கோலாகலமாக நடந்த நடிகை அமலாபாலின் சீமந்தம்

அமலாபால்
நீலத்தாமரா எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அப்படத்தை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவருக்கு மைனா படம் பெரிய ரீச் கொடுத்தது.

அதன்பின் தெய்வத்திருமகள், தலைவா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

தலைவா படத்தின் போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டார்கள், பின் சில பிரச்சனையால் விவாகரத்து பெற்றார்கள்.

சீமந்தம்
நடிகை அமலாபால் கடந்த வருடம் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபாலுக்கு மிகவும் சிம்பிளான முறையில் சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரே வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

அயன் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது இவர் தானாம்!

அயன்
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் அயன். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் ஜெகன், பிரபு, ஆகாஷ்தீப், கருணாஸ், பொன்வண்ணன் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

மாபெரும் அளவில் வெற்றிபெற்ற இப்படம் இன்று வரை சூர்யாவின் கேரியரில் முக்கியமான டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது.

யார் தெரியுமா?
அயன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இப்படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் தான். ஆகாஷ்தீப் நடித்திருந்த அந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது, கோலங்கள் சீரியலில் ‘ஆதி’ கதாபாத்திரத்தில் நடித்த அஜய் கபூர் தானாம்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஜய் கபூர், கேவி ஆனந்த்துடைய தந்தை அயன் படத்தில் வில்லனாக நடிக்க என்னை பரிந்துரை செய்தார். அப்போது கோலங்கள் சீரியலில் நடித்துவந்தேன். டேட் கொடுக்க முடியாத காரணத்தால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று அஜய் கபூர் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிறந்த திரைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவருடைய படங்கள் பிரமாண்டம், சமூக கருத்துக்கள், காதல் என எல்லாமே சரி அளவில் இருக்கும்.

தற்போது இவருடைய இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

ஜென்டில்மென்
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 -ம் ஆண்டு ஜென்டில்மென் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் மதுபாலா ஹீரோயினாக நடித்திருப்பார். மேலும் முக்கியமான ரோலில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஜென்டல்மென் படம் வெளியாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல்வன்
நடிகர் அர்ஜுன் மற்றும் ரகுவரன் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் முதல்வன். ஒரு நாள் முதல்வன் என்ற கான்செப்டில் இவர் எடுத்த படம் பட்டி தொட்டி எங்கும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

இந்தியன்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்புக்களில் ஒன்றாக இருப்பது ஷங்கரின் இந்தியன் திரைப்படம். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் பல புதுவித தொழில்நுட்பங்கள் மூலம் படம் தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகிவருகிறது.

சிவாஜி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் 2007ல் வந்து பெரிய ஹிட் ஆன திரைப்படம் சிவாஜி. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது. ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து இருந்தனர். மேலும் வில்லன் ஆதிசேஷன் ரோலில் நடித்து சுமன் மிரட்டி இருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்களில் சிவாஜி படமும் ஒன்று.

எந்திரன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்த திரைப்படம் தான் எந்திரன். உலகளவில் தென்னிந்திய சினிமாவின் நிலையை காட்டிய படங்களில் எந்திரன் ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு எந்திரன் திரைப்படம் வெளியானது. இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பெண்மணி

அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரேணுகா ஜக்தியானி என்ற பெண்மணி இடம்பிடித்துள்ளார்.

2023 மே மாதம் கணவர் மிக்கி ஜக்தியாணி இறந்த பிறகு லேண்ட்மார்க் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவிக்கு ரேணுகா ஜக்தி தற்போது ரேணுகா ஜக்தியானி சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

மேலும், போர்ப்ஸ் பட்டியலில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து மேலும் 25 பேர் கோடீஸ்வரர்கள் ஆக இணைந்துள்ளனர். யானி வந்தார்.

2007-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது ரேணுகா ஜக்தியானி பெற்றுள்ளார்.

2012-ல் அரபு நாடுகளின் தொழில் கூட்டமைப்பின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதையும் பெற்றுள்ளார்.

மேலும், 2014-ல் உலக தொழில் முனைவோர் அமைப்பின் சிறந்த தொழில்முனைவோர் விருதையும் பெற்றுள்ளார்.

பாலாவின் திருமணத்தில் சிக்கல்!

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கி பாப்புலர் ஆனவர் KPY பாலா. அவர் விஜய் டிவியின் கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ஷோக்களில் பங்கேற்றவர்.

தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி படங்கள் மற்றும் youtube ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலா சமீப காலமாக தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் ஏழைகளுக்கு உதவ செலவிட்டு வருகிறார். சென்னை வெள்ளத்தில் தன்னிடம் இருந்த பணத்தை பிரித்து வீடு வீடாக சென்று கொடுத்தார்.

மேலும் மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, வறுமையில் இருப்பவருக்கு ஆட்டோ வாங்கி கொடுப்பது, பைக் வாங்கி கொடுப்பது என பல விஷயங்கள் செய்து வருகிறார்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கி பாப்புலர் ஆனவர் KPY பாலா. அவர் விஜய் டிவியின் கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ஷோக்களில் பங்கேற்றவர்.

தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி படங்கள் மற்றும் youtube ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலா சமீப காலமாக தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் ஏழைகளுக்கு உதவ செலவிட்டு வருகிறார். சென்னை வெள்ளத்தில் தன்னிடம் இருந்த பணத்தை பிரித்து வீடு வீடாக சென்று கொடுத்தார்.

மேலும் மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, வறுமையில் இருப்பவருக்கு ஆட்டோ வாங்கி கொடுப்பது, பைக் வாங்கி கொடுப்பது என பல விஷயங்கள் செய்து வருகிறார்.

தமிழ் பாடசாலை ஒன்றில் நிகழந்த விபரீதம் பாரிதாபமாக உயிரிழந்த மாணவன்

மஸ்கெலியாவில் உள்ள கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப் பயன்படும் கொங்கிரீட் குழாய்களை பாடசாலை வளாகத்தில் இறக்கி வைத்துள்ளனர்.

இதன்போது சில மாணவர்கள் குறித்த கொங்கிரீட் குழாய்கள் மீது ஏறி விளையாடியபோது குழாய் ஒன்று மாணவர் ஒருவர் மீது சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவர் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனருடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்!!

மஞ்சுமெல் பாய்ஸ்
சமீபகாலமாக மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி வெளியானது. இப்படம் கேரளா மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது.

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்கள் அங்கு சந்திக்கும் விபரீதத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்து இருக்கும்.

கூட்டணி?
கமல், ரஜினி, விக்ரம், சிம்பு எனப் பல பிரபலங்கள் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சிதம்பரமை பாராட்டியுள்ளனர்.

தற்போது இயக்குனர் சிதம்பரம் மலையாள படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்தவுடன் நடிகர் விக்ரம் உடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை பொறுத்து இருந்து பார்ப்போம்.

பாக்கியாவிடம் அசிங்கப்பட்ட கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா புதிதாக ரெஸ்டாரண்ட் தொடங்கிய நிலையில் அவருக்கு போட்டியாக கோபியும் ஒரு ஹோட்டல் திறந்து நடத்துகிறார்.

தனக்கு சமைக்க தெரியாது என்றாலும் செஃப் ஒருவரை வேலைக்கு வைத்து கொண்டு ஹோட்டல் நடத்துகிறார்.

அசிங்கப்பட்ட கோபி
தற்போது தான் செழியன் – ஜெனி பிரச்சனை முடிவுக்கு வந்து குடும்பத்தில் பெரிய சிக்கல் தீர்ந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கோபியின் ஹோட்டலில் ஒரு சிக்கல் வருகிறது.

செஃப் திடீரென லீவு போட்டுவிட்டதால் என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறார் கோபி. அது பற்றி அவரது அம்மாவிடம் சொல்ல, அவர் ஏற்பாடு செய்வதாக கூறி பாக்யாவிடம் இருந்து உணவு கொண்டு வர வைக்கிறார்.

‘சமைக்க தெரியலனா பரவாயில்லை, பிஸ்னஸ் தெரிந்தால் போதும் என வசனம் எல்லாம் பேசுனீங்க. இப்போ என்ன ஆச்சு’ என பாக்யா கோபியை அசிங்கப்படுத்தி கலாய்க்கிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோவில் அது காட்டப்பட்டு இருக்கிறது. இதோ..

 

கோடிகளில் சொத்து குவித்து வைத்திருக்கும் நடிகை சிம்ரன்

நடிகை சிம்ரன்
90ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், கமல் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்தார்.

பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்த 90ஸ் கதாநாயகியான சிம்ரன் 48 வயதிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சப்தம், வணங்காமுடி, அந்தகன் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன.

இவர் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் கூட சிம்ரனின் மகன்களின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

சொத்து மதிப்பு
இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நடிகையாக பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நாயகி சிம்ரனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை சிம்ரனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 20 கோடிக்கும் மேல் இருக்குமாம். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி ஹோட்டல் பிசினஸ் ஒன்றை செய்து வருகிறார். கிழக்கு கடற்கரை சாலையும் கோட்கா பை சிம்ரன் எனும் ஹோட்டல் ஒன்றை நடத்தி கொண்டிருக்கும் நடிகை சிம்ரன், இந்த ஹோட்டல் மூலம் லட்ச கணக்கில் லாபம் ஈட்டி வருவதாக சொல்லாடுகிறது.

மீண்டும் சினிமாவிற்கு வரும் வனிதா மகன்

நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனிதா
பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா. சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானா இவர், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அங்கு ரம்யாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலால் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த ஜோடிகளுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆனால் இவர்கள் கடந்த 2005ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அடுத்தடுத்து குடும்பவாழ்க்கை, பொதுவெளி என சர்ச்சையில் சிக்கும் வனிதா, எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து தனது வேலையை செய்து வருகின்றார்.

சினிமாவின் எண்ட்ரியாகும் மகன்
வனிதா தனது மகன் ஸ்ரீஹரி தன்னுடன் அனுப்பப்கோரி நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் ஆகாஷ் உடன் தான் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.

பின்பு ஆகாஷ் உடன் வளர்ந்து வரும் ஸ்ரீஹரி சில மாதங்களுக்கு முன்பு குறும்படம் ஒன்றில் நடித்திருந்தார். தற்போது இவர் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் மாமா அருண் விஜய் போன்றும், துருவ் விக்ரம்

போன்று இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஸ்ரீஹரி பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிள்ளைகளுக்கு உணவு வழங்க இயலாமையால் விபரீத முடிவெடுத்த தந்தை!

அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம பகுதியில் தந்தை ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

தனது 2 பிள்ளைகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் கல்வியை வழங்க முடியாத நிலையில் இந்த குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

இதேவேளை, அன்றாடம் உணவு இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமான மனவிரக்தியில் இருந்த தந்தை விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த குடும்பம் எந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் எந்த உதவியும் பெறவில்லை என தெரியவந்துள்ளது.

அம்பாறையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டர்கள்

அம்பாறையில் தற்போது 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு 4500 ரூபாவிற்கு வர்த்தகர்கள் தான்தோன்றித்தனமாக நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர்.

மேலும், அம்பாறையில் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை வர்த்தகர்கள் நுகர்வோரிடம் இருந்து பெற்றுக்கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த செயற்பாட்டை நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை (01-04-2024) நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் போதை மாத்திரைகளை விற்றவர்கள் கைது!

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் ஆன யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இனைந்து நடத்திய சுற்று வளைப்பில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் கைது செய்துள்ளனர் .
இவர்களுடைய வயது 18,19,20,21,நிரம்பியவர்கள் ஆகும் நிறைய காலமாக ஒரு வலயமைப்புக்குள் இருந்து பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பொழுது இன்று சென் பற்றீஸ் பாடசாலை அருகாமையில் வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இருவரை கைது செய்து யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினருடன் இனைந்து விசாரனையை மேற்கொண்ட பொழுது குறித்த கைது இடம்பெற்றது.
ஒருவர் ஆட்டோவில் வியாபாரம் செய்யும் பொழுது மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இணைந்து பொழுது நாவாந்துறை சந்தியில் ஆட்வோவை.விட்டு விட்டு ஓடும் பொழுது
300 போதை மாத்திரகைளுடன் கைது செய்தார்கள் மேலதிக விசாரனை
களை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் முற்படுத்தபடுவார்கள்.

பொலிசாரிடம் உண்மையை சொன்ன ஈஸ்வரி கதையில் திடீர் திருப்பம்

எதிர்நீச்சல் சீரியலில் வெண்பா தனது தந்தையை நினைத்து கவலைப்பட்டு கொள்ளும் நிலையில், ஈஸ்வரி பொலிஸ் அதிகாரியிடம் உண்மையை உடைத்துள்ளார்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

ஈஸ்வரி உடைத்த உண்மை
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் அவரது மகள் வெண்பா ஈஸ்வரியிடம் கேட்டு வருகின்றார்.

மேலும் ஈஸ்வரி தர்ஷினி அப்பா என்று அழைப்பது ஜீவானந்தத்தினை என்று கூறி உண்மையை உடைத்துள்ளார். சற்று விறுவிறுப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்த குறித்த சீரியல் தற்போது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

திடீரென ஆன்மீகத்தில் மூழ்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதல் திருமணம் செய்த நிலையில் 2022ல் திடீரென விவாகரத்தை அறிவித்தனர். 18 வருடம் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென பிரிந்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பின் இயக்கிய லால் சலாம் படம் இந்த வருட தொடக்கத்தில் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆன்மீகத்தில் மூழ்கிய ஐஸ்வர்யா
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முழுமையாக ஆன்மீகத்தில் மூழ்கி இருக்கிறார். அவர் ஓம் நமச்சிவாய என பேப்பரில் பல நூறு முறை எழுதி இருக்கிறார். அதை அவரே இஸ்ட்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.

இப்போது குண்டாக இருக்கும் தாமு இளவயதில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா?

செப் தாமு
இந்தியாவில் இருக்கும் பிரபல சமையல் கலைஞர்களில் ஒருவர் தான் தாமு என்கிற கோதண்டராமன் தாமதோரன்.

40 வருடங்களுக்கும் அதிகமாக உணவு வழங்கல் துறையில் அனுபவம் பெற்றிருக்கும் தாமு 20 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு 26 புத்தகங்களும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கான சமையல் புத்தகங்களும் எழுதியுள்ளார்.

இப்படி சமையலில் பல சாதனைகளை செய்துள்ள தாமு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்தார்.

வைரல் போட்டோ
இப்போது குக் வித் கோமாளி அடுத்த சீசனிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங். தாமு இடம்பெறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் செப் தாமு தான் இளம் வயதில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இப்போது குண்டாக இருக்கும் தாமு இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க,

 

View this post on Instagram

 

A post shared by Damodaran Kothandaraman (@chef_damu)

பிதாமகன் பட நடிகர் திடீர் மரணம்!

பிதாமகன், உன்னை நினைத்து போன்ற பல படங்களில் நடித்து இருந்தவர் காமெடி நடிகர் விஸ்வேஷ்வர ராவ். அவர் தமிழ், தெலுங்கு என மொத்தம் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறாராம்.

குழந்தை நட்சத்திரம், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார் விஸ்வேஷ்வர ராவ்.

தற்போது 62 வயதாகும் அவர் சென்னை சிறுசேரி பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் வசித்து வந்தார்.

மரணம்
இந்நிலையில் இன்று காலை விஸ்வேஷ்வர ராவ் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

அவரது உடல் சினிமா துறையினர் அஞ்சலிக்காக சிறுசேரியில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

காசா சிறுவர்களுக்கு இலங்கை அரசிடம் இருந்து நிதி உதவி!

காசாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

இதற்கான காசோலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹேர் ஹம்தல்லாஹ் ஸைதிடம் (Dr. Zuhair Hamdallah Zaid ) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதிபர் அலுவலகத்தில் இன்று(01) நடைபெற்ற காசோலை கையளிக்கும் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry), அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake), வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன (Aruni Wijewardane) மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன தூதரக சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காசா சிறுவர் நிதியத்திற்காக
ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் காசா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு பெருமளவிலான நன்கொடையாளர்கள் ஏற்கனவே நிதியுதவி அளித்திருந்தனர்.

அத்துடன், இவ்வருடம் இப்தார் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்துக்கு வழங்குமாறு அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, முதற்கட்டமாக காசா சிறுவர் நிதியத்திற்காக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பலஸ்தீன அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அத்துடன், “காசா சிறுவர் நிதியத்திற்கு” (Children of Gaza Fund) பங்களிக்குமாறு நன்கொடையாளர்களிடம்அதிபர் அலுவலகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி கிடைத்துள்ளதுடன், அந்த நிதி எதிர்வரும் நாட்களில் பலஸ்தீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

நிதியத்திற்கு பங்களிக்க வாய்ப்பு
இதேவேளை நன்கொடையாளர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மாத்திரமே இந்த நிதியத்திற்கு பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்குப் பங்களிக்க விரும்புவோர் தமது நன்கொடைகளை இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையின் 7040016 எனும் கணக்கு இலக்கத்தில் வைப்பிலிட முடியும்.

அதற்கான பற்றுச் சீட்டை 077-9730396 எனும் எண்ணுக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்புமாறு அதிபர் அலுவலகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் கடைசி படம் இப்படி தான் இருக்குமாம்

விஜய்
அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் விஜய் தன்னுடைய திரை பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். Goat படத்தில் தற்போது நடித்து வரும் விஜய், தன்னுடைய கடைசி திரைப்படமாக தளபதி 69 இருக்கும் என கூறியுள்ளார்.

ஆனால், இந்த கடைசி படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. சமீபத்தில் வந்த தகவலின்படி, தளபதி 69 அதாவது விஜய்யின் கடைசி படத்தை முன்னணி இயக்குனர் ஹெச். வினோத் தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது.

அரசியலுக்கு செல்லும் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், தளபதி 69 கண்டிப்பாக ஒரு அரசியல் கதைக்களம் கொண்ட திரைப்படமாக தான் இருக்கும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.

இப்படி தான் இருக்கும்
இந்த நிலையில், விஜய்யுடன் படம் பண்ணால் எப்படிப்பட்ட படத்தை இயக்குவீர்கள், கதைக்களம் என்னவாக இருக்கும் என ஹெச். வினோத் இடம் கேள்வி எழுப்பியபோது, “எனக்கு அரசியல் தான். விஜய்யை வைத்து அரசியல் படம் பண்ணவேண்டும் என்பது தான் எனக்கு ஆசை. நான் அவருக்கு சொன்ன கதைகள் அனைத்திலும் அரசியல் இருக்கிறது” என கூறியுள்ளார்.

இந்த தகவலை பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹெச். வினோத் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட நடிகர்

எஸ்.கே 23
சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே 23 ஆகிய இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இருக்கும் சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இந்த இரு திரைப்படங்களும் இதுவரை நாம் பார்த்த சிவகார்த்திகேயனின் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய் பட வில்லன்
இந்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் தான் கமிட்டாகி இருக்கிறார் என பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படத்திலும் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தமிழில் வெளிவந்த பில்லா 2 மற்றும் அஞ்சான் போன்ற திரைப்படங்களிலும் வித்யூத் ஜம்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.