தனுஷின் வருகையால் வருங்கால கணவனுடன் சண்டை போட்ட நடிகை த்ரிஷா..?

கடந்த ஜனவரி மாதம் நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அவ்வளவு தான், அதற்கு அப்புறம்…திருமணம் நின்றுபோனது.

நடிப்புக்கு தடை போட்டதால் திருமணம் நின்றது என்று த்ரிஷா தற்போது காரணத்தை சொல்லியுள்ளார்.

ஆனால், கோலிவுட்டில் எப்போதும் போல் தனுஷை இந்த விவகாரத்தில் இழுத்து வைத்து பேசுகிறார்கள். தனுஷே ஒரு கட்டத்துக்கு மேல் நம்ப ஆரம்பிக்கும் அளவுக்கு…அவர் தான் காரணம் என்று கோலிவுட் பாட்ஸிகள் பரப்புகின்றன.

தனுஷும், த்ரிஷாவும் நீண்ட கால நண்பர்கள்.தனுஷை நிச்சயதார்த்த பார்ட்டிக்கு அழைத்தாராம் த்ரிஷா. ஆனால் தனுஷை விழாவில் பார்த்த மாப்பிள்ளை த்ரிஷாவிடம் கடுப்பானாராம்.

‘என் நண்பர்களை எப்படி விட்டு தருவது ?” என்று இவர் கேட்க…அங்கு வந்த மாப்பிளை அப்பா ,’என்ன பிரச்சனை?” என்று கேட்க…”உங்க வேலை இது இல்லை” என்று த்ரிஷா கடுப்படிக்க…”எங்கப்பாவையே இப்படி பேசுறியா?ன்னு அங்க வெடிச்ச பிரச்சனை தான் …திருமணம் நின்னு போக காரணமாம்.

படுகவர்ச்சியாக ‘தமன’ நடிகை!

முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இன்னமும் இருந்து கொண்டிருக்கும் ‘தமன’ நடிகை, ‘ம்பு’ ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு மூன்றெழுத்து நடிகையும் இருக்கிறார். எந்த வகையிலும், அந்த மூன்றெழுத்து நடிகை கவனத்தை ஈர்த்து விடக்கூடாது என்பதில் ‘தமன’ நடிகை எச்சரிக்கையாக இருக்கிறாராம்.

இதற்காகவே அவர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் தோன்றுகிறாராம். ரசிகர்களுக்கு நல்ல வேட்டை!

இலங்கையின் பூர்விக வரலாறு! இதை படித்தால் தமிழர் யார் என்று புரியும்!

01.உலக மொழிகளில் ஆதிமொழி தமிழ் .இதை ஆங்கிலேயர்களே ஆராட்சி மூலம் நிறுவியும் ஏற்றும் கொண்டுள்ளனர்.ஆகவே ஆதிக்குடியினம் தமிழினம் .தமிழன் தான் ஒரு நாட்டில் முதலில் குடியேறுவான் .

02. சிங்களவரின் தமது வரலாற்றை மகாவம்சத்தை வைத்தே நிறுவுகின்றனர் .இது மகாநாம தேரர் என்னும் பௌத்த பிக்குவினால் அதுவும் பாளி மொழியில் கி.பி. 5 ம் நூற்றாண்டில் எழுதினார் .இதில் உண்மைகள் கற்பனைகளுக்கு மேலே தூவப்பட்டிருக்கின்றன .

03.மகாவம்சத்தின்படி படி கி.மு.543 இல் இன்றைய பெங்கார் ,ஒடிஷா மாநில பகுதிகளிலிருந்து ஒரு சிறிய நாட்டின் அடங்காத கடடாக்காலி இளவரசனை அவனது தந்தை 700 நண்பர்களுடன் சேர்த்து நாடு கடத்தினார் .

04.அந்த பாய்மரக்கப்பல் நாகதீப என்றழைக்கப்படும் இன்றைய இலங்கையை வந்தடைந்தது .-மகாவம்சம்

05.அந்த இளைஞன் விஜயன் ,குவேனி என்னும் நாக இளவரசியை மணந்தாள் -இவர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்

மகாவம்சம் மறைக்க முற்பட்டு முடியாமல் போன தமிழர் கதை ……………

01.மஹாவம்சப்படி …….வியஜன் இலங்கைக்கு வந்த பொது மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் யார் ?
* பழந்தமிழ் பேசிய திராவிடர்கள் .

02.இயக்கர் நாகர் வேடர் என மூன்றின மக்கள் விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் திராவிடர்கள் .அவர்கள் பேசிய மொழி என்ன ?
* அவர்கள் ஒருவகை பழந்தமிழை பேசினார்கள் .

03.1956 ம் ஆண்டு விஜயன் இலங்கையில் கால் பதித்த2000 ம் ஆண்டை நினைவு கூற இலங்கை ஒரு தபால் தலையை வெளியிட்ட்து .பின்னர் அது உடனே திரும்பப்பெறப்படாது ஏன் ?
*தமது மூதாதையன் என கொண்டாடும் வியஜன் இலங்கையின் பூர்விக குடிமகன் இல்லை என்பதால் …அந்த முத்திரை வெளியீடு அதை தாமே ஒப்புக்கொள்ளவைத்தாய் இருக்கும் என்பதால்…

இன்னும் தெளிவாக அறிய ……இந்த வீடியோவை கேளுங்கள்

கின்னஸ் சாதனை படைத்த தமிழன்

போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஒரே நாளில் 10,975 கிலோ பொருட்களை சேகரித்து தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி(52) கடந்த 1992-ம் ஆண்டு முதல் துபாயில் ஆடிட்டராகப் பணி புரிந்து வருகிறார். ஆடிட்டராகப் பணி புரிந்தாலும் சமூக சேவையில் கிருஷ்ணமூர்த்திக்கு அதிக அக்கறையுண்டு. இதற்காக அனைவருக்கும் கல்வி என்ற அறக்கட்டளை ஒன்றை கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 10,975 கிலோ கல்வி உபகரணப் பொருட்களை ஒரே நாளில் சேகரித்துக் கொடுத்ததற்காக கிருஷ்ணமூர்த்தியின் பெயர் உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கடந்த மாதத்தில் கிருஷ்ணமூர்த்தி சிரியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரே நாளில் 50,000 ஆயிரம் நோட்டுப் புத்தகங்கள், 3 லட்சம் பென்சில்கள், 2000 ஆயிரம் ஸ்கூல் பேக்குகள் உட்பட 10,975 கிலோ எடையுள்ள பொருட்களைத் திரட்டினார். இதற்காக அவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி திரட்டிக் கொடுத்த பொருட்களை எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட அகதிக் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யவுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் 2015-ம் ஆண்டு சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் 4,571 கிலோ பொருட்களை திரட்டிக் கொடுத்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.

அமெரிக்கர்கள், இலங்கையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்!

Waving flag of Sri Lanka and USA

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட, இலங்கையை அமெரிக்கா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது, எவரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச சுமுகமான அதிகார கைமாற்றத்தை உறுதிப்படுத்தினார்.

ஆனால், அமெரிக்காவில் அண்மைய அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர்கள், டொனால்ட் ட்ரம்பை அதிபராக ஏற்க முடியாது என்று தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இலங்கையில் 2015 அதிபர் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக முன்னரே, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சுமுகமாக அதிகாரத்தை கைமாற்றுவது குறித்து மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தினார்.

மகிந்தவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் புரட்சியில் ஈடுபட்டு சிறிசேன அதிகாரத்துக்கு வருவதை தடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

எனினும் எந்த புரட்சியும் இடம்பெறவில்லை. ராஜபக்ச தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு, பதவியை விட்டு விலகிச் சென்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை முன்கூட்டியே கணித்த ஆற்காடு பஞ்சாங்கம்

சேலம்:

கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சுனாமி தாக்கியதை ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்து வெளியிட்டு இருந்தது.

கடந்த மார்ச் மாதம் துர்முகி வரு‌ஷத்திய ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வமுகூர்த்த பஞ்சாங்கத்தை ஆற்காட்டை சேர்ந்த ஜோதிடர் கே.என்.நாராயணமூர்த்தி கணித்து வெளியிட்டு இருந்தார். இதில் தமிழ்நாட்டில் ஆளும்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்று கூறி இருந்தார்.

அதன்படி ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் அமைத்தது.

இந்த பஞ்சாங்கத்தில் கருப்பு பண நடவடிக்கை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அது தற்போது உண்மையாகி விட்டது. கருப்பு பண நடவடிக்கை குறித்து ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘‘வங்கிகளில் புதிய மாற்றம் ஏற்படும். கணக்கில் இல்லாத கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நேரும். தணிக்கை துறையின் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடிக்கணக்கில் பணம் சேரும்படியான யோகம் உண்டு” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கோடிக்கணக்கில் இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கணக்கு காட்டி அரசாங்கத்தில் வரி கட்டுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. கருப்பு பணம் கணக்கில் வரக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது.

மேலும் பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதையும் இந்த பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணித்து வெளியிடப்பட்டு உள்ளது.

அதாவது எல்லையில் அந்நியநாடு அடிக்கடி தாக்குதல் நடத்தும் என்று ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது தற்போது உண்மையாகி உள்ளது.

சைனஸிலிருந்து விடுபட….

பொன்னாங்கண்ணீக் கீரை , கொத்தமல்லிக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து , அத்துடன் சுக்கு , திப்பிலி. பூண்டு சேர்த்து கஷாயம் வைத்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் சைனஸ் தீரும்

கருஞ்சீரகம் ,.சுக்கு , தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் தொல்லை தீரும்.

ஒமத்தை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் சைனஸ் எனப்படும் பீனிச நோய் குணமாகும்.

மத்திய வங்கியை தனியார்மயப்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவர்!- மஹிந்த ராஜபக்ச

மத்திய வங்கியை தனியார் மயப்படுத்தினால் நிதி முறைமையே வீழச்சியடைந்து விடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

மத்திய வங்கியினால் ஆற்றப்படும் பணிகள் வெளித் தரப்புக்களுக்கு வழங்கப்படுது தேசிய குற்றமாகும்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மத்திய வங்கியை தனியார் மயப்படுத்த எடுத்துள்ள தீர்மானம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மத்திய வங்கி தனியார் மயப்படுத்துவது நிறுத்தப்படுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

இவ்வாறு தனியார் மயப்படுத்தப்படுவதனால் பாரியளவு கொள்ளைகள் இடம்பெறக்கூடும்.

நாட்டின் முழு நிதி முறைமையும் வீழ்ச்சியடைவதுடன் நிதி முறைமை குறித்த நம்பிக்கையும் வீழ்ச்சியடையும்.

மத்திய வங்கியின் மீதான நம்பிக்கை காரணமாகவே நாம் மத்திய வங்கியுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றோம்.

எமது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கிக்கு ஸ்திரமான ஓர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

மத்திய வங்கியின் நிதிச் சபை விவகாரத்தில் தலையீடு செய்ததில்லை.எனினும் இன்று நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளது.

மத்திய வங்கி தனியார் மயப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த மக்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களும் பாதிப்புக்கு உள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கி விவசாயி பலி : மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விவசாயி ஒருவர் நேற்று மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பலியானதுடன் மற்றுமொரு விவசாயி காயமடைந்துள்ள நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள மல்லாவிப்பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த  திருநகர் மல்லாவியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (வயது- 62) என்ற விவசாயியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவரது சடலம் மல்லாவி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அவருடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மற்றுமொரு விவசாயியான வளநகர் மல்லாவியைச் சேர்ந்த செல்லையா வசந்தகுமார் (வயது 55) என்பவர் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டாரா பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டார்?… வெட்டவெளிச்சமான ரகசியம்!..

அலட்டல் இல்லாத ஸ்டைல், அதிரடியான நடிப்பால் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கவைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவரது நடிப்பினை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் என்றால், இவரது ஸ்டைலை ரசிப்பதற்காகவே பல கோடி கூட்டம் இருக்கும். ரீல் வாழ்க்கையில் வெற்றிகரமான நட்சத்திரமாய் ஜொலிக்கும் ரஜினிகாந்த், தனது ரியல் வாழ்க்கையிலும் வெற்றிகரமான மனிதர்தான்.

1978 ஆம் ஆண்டுகளில் முன்னிலை நடிகராய் இருந்த ரஜினிகாந்த், தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டது ஒரு சுவாரசிய காதல் கதைதான்.

எத்திரராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த லதாவிற்கு தனது கல்லூரியின் சார்பில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அது, முன்னணி நடிகரான ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான்.

தில்லு முல்லு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தபோதுதான், லதா அவரை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.

பேட்டியின் போது பல்வேறு கேள்விகளை லதா கேட்டுள்ளார். இது ரஜினிகாந்திற்கு பிடித்துள்ளது. பேட்டியின் போதே தனது காதலை சொல்லாத ரஜினி, நேரடியாக என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? என கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத லதா, நான் எனது வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ரஜினியின் சொந்த வாழ்க்கை பற்றி அறிய ஆரம்பித்துள்ளார் லதா. சிறு வயதில் அம்மாவை இழந்த ரஜினி, பல தடைகளை தாண்டிதான் சினிமாவில் வெற்றிபெற்றுள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக சூட்டிங் சென்றுவந்த காரணத்தால் ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்சனையில் இருந்து விடுபட்டால், தான் மொட்டை அடித்துக்கொள்கிறேன் என நேர்த்திவைத்துக்கொண்டார் லதா.

அதன்படியே மீண்டு வந்த ரஜினிக்காக, லதா மொட்டை அடித்துக்கொண்டார். இதற்கிடையில் தான் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன், லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா? என்ற ஒரே கேள்வியால் லதாவை திணறடித்த ரஜினி, 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் வைத்து லதாவை திருமணம் செய்துக் கொண்டார்.

 

சஸ்பெண்ட் செய்த தயாரிப்பாளர் சங்கத்தை கலாய்த்த விஷால்

தயாரிபாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.\

இந்த சஸ்பென்சனுக்கு விஷால் தரப்பில் இருந்து என்ன ரியாக்ஷன் வரும் என திரையுலகம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் சற்று முன்விஷால் தனது டுவிட்டரில் கூறியதாவது:

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை சஸ்பெண்ட் செய்த செய்தியை கேள்விப்பட்டேன். குழந்தைகள் தின வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிரான என்னுடைய நடவடிக்கை தொடரும்’ என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் சஸ்பென்ஸ் நடவடிக்கை குழந்தைத்தனமானது என்று விஷால் கலாய்த்துள்ளது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

வீட்டு ஒன்றின் புறாக்கூட்டுக்குள் மறைந்து இருந்த மிகப் பெரிய நாக பாம்பு!!

யாழ்ப்பாணம் வில்லூன்றி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் பெரிய நாக பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலுள்ள புறாக்கூட்டுக்குள் இருந்தே இந்த பெரிய நாக பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமந்தாவின் திருமண தேதி அறிவிப்பு

கோலிவுட், டோலிவுட் இரண்டிலும் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா, நாகார்ஜூனன் மகன் நாக சைதன்யாவை காதலித்து வருவது தெரிந்ததே. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திருமணம் நடைபெறும் மாதத்தை அறிவித்துள்ளனர்.

நாகசைதன்யாவின் சகோதரர் அகில் திருமணம் வரும் மே மாதமும், நாகசைதன்யா-சமந்தா திருமணம் வரும் ஆகஸ்ட் மாதமும் நடைபெறும் என்று இருவீட்டார் அறிவித்துள்ளனர். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சமந்தா கிறிஸ்துவர் என்பதால் முதலில் கிறிஸ்துவ முறைப்படியும் பின்னர் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெறும் என்றும் இந்த திருமணத்திற்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த அனைவரும் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பொலிஸாரின் சீருடையில் கமரா பொருத்துவது குறித்து யோசனை

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் சீருடையில் குரல்களையும் காட்சிகளையும் பதிவு செய்யக் கூடிய வகையில் கமரா பொருத்துவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்றும், நேற்று முன்தினமும் அம்பாந்தோட்டை ஷங்கரீலா ஹோட்டலில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வரையறுக்கும் நோக்கில், சீருடையில் கமராக்களை பொருத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த செயலமர்வில் வரவு செலவுத் திட்ட யோசனையை அமுல்படுத்த சில குழுக்கள் நியமிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனினும், இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு நயன்தாராவுக்கு கிப்ட் கொடுக்கும் தயாரிப்பாளர்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கலெக்டராக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை மிஞ்சூர் கோபி இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் வெகுவிரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 17ஆம் தேதி நள்ளிரவு 12மணிக்கு டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பு  நயன்தாராவுக்கு கொடுக்கும் பிறந்த நாள் கிப்ட் ஆக கருதப்படுவதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தண்ணீர் பிரச்சனை குறித்த கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நொடிப்பொழுதில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பரபரப்பான காட்சி….

நியூஸிலாந்தில் ஏற்பட்டுள்ள முதல் நிலநடுக்கத்தால் இரண்டு பேர் பலியாகிய சில மணி நேரங்களில், அந்நாட்டின் தெற்கு தீவு ஒன்றில் 6.1 என்ற அளவில் மற்றொரு பலமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

இந்த இரண்டாவது நிலநடுக்கத்தின் மையப்புள்ளி நியூஸிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச் நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளதாக நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நியூஸிலாந்தின் தெற்கு தீவில் உள்ள இதே பகுதியில், 7.8 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் இந்த இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. நிலநடுக்கத்துக்கு பின்னர் ஏற்படும் மறு நிலவதிர்வுகள் தொடர்வதால் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

நொடிப்பொழுதில் நிலநடுக்கம் ஏற்படுவதையும், பாரிய கட்டிடம் இடிந்து விழும் காட்சி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவிக்கும் 3 மாடுகளின் காட்சியும் இதோ…

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்

முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழங்களில் பலவகைகள் உண்டு. எல்லாவகை வாழைப்பழங்களிலும் பலவகை சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம், இதை ஏழைகளின் கனி என்றும் கூறுவார்கள்.

பூவன் வாழைப்பழம்

பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் பழம். இது ஜீரண சக்தியை உண்டாக்கும். தினமும் உணவிற்குப்பின் பூவன் வாழைப் பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாகாது.

பச்சை வாழைப்பழம்

பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும். கோடைக் காலங்களில் தாராளமாக உண்ணலாம். வாத நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

மொந்தன் வாழைப்பழம்

மொந்தன் வாழைப்பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். காமாலைக்கு இது சிறந்த பழம்.

ரஸ்தாளி வாழைப்பழம்

ரஸ்தாளிப் பழம் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணக்கூடிய பழம். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. இப்பழத்தை தினமும் உண்டு வந்தால் இருதயம் பலப்படும்.

நேந்திரம் வாழைப்பழம்

நேந்திரம் பழம் என அழைக்கப்படும் வாழைப் பழம் கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தில் ஒன்றும், முட்டை ஒன்றும் உண்டுவர, காசநோய் விலகி உடல் புஷ்டிக்கும். சிறு குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திற்கு மேல் நன்றாகப் பழுத்த நேந்திர பழத்தை சிறிது உப்பிட்டு, வேகவைத்து நன்றாக பிசைந்து தரலாம். இது நல்ல ஊட்டச் சத்தாகும். ஜீரணிக்க சற்று நேரமாகும் என்பதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது.

செவ்வாழைப்பழம்

செவ்வாழைப் பழம் கேரளா மற்றும் குமரி மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். இவ்வகைப் பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும், வைட்டமின் A அதிகம் உள்ளதால் கண்ணுக்கு பலம் தரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தோல் வியாதிகளையும் குணப்படுத்தும். அதிகம் பேதி கண்டவர்கள் இப்பழத்தை பொரிகடலையுடன் சேர்த்து உண்டால் பேதி நிற்கும். ஏதாவது ஒரு வாழைப் பழத்தை தினமும் உணவிற்குப் பின் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்.

ஜெயலலிதாவின் குரலில் கலக்கும் கலக்கப்போவது யாரு கலைஞன்!

மக்கள் பிரார்த்தனையால் நான் மறு பிறவி எடுத்துள்ளேன். உங்களுடைய பேரன்பு இருக்கையில் எனக்கு என்ன குறை. விரைவில் முழுமையான நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கிறேன் என நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்தபடி அறிக்கை மூலமாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நவின் என்ற கலைஞன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குரலில் அருமையாக பேசி அசத்தியுள்ளார்.

இந்த குரல் அதிமுக மற்றும் பொதுமக்களிடையே பேசப்பட்டும் சமூக ஊடகங்களில் பிரபலமாக பரவியும் வருகிறது

கைகோர்த்து நடந்த காதல் ஜோடி: காதலனுக்கு நடந்த விபரீத சம்பவம்!

சுவிட்சர்லாந்தில் சாலையை கடந்த காதல் ஜோடி மீது கார் மோதி நடந்த விபத்தில் காதலன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜூரா மாகாணத்தில் நேற்று நடுஇரவில் ஒரு இளம் காதல் ஜோடி ஒன்று மறுமுனையில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு செல்ல சாலையை கடந்தனர்.

அப்போது சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று இருவர் மீது பலமாக மோதி விட்டு சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட காதலன் பலத்த காயமடைந்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு மருத்துவரும், ஆம்புலன்ஸ் வாகனமும் அனுப்பி வைக்கப்பட்டது.

இருப்பினும் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய காதலி சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உயிரிழந்த வாலிபருக்கு 21 வயதே இருப்பதாகவும், காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான கார் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மனைவியை நிர்வாண ஊர்வலம் போக செய்த கணவர். டுவிட்டரில் வெளிவந்த வீடியோவால் பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் வாழும் கிராமத்தில் கட்டிய மனைவியை கணவரே நிர்வாண ஊர்வலம் போக செய்தது மட்டுமின்றி அதை வீடியோ எடுத்து டுவிட்டரில் பரவவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் மேக்லகாளி கிராமத்தில் உள்ள ஒரு பெண், தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவே இல்லை. இதுகுறித்து கணவர் விசாரித்த போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த இன்னொரு நபரை தனது மனைவி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது உறவினர்களுடன் சென்று மனைவியையும், அவர் புதியதாக திருமணம் செய்த நபரையும் தனது ஊருக்கு அழைத்து வந்து நிர்வாண ஊர்வலம் போக வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.