வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்யும் வரலக்ஷ்மி சரத்குமார்

வரலக்ஷ்மி
சரத்குமாரின் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை தான் வரலக்ஷ்மி திருமணம் செய்துகொள்ள போகிறார்.

நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து இந்த நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் வெளிவந்து வைரலான நிலையில், நேற்று தனது நிச்சயதார்தத்தின் வீடியோவை வரலக்ஷ்மி வெளியிட்டிருந்தார்.

ஜான்வி கபூருடன் கைக்கோர்க்கும் வாரிசு நடிகர்!!

ஜான்வி கபூர்
90 களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூரும் தற்போது பிரபல நடிகையாக உலா வருகின்றார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த இவர், என்.டி.ஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

யார் தெரியுமா?
இதனை அடுத்து ஜான்வி கபூர், ராம்சரண் நடிப்பில் உருவாகவுள்ள ஆர்சி 16 திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். ஜான்வி கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே இந்த சூப்பரான பரிசு அவருக்கு கிடைத்திருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து இவர் சூர்யாவின் கர்ணன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 இப்படி தான் இருக்கும்!!

ராஷ்மிகா மந்தனா
அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து. மேலும் இப்படம் ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் படம் பிரமாண்டமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அப்டேட்
சமீபத்தில் ஜப்பான் சென்ற ராஷ்மிகா மந்தனா, அங்கு அளித்த பேட்டியில் ‘புஷ்பா 2’ திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், “புஷ்பா 2 திரைப்படம் மிகவும் மிகப்பெரியதாக இருக்கும். இப்போது படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்துள்ளது. இந்தியா சென்றதும் புஷ்பா 2 படத்தின் பாடல் காட்சியில் நடிக்கவிருக்கிறேன்”. “இப்படத்தில் புஷ்பாவுக்கு மனைவியாக நடிப்பதால் சில பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறது. புஷ்பா 2 வில் அதிக டிராமா மோதல்களும் இருக்கும்” என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

சிம்புவின் இடத்தை பிடித்துக் கொண்ட விஷ்ணுவிஷால்

நடிகர் சிம்பு வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து இருந்தார். அப்போது கொரோனா குமார் என்ற படத்திற்காகவும் ஒப்பந்தம் போடப்பட்டு சிம்புவுக்கு ஒரு பெரிய தொகை அட்வான்ஸாக வழங்கப்பட்டது.

ஆனால் சிம்பு அந்த படத்தில் நடிக்கவும் வரவில்லை, அட்வான்ஸ் தொகையையும் திருப்பி தரவில்லை என வேல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

சிம்புவுக்கு பதில் இவர்
இந்நிலையில் சிம்புவை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக விஷ்ணு விஷாலை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட புகழ் இயக்குனர் கோகுல் தான் இந்த படத்தை இயக்குகிறார். அவர் இயக்கத்தில் சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படத்தை தயாரித்தும் வேல்ஸ் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலுக்காக ஏங்கும் தொகுப்பாளினி பிரியங்கா

தொகுப்பாளினி பிரியங்காவிற்கு அறிமுகமே தேவையில்லை. சின்னத்திரையின் மூலம் நம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் ஆவார்.

இதுவரை மகிழ்ச்சியான பிரியங்காவை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா, தனது சோகமான பக்கத்தை பற்றியும் பேசினார்.

காதலுக்காக ஏங்கும் பிரியங்கா
இதில், தனது தம்பியின் மகள் தான் தன்னுடைய உலகம் என்றும். தங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியதே அவள் தான் என்றும் கூறி கண்கலங்கினார். அவள் அம்புக்காக தான் நான் ஏங்குகிறேன், அது போன்ற காதலை மட்டும் எனக்கு தாருங்கள். மற்ற அனைத்தையும் நான் தருகிறேன், வேறு எதுவுமே எனக்கு வேண்டாம். அவளுக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன், அத்தை எனும் உறவை தாண்டி அவள் மீது அதிக அன்பு வைத்து இருக்கிறேன்” என கூறினார் பிரியங்கா.

நிறைய குழந்தைகள் பெத்துக்கணும்
இதன்பின் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா “நீ நினைத்தபடி உன்னை உருகி உருகி காதலிக்கும் ஒருத்தர் உன் வாழ்க்கையில் நிச்சயம் வருவார்” என கூறினார். பின் ” நீ நிறைய குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் இதற்கான நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். உன் மகன், உன் மகளை நான் பார்க்க வேண்டும்” என அர்ச்சனா சொன்னவுடன், கண்கலங்கி அழுதார் பிரியங்கா.

முதல் முறையாக அன்புக்காக ஏங்கி பிரியங்கா பேசிய இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிரித்து நகைச்சுவையாக மட்டுமே பேசும் பிரியங்காவிற்கு இப்படியொரு ஒரு பக்கம் இருக்கிறதா என ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

துவாரகாவின் கணவர் நானே உரிமை கோரியுள்ள சுவிஸ்வாழ் தமிழர்

விடுதலைப்புலிகளின் தலைவர் மகள் துவாரகா என் மனைவி என சுவிஸ்வாழ் தமிழர் ஒருவர் உரிமை கோரியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தவருட மாவீரர் நாளில் பிரபாகரனின் மகள் நான் தான் என உரையாற்றிய காணொளி வெளியாகி இருந்தது.

எனினும் தலைவரின் மகள் துவாரகா அவர் அல்ல என கூறப்பட்ட நிலையில் தற்போது போலி துவாரகாவின் கணவர் நானே என குறித்த நபர் உரிமைகோரியுள்ள காணொளி வெளியாகி உள்ளது.

அத்துடன் அவர் உண்மையான துவாரகா இல்லை எனவும் போலி துவாரகாவை உரிமைகோரியுள்ள கணவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று (04) அதிகாலை தோராயமாக 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேலதிக சிகிச்சை
குறித்த இளைஞன் நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
மட்டக்களப்பு வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடிப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை

சமந்தா
முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். இதனால் படங்களில் நடிக்காமல் இருந்த சமந்தா, மீண்டும் கதைகள் கேட்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சமந்தாவின் புதிய படங்கள் அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி வரும் வெப் தொடர் சிட்டாடல். ஆங்கிலத்தில் உருவான இந்த வெப் தொடரின் இந்திய பதிப்பில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். வருண் தவான் சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். சமந்தா புதிதாக பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவித்ரா லட்சுமி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி. இவர் குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டார். இதன்பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். மேலும் சதீஸ் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடித்து வருகிறார். இளம் நடிகை பவித்ரா லட்சுமியை பார்க்க சமந்தா போலவே இருக்கிறார் என பலரும் கூறுவார்கள். அதை உறுதி செய்யும் வகையில் சமந்தா போலவே உடை அணிந்து ஒரு முறை பவித்ரா லட்சுமி புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த லுக்கில் அப்படியே சமந்தா போலவே இருக்கிறார் பவித்ரா லட்சுமி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

மருதநாயகம் படத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்

கமல் ஹாசன்
உலக சினிமாவே வியர்த்து பார்க்கும் அளவிற்கு பல திரைப்படங்களை கொடுத்தவர் கமல் ஹாசன். ஹே ராம், குணா, விஸ்வரூபம், மகாநதி போன்ற பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\

ஆனால், அவருடைய கனவு படமான மருதநாயகம் படத்தை இதுவரை அவரால் எடுக்க முடியாமல் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 25% சதவீதம் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு நின்றுபோனது. இதன்பின் தொடர் பிரச்சனைகள் காரணமாக இப்படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.

ஆனால், வேறு ஒரு ஹீரோவை வைத்து கண்டிப்பாக மருதநாயகம் படத்தை எடுப்பேன் என கமல் ஹாசன் கூறியுள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த சில காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். பிரம்மாண்டமாக இப்படத்தை அவர் அமைத்துள்ளார்.

மருதநாயகம் படத்தில் ரஜினிகாந்த்
இந்நிலையில், மருதநாயகம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்தாராம். ஆம், நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ரஜினிகாந்த் கேட்டுள்ளார். ஆனால், படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்துவிட்டதால், வேறு எந்த கதாபாத்திரமும் இல்லாத காரணத்தினால் ரஜினியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக சம்பளமே வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீயை சந்தித்த எம்.எஸ். தோனி..

அட்லீ
ஒரு முறையாவது இந்த இயக்குனரின் இயக்கத்தில் நாம் நடித்துவிட மாட்டோமா என நடிகர், நடிகைகள் ஏங்கும், ஒருசில இயக்குனர்களில் தற்போது அட்லீயும் இணைந்துள்ளார்.

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் பாலிவுட் கவனம் முழுவதும் அட்லீ மீது தான் திரும்பியுள்ளது. அம்பானி வீட்டு திருமணத்தில் தற்போது பங்கேற்றுள்ள அட்லீயை பார்த்து, பாலிவுட் நடிகர்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம் என ரன்வீர் சிங் கூறியிருந்தார்.

இவை அனைத்திற்கும் காரணம் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வெற்றி தான். ஆனால், இப்படத்திற்கு பின் அட்லீ யாரை இயக்கப்போகிறார் என இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஒரு பக்கம் அல்லு அர்ஜுன் படம் என கூறப்படுகிறது. மறுபக்கம் விஜய்யுடன் நான்காவது முறையாக அட்லீ இணையப்போகிறார் என்றும் தகவல் வெளியாகிறது.

தோனி – அட்லீ சந்திப்பு
இந்நிலையில், அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்டுள்ள அட்லீயை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனி சந்தித்துள்ளார்.

அப்போது அட்லீ – பிரியா மற்றும் தோனி – சாக்ஷி இரண்டு ஜோடியும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

அட்லீ – தோனி சந்திப்பு வீடியோ..

ஜஸ் கட்டியில் குளிக்கும் விஜய் பட நடிகை

காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சுனைனா. அதற்கு பிறகு மாசிலாமணி, சமர், வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் அவர்.

ஆரம்பகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வந்த நிலையில் போகப்போக வாய்ப்புகள் குறைந்ததால் குணச்சித்திர ரோல்களிலும் நடிக்க தொடங்கினார் சுனைனா. விஜய்யின் தெறி படத்திலும் ஒரு சின்ன ரோலில் அவர் நடித்து இருந்தார்.

ஐஸ் டப் குளியல்
நடிகை சுனைனா தற்போது ஒரு டப் முழுக்க ஐஸ் கட்டிகள் நிரப்பி அதில் குளித்து இருக்கிறார்.

அதன் புகைப்படங்களை சுனைனா வெளியிட்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sunainaa (@thesunainaa)

பிரபல நடிகையுடன் ஜோடி சேர ஆசைப்பட்ட ரஜினி மகள்!

ரஜினி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் இயக்குனர்களாக இருக்கிறார்கள்.

இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சௌந்தர்யா
அடுத்ததாக ரஜினியின் இளைய மகளும் புதிதாக படத்தை இயக்கப்போகிறாராம். இப்படத்திலும் ரஜினிகாந்த் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதற்கு முன் சிவகாசி, சண்டைக்கோழி போன்ற திரைப்படங்களில் Graphic designer ஆக பணியாற்றியுள்ளார். கோச்சடையான் படத்தை தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தையும் சௌதர்யா இயக்கினார்.

இந்த நடிகருடன் நடிக்க வேண்டும்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சௌந்தர்யா ரஜினிகாந்திடம் ‘நீங்கள் எந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்க விரும்புவீர்கள்’ என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சௌந்தர்யா ‘அஜித் சாறுடன் இணைந்து நடிப்பேன்’ என கூறினார். பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டியில் சௌந்தர்யா கூறிய விஷயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடையாளமே தெரியாமல் மாறிப்போன தலைநகரம் பட நடிகை!

சுந்தர் சியின் தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஜோதிர்மயி. அவர் நான் அவன் இல்லை, அறை எண் 305ல் கடவுள், பெரியார் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தமிழில் அவர் கடைசியாக நடித்து இருந்த படம் வெடிகுண்டு முருகேசன். அதற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இப்படி மாறிட்டாரே..
ஜோதிர்மயி மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது மலையாளத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார்.

ஜோதிர்மயி தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். முடி வெள்ளையாகி இப்படி மாறிட்டாரே என லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

கங்குவா படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கங்குவா
சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. மேலும் தற்போது படத்திற்காக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்க துவங்கிவிட்டனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் கண்டிப்பாக அருமையான பாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நாயகி திஷா பாட்னி நடித்து வருகிறார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் சம்பளம்
5 வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ள சூர்யா, கங்குவா படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் ரூ. 30 கோடி முதல், ரூ. 40 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள ஹீரோவை ஞாபகம் இருக்கா?

வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


இவர் தான்
அவர் வேறு யாரும் இல்லை டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் தான். ஆம், நடிகர் பிரஷாந்தின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வந்த ரசிகர்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

 

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரஷாந்த், அதன்பின் சற்று சறுக்கலை சந்தித்து தடுமாறி வருகிறார். மேலும் தற்போது விஜய்யின் Greatest Of All Time திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாக பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ஆனால், வெளிவரும் தேதி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை. இதை தவிர சில படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரஷாந்த் என கூறப்படுகிறது.

நடிகர் மாதவன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட நடிகை யார் தெரியுமா?

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் 2000 வருடத்தில் அலைபாயுதே படம் மூலமாக அறிமுகம் ஆனவர். சாக்லேட் பாயாக அந்த காலகட்டத்தில் வலம் வந்து இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்தார்.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்த அவர் இந்தியா முழுவதும் பாப்புலர் ஆன ஸ்டாராக இருந்து வருகிறார்.

திருமணம்
நடிகர் மாதவன் இளம் வயதில் இருந்தபோது ஹிந்தி நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்பினாராம். அவர் நடித்த படம் ஒன்றை பார்த்து அந்த ஆசை அவருக்கு வந்து இருக்கிறது.

ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்புவதாக தனது அம்மாவிடமும் மாதவன் கூறி இருக்கிறார். இதை சமீபத்திய பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.

இளம் வயதில் நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்

நடிகை ரம்யா கிருஷ்ணனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடிப்பில் மிரட்டி இருப்பார் அவர். அவரை தவிர வேறு யாராவது அந்த ரோலில் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்பது சந்தேகம் தான் என கூறும் அளவுக்கு ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு இருந்தது.

ரம்யா கிருஷ்ணன் 1985ல் நடிகையாக அறிமுகம் ஆகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர். தற்போது 53 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

நீச்சல் உடை போட்டோ
ரம்யா கிருஷ்ணன் அந்த காலத்தில் மிக கிளாமராகவும் படங்களில் நடித்து இருக்கிறார் என்கிற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சர்யமானதாக தான் இருக்கும்.

1989ல் வெளிவந்த Paila Pacheesu என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீச்சல் உடையிலும் தோன்றி இருக்கிறார். நடிகை டிஸ்கோ சாந்தி உடன் அவர் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ இதோ..

தலைமன்னார் சிறுமி கொலை விவகாரம் சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்புனவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது மீண்டும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி, கடந்த 16ஆம் திகதி காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

தாய், தந்தை, அம்மம்மா உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை
அதே கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கடந்த 19ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்துக்களின் புனித கங்கையில் பக்தர்கள் குளிக்க தடை!

இந்துக்களின் புனிதமாக ஆறாக கருதப்படும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பல மாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது.

கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

மேலும், ஒருநாளைக்கு 258 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் பாக்டீரியா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாந்தனின் உடலை நாட்டுக் கொண்டு வருவது தொடர்பில் வெளியகியுள்ள செய்தி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு நாட்டுக்கு திரும்பிவர காத்திருந்த சாந்தன் நேற்றையதினம் சென்னையில் உயிரிழந்தமை ஈழத்தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் சாந்தனின் உடலம் தாயகத்திற்கு இன்று எடுத்துச்செல்லப்படவு ள்ள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.

மகனை காண காத்திருக்கும் தாய்
எனினும் அந்த தகவலில் உண்மையில்லை என்றும், வெள்ளிக்கிழமை (மார்ச் 1) அதாவது நாளைய தினமே உடலை எடுத்துச் செல்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக உயிரிழந்த சாந்தனின் சகோதரர் மதிசுபா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

32 ஆண்கள் சிறாஇயில் இருந்த மகனை காண யாழ்ப்பாணத்தில் சாந்தனின் தாயார் ஆவலாக காத்திருந்த வேளை இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.