காசா சிறுவர்களுக்கு இலங்கை அரசிடம் இருந்து நிதி உதவி!

காசாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

இதற்கான காசோலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹேர் ஹம்தல்லாஹ் ஸைதிடம் (Dr. Zuhair Hamdallah Zaid ) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதிபர் அலுவலகத்தில் இன்று(01) நடைபெற்ற காசோலை கையளிக்கும் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry), அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake), வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன (Aruni Wijewardane) மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன தூதரக சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காசா சிறுவர் நிதியத்திற்காக
ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் காசா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு பெருமளவிலான நன்கொடையாளர்கள் ஏற்கனவே நிதியுதவி அளித்திருந்தனர்.

அத்துடன், இவ்வருடம் இப்தார் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்துக்கு வழங்குமாறு அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, முதற்கட்டமாக காசா சிறுவர் நிதியத்திற்காக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பலஸ்தீன அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அத்துடன், “காசா சிறுவர் நிதியத்திற்கு” (Children of Gaza Fund) பங்களிக்குமாறு நன்கொடையாளர்களிடம்அதிபர் அலுவலகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி கிடைத்துள்ளதுடன், அந்த நிதி எதிர்வரும் நாட்களில் பலஸ்தீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

நிதியத்திற்கு பங்களிக்க வாய்ப்பு
இதேவேளை நன்கொடையாளர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மாத்திரமே இந்த நிதியத்திற்கு பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்குப் பங்களிக்க விரும்புவோர் தமது நன்கொடைகளை இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையின் 7040016 எனும் கணக்கு இலக்கத்தில் வைப்பிலிட முடியும்.

அதற்கான பற்றுச் சீட்டை 077-9730396 எனும் எண்ணுக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்புமாறு அதிபர் அலுவலகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் கடைசி படம் இப்படி தான் இருக்குமாம்

விஜய்
அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் விஜய் தன்னுடைய திரை பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். Goat படத்தில் தற்போது நடித்து வரும் விஜய், தன்னுடைய கடைசி திரைப்படமாக தளபதி 69 இருக்கும் என கூறியுள்ளார்.

ஆனால், இந்த கடைசி படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. சமீபத்தில் வந்த தகவலின்படி, தளபதி 69 அதாவது விஜய்யின் கடைசி படத்தை முன்னணி இயக்குனர் ஹெச். வினோத் தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது.

அரசியலுக்கு செல்லும் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், தளபதி 69 கண்டிப்பாக ஒரு அரசியல் கதைக்களம் கொண்ட திரைப்படமாக தான் இருக்கும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.

இப்படி தான் இருக்கும்
இந்த நிலையில், விஜய்யுடன் படம் பண்ணால் எப்படிப்பட்ட படத்தை இயக்குவீர்கள், கதைக்களம் என்னவாக இருக்கும் என ஹெச். வினோத் இடம் கேள்வி எழுப்பியபோது, “எனக்கு அரசியல் தான். விஜய்யை வைத்து அரசியல் படம் பண்ணவேண்டும் என்பது தான் எனக்கு ஆசை. நான் அவருக்கு சொன்ன கதைகள் அனைத்திலும் அரசியல் இருக்கிறது” என கூறியுள்ளார்.

இந்த தகவலை பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹெச். வினோத் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட நடிகர்

எஸ்.கே 23
சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே 23 ஆகிய இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இருக்கும் சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இந்த இரு திரைப்படங்களும் இதுவரை நாம் பார்த்த சிவகார்த்திகேயனின் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய் பட வில்லன்
இந்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் தான் கமிட்டாகி இருக்கிறார் என பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படத்திலும் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தமிழில் வெளிவந்த பில்லா 2 மற்றும் அஞ்சான் போன்ற திரைப்படங்களிலும் வித்யூத் ஜம்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சரண்யாவிற்கு கொலை மிரட்டல்!

சரண்யா பொன்வண்ணன்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன். அம்மா கதாபாத்திரம் என்றாலே ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் இவர் தான்.

நாயகன், கருத்தம்மா, அஞ்சலி, பசுபொன் போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை மிரட்டல்
இந்நிலையில், நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாருடன் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. நடந்த இந்த தகராறில் சரண்யா பொன்வண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதன்படி தற்போது சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொந்தமாக சொகுசு கார் வாங்கிய VJ அர்ச்சனா

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் அர்ச்சனா. அவர் டிவி நிகழ்ச்சிகள், பேட்டிகள், விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவரது மகள் ஸாரா உடன் சேர்ந்து சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.

டிவி தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா அந்த வேலையை ஒருகட்டத்தில் உதறிவிட்டு பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்றார். ஆனால் அதனால் அவருக்கு நெகடிவ் ட்ரோல்கள் தான் அதிகம் வந்தது.

புது கார்
தற்போது அர்ச்சனா தனது மகள் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கூட்டி சென்று சொகுசு கார் வாங்கி இருக்கிறார்.

Mercedes-Benz GLC ரக காரை அவர் சுமார் ஒரு கோடி ருபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். இதற்காக 25 வருடம் உழைத்ததாக அவர் கூறி இருக்கிறார்.

மேலும் புது கார் வாங்கிய நிலையில் எமோஷ்னலாக அர்ச்சனா கண்ணீர் விட்டு கதற, மற்ற குடும்பத்தினரும் அழுது இருக்கின்றனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகும் நீதி அமைச்சர்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தமக்கு பல கோரிக்கைகள் வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகா சங்கரத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் தன்னிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அது குறித்து அனைத்து தரப்பினருடனும் ஏற்கனவே பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான தீர்மானத்தை எடுக்க தயார்
அதன்படி எதிர்காலத்தில் அதற்கான பொருத்தமான தீர்மானத்தை எடுக்க தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகளை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள 25.55 லட்சம் மக்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி !

இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இந்திய காசநோய் அறிக்கையின்படி,இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.,

“கடந்த ஆண்டு இந்தியாவில் 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

25.55 லட்சம் பேருக்கு காசநோய்
1960-ஆம் ஆண்டுகளில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக 25.55 லட்சம் பேருக்கு மேல் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழப்பு வீதம்
25.5 லட்சம் பேரில் 8.4 லட்சத்துக்கும் அதிகமானோர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தனியார் மருத்துவமனைகள் மூலம் தெரியவந்தது.

காசநோயால் உயிரிழப்போரின் விகிதம் 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 18 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு இந்திய காசநோய் 2023 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகனின் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தந்தை!

ஹாலிஎல – கல உட பகுதியில் மகனின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 53 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாய்த்தர்க்கம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில்,தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட தந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் தமிழகத்தில் தஞ்சம் கோரும் இலங்கையர்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்குபேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி மணல் திட்டில் தரையிறங்கிய இவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி போதைப்பொருட்களின் பயன்பாடு
பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த போதைப்பொருட்களின் பயன்பாடு காரணமாக தமது பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் தஞ்சமடைந்ததாக இவர்கள் தமிழக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

அரச ஊழியர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!

பிரதேச செயலாளர் உட்பட பல பதவிகளுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர (Janaka Vakumpura) தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பதவிகளுக்கான கொடுப்பனவு
பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த, மேலதிக கொடுப்பனவுகளை இம்மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் ஆண்டில் உயர்வடைந்த விஜய்யின் சம்பளம்

நடிகர் விஜய்யின் சம்பளம் கடந்த இரண்டு ஆண்டில் அதிகரித்துள்ளதால், அவரது சொத்து மதிப்பும் மளமளவென ஏறியுள்ளது.

நடிகை விஜய்
தமிழ் சினிமாவில் தனது தந்தையின் படத்தில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சி மாண்புமிகு மாணவன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக்கினார்.

பின்பு தந்தை இயக்கத்தில் வரிசையாக சில படங்களில் நடித்த விஜய், ரசிகர்களின் விருப்பத்தினை தெரிந்து கொண்டு அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.

நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் கலக்கிய விஜய் அனைத்து தரப்பினரையும் ரசிகராக்கினார். மாஸ்டர் படத்தில் விஜய்யின் சம்பளம் 100 கோடியாக இருந்த நிலையில் பீஸ்ட் படத்திற்கு 120 கோடி ஆக்கினார்.

கடைசியாக இவர் நடித்த லியோ படத்திற்கு 150 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். மேலும் தற்போது உருவாகி வரும் கோட் படத்திற்கு 200 கோடி சம்பளமாக பெறுகின்றார்.

சூப்பர் சிங்கர் சிவாங்கிக்கு திருமணமா?

சூப்பர் சிங்கர் சிவாங்கி வெளியிட்டுள்ள பதிவு தற்போது திருமணம் செய்ய தயாராகிவிட்டாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சிவாங்கி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் சிவாங்கி. இந்நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமான இவருக்கு தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாகவும் கலக்கினார்.

குறித்த நிகழ்ச்சியின் 2வது சீசனில் சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயனுடன், பணியாற்ற ஆசைப்படுவதாக கூறிய சிவாங்கிக்கு, உடனே டான் படத்தின் மூலம் சினிமாவில் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார். பின்பு பல படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்துள்ளது.

பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக் ஆகவும் மாறி தனது சமையல் திறமையினை காட்டி அசத்தினார்.

வைரலாகும் சிவாங்கியின் பதிவு
திரைப்படங்களில் நடிப்பது, பாடல் பாடுவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிசியாக இருந்து வரும் நிலையில், இவரது பதிவு ஒன்று திருமண வதந்தியை கிளப்பியுள்ளது

அதாவது இவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் சமூக ஊடகங்களை திறந்தாளே திருமணம், நிச்சயதார்த்தம், கர்ப்பமாக இருக்கும் செய்திகள் இருக்கின்றன. நான் தற்போது அந்த கட்டத்தில் தான் இருக்கின்றேனா என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை காரணமாக எடுத்துக் கொண்ட ரசிகர்கள் சிவாங்கி திருமணம் போகின்றாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

கதிரிடம் வசமாக சிக்கிய உமையாள்!அடுத்து நிகழப் போவது என்ன?

எதிர்நீச்சல் சீரியலில் கதிர் திட்டம் ஒன்றை போன்று உடையாளை தவிக்க விடடுள்ளார்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

உடையாளை தவிக்க விட்ட கதிர்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது.

தர்ஷினிக்கு உமையாளின் மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ள நிலையில், கதிர் மற்றும் சக்தி மாஸ்டர் பிளான் ஒன்றினை போட்டு தட்டித் தூக்கியுள்ளனர்.

கடைசியாக மாப்பிள்ளையை கடத்தியது போன்று தெரிகின்றது. ஆனால் நந்தினிக்கு இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆக மொத்தம் உமையாளின் மகன் ஜனனியின் தங்கையை திருமணம் செய்வாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

சர்ச்சை பட இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி.

கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும், 96 இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி சர்தார் 2 திரைப்படமும் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது. இந்த நிலையில், கார்த்தியின் மற்றொரு புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சை பட இயக்குனருடன் கூட்டணி
அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சர்ச்சை இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி, கார்த்தியுடன் இணையப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி தற்போது ஒரு படத்தில் பணிபுரிந்து வருகிறாராம்.

இப்படத்திற்கு பின் கார்த்தி படத்தை இயக்கப்போவதாக அவரே சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அனிமல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கிய இயக்குனருடன் கார்த்தி இணையப்போகிறாரா என தற்போதே பலரும் கேட்டு வருகிறார்கள். இந்த கூட்டணி அமைகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய்யின் 69வது படத்தின் இயக்குனர் இவர் தானா?

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக தனது படங்கள் மூலம் வசூல் ராஜ்ஜியம் செய்து வருபவர் விஜய்.

தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா ஏரியாக்களிலும் விஜய் கில்லி தான், எல்லா இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தும்.

தற்போது விஜய் அரசியலில் களமிறங்க இருப்பதால் அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்துவதாக கூறியது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தது.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபட இருப்பதால் மக்களும் ஹேப்பி தான். இப்போது வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது.

அடுத்த படம்
இன்னும் கோட் படமே முடியவில்லை, அதற்குள் விஜய்யின் 69வது படத்தின் இயக்குனர் யார் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் நிறைய பேசப்படுகிறது.

ஆனால் விஜய்யை கடைசியாக இயக்கப்போவது யார் என்பது இன்னும் சஸ்பென்ஸாக இருந்துவந்த நிலையில் எச் வினோத் உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

டேனியல் பாலாஜிக்கு என்ன நடந்தது!

டேனியல் பாலாஜி
தமிழ் சினிமாவில் பயங்கர வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் டேனியல் பாலாஜி.

கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

நேற்று (மார்ச் 29) இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறப்பு செய்தி கேள்விப்பட்டவுடன் வெற்றிமாறன், கௌதம் மேனன், அமீர் போன்ற பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

நண்பரின் பேச்சு
டேனியல் பாலாஜி கோவில் கட்ட தொடங்கிய பிறகு அதிகமாக பக்தியில் மூழ்கி விட்டார்.

உதவி என்று அவரிடம் யாரு வந்தாலும் அவர்களுக்கு அள்ளிக்கொடுப்பார். ஸ்கூல், காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு பீஸ் எல்லாம் கட்டியிருக்கிறார். ஏன் எனக்கே அவர்தான் பிசினஸ் தொடங்கி வைத்தார்.

படங்களில் நடிப்பதை தாண்டி ஆன்மீகத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார், அவருக்கு ஆன்மீகத்திலேயே தீட்சை பெற வேண்டும் என்பது தான் ஆசை. நேற்று அவருக்கு வலி ஏற்பட்ட போது அவருடன் ஒரே ஒருவர் மட்டும்தான் இருந்திருக்கிறார்.

அவர் தான் டேனியல் பாலாஜியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார். எங்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தவர் முடியாமல் இருந்தபோது நாங்கள் யாருமே பக்கத்தில் இல்லை, அவர் தனி ஆளாகத்தான் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

அந்த நேரத்தில் நாங்கள் கூட இல்லாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று எமோஷ்னலாக பேசியுள்ளார்.

மீனாவிற்கு இரண்டாவது திருமணமா?

நடிகை மீனா
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது, அப்படிபட்ட ஒரு நடிகை தான் மீனா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இவர் தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு வித்யாசாகர் உயிரிழந்தார், அவரது இழப்பில் இருந்து மீனா வெளியே வர பிரபலங்கள் பலரும் உதவினார்கள். தற்போது நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

மறுமணம்
நடிகையின் கணவர் இறந்ததில் இருந்து நடிகை மீனாவின் மறுமணம் குறித்து நிறைய தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது.

ஒரு சமயம் சினிமாவில் இல்லாத நடிகையின் நண்பர் என்றும் பிரபலத்தை தான் அவர் திருமணம் செய்கிறார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் நடிகை மீனா சமீபத்தில், சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொல்லுங்கள், அதுதான் நல்லது. நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள். தற்போதைக்கு எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போது எப்படி சொல்ல முடியும் என காட்டமாக பேசியுள்ளார்.

அடுத்த கலியாணம் எப்போ ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்த வனிதா

வனிதா விஜயகுமார்
பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் வனிதா விஜயகுமார்.

ஆரம்பத்தில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் சில படங்களிலேயே காணாமல் போனார்.

அதன்பிறகு திருமணம், குழந்தைகள் என பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி, பிக்பாஸ் கொண்டாட்டம் என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

இப்போது சொந்தமாக நிறைய தொழில்கள் தொடங்கி அதிலும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறார்.

ரசிகரின் கேள்வி
நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்ஸ்டா ஸ்டோரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார் வனிதா. அதில் ஒரு ரசிகர் அடுத்த கல்யாணம் எப்போது என கேட்க அவர் எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என பதில் கொடுத்துள்ளார்.

சதிவலையில் சிக்குவாரா முத்து வெளியாகிய ப்ரோமோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது வீட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மருமகள்கள் ரோகினி மற்றும் ஸ்ருதி ஆகியோரின் தாலி பிரித்து கோர்க்கும் விழா நடைபெற இருக்கிறது.

அதில் முத்துவுக்கு எதிராக பெரிய சதி திட்டம் ஒன்றை போடுகிறார் ரோகிணி. முத்துவை குடிக்கவைத்து எப்படியாவது தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என துடிக்கிறார்.

சதி திட்டம்
முத்துவை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டு பேரை அந்த விழாவுக்கு வர வைக்கிறார் ஸ்ருதியின் அம்மா. முத்து கோபத்தில் எதாவது செய்தால் அதை வைத்து ஸ்ருதியை தன் வீட்டுக்கு அழைத்து சென்று விட வேண்டும் என திட்டம் போடுகிறார் அவர் அம்மா.

முத்து இதில் சிக்குவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ப்ரோமோ இதோ..

 

தங்க நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (22) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 662,620 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,380 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 187,000 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,440 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,500 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,460 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 163,700 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.