அடையாளமே தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு பட நடிகை

கமலினி முகர்ஜீ
கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் கமலின் பிளாஷ் பேக் காட்சியில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி. தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் வேட்டையாடு விளையாடு தான். இதற்கு முன் இந்தியில் வெளிவந்த Phir Milenge படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இவர் கடைசியாக தமிழில் வெளிவந்த இறைவி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த புலிமுருகன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் புகைப்படம்
இதன்பின் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காத நடிகை கமலினி முகர்ஜியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள நடிகை கமலினி முகர்ஜியின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


குக்வித் கோமாளியில் யாருமே எதிர்பார்க்காத புது நடுவர்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஐந்தாம் சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஷோவின் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் ஏற்கனவே விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் வேறு ஒரு புது நிகழ்ச்சியை நடத்த போவதாகவும், அதை பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறி இருந்தார்.

மேலும் குக் வித் கோமாளி ஷோவின் இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனமும் விஜய் டிவி கூட்டணியில் இருந்து விலகுவதாக வருத்தத்துடன் அறிவித்துவிட்டனர்.

புது நடுவர்
இந்நிலையில் குக் வித் கோமாளி ஐந்தாம் சீசனில் செஃப் தாமு உடன் ஒரு புது நடுவரை களமிறக்க இருக்கிறதாம் விஜய் டிவி.

மெஹந்தி சர்க்கஸ் பட நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் புது நடுவராக வர இருக்கிறார். அவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார்.

அவர் குக் வித் கோமாளி ஷோவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பிணை மறுப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிரான தடுப்பூசி வழக்கு நிறைவடையும் வரை பிணை வழங்க நீதிமன்றம் இன்று (2024.03.14) மறுத்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரின் பிணை கோரிக்கையை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிணை மனுக்கள் இன்று (14) நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

மார்ச் மாதத்தின் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 67,114 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் இதுவரையில் ரஸ்யாவில் இருந்து 9783 பேரும், இந்தியாவில் இருந்து 9735 பேரும் ஜேர்மனியில் இருந்து ஆறாயிரத்து 301 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 218,350 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை , ரஸ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மொபைல் SMS ஊடாக நடைபெறும் நிதி மோசடி தொடர்பில் இலங்கை தபால் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது . இது தொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மோசடி செய்பவர்கள் வங்கி அட்டை விபரங்களை மோசடி மூலம் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி எஸ்.எம்.எஸ்
இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், SL Post போன்ற அடையாளங்களையும், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்ற இணையத்தளத்தையும் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாம் குறுஞ்செய்தி மூலம் வங்கி விவரங்களைக் கோருவதில்லை என்றும் பொதி அனுமதிக்கு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதில்லை என்றும் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே மோசடி செய்பவர்கள் அனுப்பும் போலி எஸ்.எம்.எஸ்.களின் அடிப்படையில் தங்கள் வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டை விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7 வயது சிறுமி சிறுவர்களால் துஸ்பிரயோகம்

மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை நான்கு சிறுவர்கள் மற்றும் 18 வயது இளைஞர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட்ட 5 பேரில், 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன், 18 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (13) உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தந்தையை இழந்த சிறுமி வேலைக்கு செல்லும் தாயார்
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியுடன் விளையாடிய 11 வயது சிறுவன் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து சிறுமியை 14,15 மற்றும் 18 வயதுடைய சிறுவனின் நண்பர்களும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்றைய தினம் (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 15 வயதுக்குட்பட் 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்குட்படுத்துமாறும் அடுத்த வழக்கிற்கு ஆஜராகுமாறும் பிணையில் விடுவித்தார்.

அத்துடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்!

யாழில் இளம் குடும்பஸ்தர் நேற்று இரவு மூச்சு திணறல் ஏற்பாட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஆறுமுகம் சுகந்தன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கூடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், குடும்பஸ்தரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய் டீவி சீரியலுக்கு வந்த சந்திரமுகி பட நடிகை

கிழக்கு வாசல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் கிழக்கு வாசல்.

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர் வெங்கட் ரகுநாதன் நாயகனாக நடிக்க ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வருகிறார். 100 எபிசோடுகளை கடந்து பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது தொடர்.

புதிய என்ட்ரி
எம்.என்.மனோஜ் குமார் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில் புதிய நாயகி என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி 300 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடிய சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதா சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இவர் சின்னத்திரையில் வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி என பல தொடர்களில் நடித்துள்ளார்.

CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்

விஜய்
நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் தான், தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்தனர். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்தது.

எதிர் குரல்
அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூக நடக்கும் ஓவ்வொரு விஷயத்திற்கும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது CAA சட்டத்திற்கு எதிராக தனது குரலை எழுப்பியுள்ளார்.

” சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA போன்ற சட்டங்கள் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்.

பாலிவுட் பக்கம் சென்ற ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் 2000ம் ஆண்டில் அஜித்தை வைத்து தீனா படம் இயக்கியதன் மூலம் இயக்குனராக களமிறங்கினார்.

2005ம் ஆண்டு சூர்யாவை வைத்து கஜினி, விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார்.

விஜய்யின் 68வது படத்தை கூட ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அந்த கூட்டணி அமையவில்லை. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.

புதிய அப்டேட்
இந்த படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமா நடிகர்களை வைத்து படம் இயக்குவார் என்று பார்த்தால் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

அதாவது நடிகர் சல்மான் கானை வைத்து ரூ. 400 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். சஜித் நதியத்வாலா இப்படத்தை தயாரிக்க படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை நடிகர் சல்மான் கானே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய சிக்கலில் மாட்டிக் கொண்ட முத்து-மீனா

சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன், அதிரடி வசனங்களுடன், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை.

இந்த தொடர் அண்ணாமலை குடும்பத்தை மையமாக கொண்டு அதிலும் முத்து-மீனா கதாபாத்திரத்தை முக்கியமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது கதையில் முத்து, மீனாவிற்கு ஒரு கல்யாண ஆர்டர் வாங்க 500 மாலைகள் குடும்பத்துடன் கட்டி வருகின்றனர். இது விஜயா, மனோஜ், ரோஹினி 3 பேருக்கும் பிடிக்காமல் உள்ளனர்.

500 மாலைகள் மீனா சொன்னபடி கட்டி முடிக்கிறார்.

நாளைய புரொமோ
இன்றைய எபிசோட் முடிந்ததும் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியானது. அதில் முத்துவிடம் மாலை கொண்டு சென்றவர், மாலையுடன் எனது வண்டியும் காணவில்லை என ஷாக்கிங் தகவல் கூறுகிறார்.

இதனால் முத்து மிகவும் பதட்டம் அடைகிறார், இனி கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

சிட்டி அந்த மாலையை கடத்த ஏற்கெனவே பிளான் போட்ட நிலையில் எப்படி முத்து மாலையை சொன்னபடி கல்யாணத்திற்கு கொண்டு செல்கிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

 

View this post on Instagram

 

A post shared by UNKNOWN (@siragadikka_aasai_1)

ஜவான் வெற்றிக்கு பின் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் அட்லீ

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறிவிட்டார் அட்லீ. இவர் அடுத்து யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.

ஒரு பக்கம் தளபதி 69 படத்தை அட்லீ தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது நடக்க வாய்ப்பு இல்லை என்றும் மற்றொரு புறம் பேசப்பட்டு வருகிறது.

ஏனென்றால், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஏற்கனவே கமிட் ஆகிவிட்டாராம் அட்லீ. அந்த படத்திற்கான வேளைகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளாராம். ஆனால், இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

அட்லீ சம்பளம்
இதனால் தான் தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் உலா வருகிறது. இந்த நிலையில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லீ கேட்டுள்ள சம்பளம் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது.

ஆம், இப்படத்தை இயக்குவதற்காக ரூ. 60 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அட்லீக்கு ரூ. 60 கோடி சம்பளம் என்றால், கோலிவுட் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிவிடுவார். இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ரகசிய திருமணம்?

கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ரகு தாத்தா, கண்ணிவெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

மேலும் தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகும் திரைப்படமே வருண் தவானுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய திருமணம்?
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் சதீஸ் உடன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வதந்தி ஒன்று பரவியது. பைரவா படத்தின் பூஜையின் போது. இருவரும் கழுத்தில் மாலையுடன் நின்று கொண்டிருந்த புகைப்படத்தை வைரலாக்கி, இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர் என கிசுகிசுக்கப்பட்டது.

அனிதா சம்பத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் அனிதா சம்பத். அவர் செய்தி வாசிப்பாளர் வேலையை விட்டுவிட்டு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அவர் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக 84 நாட்கள் வரை இருந்தார். ஷோவில் அவர் பலரிடம் சண்டை போட்டதற்காக அதிகம் ட்ரோல்களை சந்தித்தார்.

பிக் பாஸுக்கு பிறகு அனிதா சம்பத் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

மாலத்தீவு ட்ரிப்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
அனிதா சம்பத் தற்போது அவரது கணவர் உடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அவர் சொந்தமாக youtube சேனல் நடத்திவரும் நிலையில் அதில் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

மாலத்தீவு அரசு இந்தியா உடன் மோதலில் இருந்து வருகிறது. அங்கிருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற உதவிட்டு இருக்கிறது. இதனால் மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

60 வயதான நடிகருடன் இணைந்து படம் நடித்துள்ள சீரியல் நடிகை ரச்சிதா

ரச்சிதா மகாலட்சுமி
சரவணன்-மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், இளவரசி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து சின்னத்திரையில் நாயகியாக கலக்கி வந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

தொடர்களை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருந்தார். இதுதவிர சில படங்களிலும் நடித்துள்ள ரச்சிதா தற்போது கூட 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

புதிய படம்
தமிழ் படங்களை தாண்டி ரச்சிதா கன்னடத்தில் ஒரு படம் நடித்துள்ளார். ரங்கநாயகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜக்கேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரச்சிதா நடித்துள்ளார்.

60 வயதான இவர் தற்போது பாராளுமன்ற எம்பி ஆக இருக்கிறது. தனது முதல் படத்தில் 60 வயதான நடிகருடன் நடித்த ரச்சிதா அந்த மொழியில் இன்னொரு படம் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் மெய் நிகரே, ஃபயர் உட்பட 3 படங்களில் ரச்சிதா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் நபராக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நடிகர் விஜய்

நடிகர் விஜய்
நடிகர் விஜய் என்பதை தாண்டி இப்போது அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.

எப்படி சினிமாவில் பல தடைகளை உடைத்து முன்னணி நாயகனாக, பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு சாதித்தாரோ அதேபோல் அரசியலிலும் அவரது ராஜ்ஜியம் நடக்கும் என்பது அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

முதலில் தனது கட்சி பெயர் தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார் கூடவே ஒரு சோகமான செய்தியையும் அவர் கூறியிருந்தார். இப்போது நடிக்கும் படம் மற்றும் இன்னொரு படம் நடித்துவிட்டு மொத்தமாக அரசியலில் இறங்குவேன் என்று கூறியது தான்.

கட்சி பெயர் அறிவித்த பிறகு வேறு எந்த தகவலும் வராமல் இருந்தது.

உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..

நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த நிலையில் அதில் இருந்து குணமாகி வந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

விபத்து பற்றிய வழக்கு ஒருபக்கம், கெரியர் இன்னொரு பக்கம் என அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

இருப்பினும் அவர் வழக்கம் போல கவர்ச்சி போட்டோஷூட் தொடர்ந்து நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் அழகிய ஸ்டில்கள்

பிகில் படத்தில் விஜய் உடன் நடித்தவர் அமிர்தா ஐயர். அவர் அதன்பிறகு லிப்ட், காபி வித் காதல் போன்ற படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கிலும் களமிறங்கி படங்கள் நடித்து வருகிறார் அவர்.

அமிர்தா ஐயர் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ

பூ பட நடிகையுடன் சிவகார்த்திகேயன் காதலா.. கிசுகிசு சொன்ன தனுஷ்

சிவகார்த்திகேயன் – தனுஷ்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் தனுஷ். சிவகார்த்திகேயனின் அடையாளமாகவே அது மாறியது.

எதிர்நீச்சல் படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் தயாரிப்பில் உருவான காக்கி சட்டை திரைப்படத்தில் நடித்தார் சிவா. இதன்பின் இருவருக்கும் இடையே பிரச்சனை என்றும், அதனால் மீண்டும் இருவரும் இணையவில்லை என்று ஏராளாமாக கிசுகிசு வெளிவந்தது. ஆனால், அவை யாவும் உண்மையில்லை, நாங்கள் இருவரும் நல்ல உறவில் தான் இருக்கிறோம் என கூறினார்கள்.

கிசுகிசு சொன்ன தனுஷ்
தனுஷ் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று மரியான். இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ‘அப்பன் சாமி மற்றும் மகன் சாமியின் பெயரை கொண்ட நடிகர், பூ நடிகையுடன் காதலா’ என வசனம் கூறுவார்.

இதுகுறித்து சிவகார்த்திகேயனுடன் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட தனுஷ், ‘மரியான் படத்தில் நான் சொன்ன கிசுகிசு சிவகார்த்திகேயனை பற்றி தான். அப்பன் சாமி சிவன் {சிவா}, மகன் சாமி முருகன் {கார்த்திகேயன்} பெயரை கொண்ட நடிகர் பூ நடிகையுடன் காதலா என்று சிவகாத்திகேயனை நினைவில் வைத்து தான் அந்த வசனத்தை நானே கூறினேன்.

அந்த பூ பட நடிகை யார் என தொகுப்பாளினி கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் “மரியான் படத்தில் நடித்த நடிகை தான்” என நகைச்சுவையாக கூறினார். ஆனால், அது, அப்படியெல்லாம் எந்த நடிகையையும் நினைவிக்கவில்லை, சும்மா சொன்னது தான் அந்த வசனம் என தனுஷ் கூறினார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா?

நடிகரின் புகைப்படம்
திரையுலகில் பிரபலமானவர்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அப்படி இந்திய சினிமாவையே உலுக்கிய ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த இவர், தற்போது நம்முடன் இல்லை என்றாலும், நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த திரைப்படங்கள், அதிலும் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலும் இவர் ஹீரோவாக நடித்தது தான் பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் இவருக்கு ரசிகர்களை உண்டாக்கியது.

இவர் தான்
ஆம், அவர் வேறு யாருமில்லை மறைந்த முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தான். இவருடைய சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

2013ஆம் ஆண்டு வெளிவந்த Kai Po Che! படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், Dil Bechara எனும் படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.