மூன்று முடிச்சு.

அம்பிகையின் மகிமையைப் போற்றும் லலிதா சகஸ்ர நாமத்தில், காமேச பந்த மாங்கல்ய சூத்ர சோபிதா கந்தரா என்று அம்பிகை போற்றப்படுகிறாள். சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்யச்சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள் என்பது இதன் பொருள்.

ஆயிரமாயிரம் ஆபரணங்களை அணிந்தாலும் அம்பிகைக்கு அழகு சேர்ப்பது மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறு தான். ஆதிசங்கரர், சவுந்தர்யலஹரியில் அம்பாளின் திருமாங்கல்ய மகிமையைப் போற்றுகிறார். எத்தனை நகை அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.

லசந்த கொலை வழக்கு நீதவானுக்கு இடமாற்றம்

நீதித்துறையில் பணியாற்றும் 70 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த 70 நீதிபதிகளில் மிக முக்கிய நீதிபதியான சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வரும் கல்கிஸ்ஸை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். சஹாப்டீன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த, இடமாற்றம் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி அமுல்படுத்தப்படும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் ஆர்.பி.டி.பி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இடமாற்றத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருப்பின் இந்த மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் செய்வது ஏன்?

தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு.

அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது.

அன்னத்தை தெய்வம் என்பார்கள். சிதம்பரம் தில்லைச் சிற்றம்பலத்தில் ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் அன்ன அபிஷேகம் நடை பெறுகிறது. இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. இதே போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் தினமும் அன்ன அபிஷேகம் செய்து நம் ஊர்களை எல்லாம் வளமுள்ளதாக்குவோம்.

அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.

சோத்துக்குள்ளே சொக்கநாதர் :

வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால், ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.

நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் ஓடாது

தனியார் பேருந்துகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், வாகனங்களுக்கான குறைந்தபட்ச அபராத தொகை 2,500 ரூபாவாக உயர்த்தப்பட்டதை எதிர்த்தே இந்த சேவை புறக்கணிப்பு போராட்டம் நடாத்தப்படுகிறது.

தனியார் பஸ் சேவையினரால், இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கவுள்ள குறித்த சேவை புறக்கணிப்பானது, கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தொடரும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து விஷால் திடீர் நீக்கம்

நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தயாரிப்பாளர் விஷால் கடந்த 17.08.2016 அன்று ஆனந்த விகடன் இதழில் அளித்த பேட்டி சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது. மேலும் இதுபோல் தொடர்ந்து அவர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்துகொண்டதை குறிப்பிட்டு, அவருக்கு கடந்த 02.09.2016 அன்று தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில் 12.11.2016 அன்று நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில் திருப்தியாக அமையாத பட்சத்தில் செயற்குழு கூடடத்தில் எடுத்த தீர்மானத்தின்படி சங்க விதி எண் 14D-யில் உள்ளபடி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் விஷாலை சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் (14.11.2016) தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சம் என்பது மடமையடா வெற்றிக்கு நான் காரணமல்ல: சிம்பு – வீடியோ உள்ளே

சிம்பு நடிப்பில் பல்வேறு தடைகளுக்கு பிறகு வெளிவந்திருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மஞ்சிமா மோகன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிம்பு, இன்று சென்னையில் ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில் இப்படத்தை பார்த்துள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு சிம்பு பேசும்போது, ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று காத்திருந்தேன். தற்போது அவர்களுடன் சேர்ந்து பார்த்தது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இந்த நேரத்தில் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த கவுதம் மேனனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது நாட்டில் நிலவும் பணப்பிரச்சினைகளையும் மீறி படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த வெற்றிக்கு காரணம் நிச்சயமாக நாங்கள் இல்லை. ரசிகர்கள்தான் காரணம். இந்த வெற்றி என்னுடையது கிடையாது. இது மக்களுடைய வெற்றி. இந்த தருணத்திலும் அனைவரும் வந்து படம் பார்ப்பது மனதை உருக்கிவிட்டது. ஏ.ஆர்.ரகுமான் சார் என்னுடைய படம் என்பதையும் தாண்டி, இந்த படத்தில் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சதீஷுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு இருந்தது.

கிளைமாக்ஸை பார்க்கும்போது, எப்படி இருக்கப்போகிறது என்று எனக்கே பயமாக இருந்தது. அதை பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பார்க்காதவர்கள் தியேட்டரில் சென்று பார்த்தால் தெரியும். இந்த நேரத்தில் இறைவனுக்குத்தான் எல்லா நன்றிகளையும் சொல்லவேண்டும். அவர் இல்லையென்றால் நாமெல்லாம் இல்லை. சிறப்பு என்று சொல்லி முடித்தார்.

சிம்புவுடன் அவர் தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் சக நடிகர் மஹத் மற்றும் சிம்புவின் நண்பர் ஒருவரும் உடன் சென்றனர்.

பஸ் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்

மஹியங்கனை பிரதான பாதையில் 18 வளைவுகள் உள்ள இடத்தில் பஸ் வண்டி ஒன்று விபத்திற்குள்ளாகியதில் 11 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கண்டி பிரதேசத்தில் உள்ள மரண வீடு ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் தெஹிஅத்தகண்டிய பிரதேசத்திற்கு கண்டி- மஹியங்கனை வீதியில் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

மேற்படி பஸ் வண்டி, கண்டி மஹியங்களை வீதியில் 18 வலைவுப் பகுதில் வைத்து பாதையைவிட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்து. அதில் பயனித்த 11 பேர் காயமடைந்து ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் வித்தில் காயமடைந்தவர்களுல் பஸ் வண்டியின் சாரதியும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர்களில் இருவரை மேலதிக சிகிச்சைக்காக மஹியங்களை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்தனர்.

பல மில்லியன் மக்கள் பார்த்து ரசித்த கல்யாணப் பெண்ணின் டான்ஸ்! வீடியோ

சிங்கம் 3 யை மரண கலாய் கலாய்க்கும் விஜயகாந்த்! செம காமெடி வீடியோ

இணையத்தை கலக்கும் இரண்டு பெண்களின் நடனம் சுவாரசிய வீடியோ !