இந்த சிறு வயது புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா?

சிறுவயது புகைப்படம்
திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பதவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

அந்த வகையில் தற்போது தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமான நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யார் தெரியுமா ?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, பிரபல நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் தான்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், மீன் குழம்பும் மண்பனையும் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் நடித்த பாவ கதைகள் வெப் தொடர்க்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். இவருடைய நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இவர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

 

விவாகரத்து பிரச்சனை! ரஜினியை நேரில் சந்தித்த தனுஷ்..

ஐஸ்வர்யா – தனுஷ்
ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து சர்ச்சை தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை தனுஷ் – ஐஸ்வர்யா அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் சமீபத்தில் விவாகரத்து கேட்டு இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

ரஜினிகாந்த்
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் தனுஷை அழைத்து பேசியுள்ளாராம் ரஜினிகாந்த். போயஸ் கார்டனனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார் தனுஷ். அந்த சந்திப்பில் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழுமாறு தனுஷிடம் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளாராம்.

ஆனால் எனக்கு விவாகரத்து தான் வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா. இதே போல் தனுஷ் வீட்டார்களும், இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்துள்ளனர். அவை யாவும் கூட பலன் தரவில்லை. இதன்பின் தான் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டுள்ளனர்.

நடிகர் வினித்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா?

வினீத்
கடந்த 1992 -ம் ஆண்டு வெளியான ஆவாரம் பூ என்ற படத்தின் மூலமா தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வினீத் ஸ்ரீனிவாசன்.

இதனை அடுத்து மே மாதம், காதல் தேசம், சக்தி போன்ற படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்தார் வினித். கடைசியாக இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

புகைப்படம்
நடிகர் வினீத் கடந்த 2004 -ம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நடிகர் வினீத் தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மீனாவை கலங்க வைத்த விஜயா முத்து செய்த தரமான சம்பவம்

சதி செய்த விஜயா
விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியல் என்றால் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் தான் இடம்பிடித்துள்ளது. இந்த சீரியலில் மீனா சொந்தமாக பூ கட்டும் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக தங்களுடைய வீட்டிற்கு வெளியே கடை வைத்து கொடுத்தார் முத்து.

இதன்மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தன்னுடைய கணவருக்கு புதிதாக கார் வாங்கி கொடுத்தார் மீனா. இப்படியொரு சூழ்நிலையில், மீனா மீது ஏற்கனவே கடுப்பில் இருக்கும் விஜயா, அந்த பூ கடைசியை காலி செய்யவேண்டும் என முடிவு செய்துள்ளார்.

முத்து செய்த சம்பவம்
இந்த நிலையில், மீனாவின் பூ கடையை பற்றி புகார் அளித்து, அந்த கடையை காலி வைத்துவிட்டார் விஜயா. இதனால் கண்கலங்கி அழுகிறார் மீனா. இந்த சமயத்தில் மீனாவிற்கு புதிதாக டு வீலர் வண்டி ஒன்றை வாங்கி தருகிறார் முத்து.

சிலர் சதி செய்து மீனாவின் கடையை காலி செய்துவிட்டார்கள், இனிமேல் இந்த வண்டியிலேயே சென்று, எங்கு வேண்டுமானாலும் மீனா பூ விற்கலாம் என முத்து தனது மனைவி மீனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

 

திருமணத்திற்கு பின்பு பிரிஞ்சுதான் இருந்தோம்!

சினேகா
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை சினேகா. டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு நடித்து வந்த சினேகா, புன்னகை அரசி என்ற பெயரையும் எடுத்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

இவர் கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சினேகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பின்பும் பிரைவசிக்காக, நாங்கள் தனி தனியாக வாழ்ந்து வந்தோம். ஆரம்ப கட்டத்தில் வீடு கிடைக்கவில்லை. அதனால் நான் என் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

கல்யாணம் முடிந்து 15 முதல் 20 நாட்கள் வரை அப்படி தான் இருந்தோம். குழந்தை பிறந்த பிறகு கவனம் எல்லாம் அங்கே சென்றுவிட்டது. தற்போது குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற கவலை வந்து இருக்கிறது. எங்கள் திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது.

அது மாதிரியான நேரத்தில் நாங்கள் இரவு டேட்டிங் செல்வோம். அந்த சமயத்தில் பல நினைவுகளை பற்றி பேசுவோம். அப்போது எங்களுக்கு இடையே உள்ள ஸ்பார்க் மீண்டும் வரும்.

எனக்கும் பிரசன்னாவுக்கு இடையே சண்டை அடிக்கடி வரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் சண்டை முடிந்த பிறகும் நாங்கள் இவருடைய கருத்தையும் புரிந்துகொள்வோம் என்று சினேகா கூறியுள்ளார்.

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நேரம் மாற்றம்

விஜய் டிவியில் இந்த வாரத்தோடு தமிழில் சரஸ்வதியும் சீரியல் நிறைவடைகிறது. அதனால் வரும் திங்கள் முதல் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்ற புது சீரியலை ஒளிபரப்ப இருக்கின்றனர்.

அதனால் மற்ற சீரியல்களின் நேரத்தை மாற்றி இருக்கிறது விஜய் டிவி. அது பற்றிய முழு விவரங்கள் இதோ.

நேரம் மாற்றம்
வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் இனி மோதலும் காதலும் மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

புது சீரியல் எப்படி இருக்கப்போகிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் ரெஸ்பான்ஸ் எப்படி கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கிழக்கு வாசல் கிளைமாக்ஸ் போட்டோவில் இல்லாத ரேஷ்மா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் ரேஷ்மா முரளிதரன் ரேணு என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கி எட்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது.

இன்னும் 200 எபிசோடுகளை கூட தொடாத கிழக்கு வாசல் சீரியலை விஜய் டிவி தற்போது அவசரமாக முடிவுக்கு கொண்டு வருகிறது.

சமீபத்தில் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில், அதன் போட்டோவில் நடிகை ரேஷ்மா இடம்பெறவில்லை.

ஒரு மாதமாக நான் நடிக்கவில்லை..
இந்நிலையில் நடிகை ரேஷ்மா இதுபற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். தான் ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிக்கவில்லை என கூறி இருக்கிறார்.

இவர் சரியாக ஷூட்டிங் வராத காரணத்தால் தான் சீரியல் அவசரமாக முடிக்கப்படுகிறதோ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கிளைமாக்ஸ் போட்டோவிலும் ரேஷ்மா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சமீப காலமாக முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது என்றாலும், இதில் நடித்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று என ரேஷ்மா பதிவிட்டு இருக்கிறார்.

லவ்வர் பட நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட நபர்

லவ்வர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் மணிகண்டன். அவருடைய நடிப்பில் வெளிவந்த குட்நைட் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர்.

சமீபத்தில் மணிகண்டன் நடித்திருந்த லவ்வர் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுத்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.

இப்படத்தில் ஹீரோயின் தோழியாக ஹரிணி சுந்தர்ராஜன் நடித்திருப்பார். இப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
இது குறித்து ஹரிணி சுந்தர்ராஜன் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், ” இன்று காலை என்னுடைய எக்ஸ் தளத்தில் சில முட்டாள்கள் டிஎம் செய்து இருக்கிறார்கள். லவ்வர் படத்தில் இடம்பெற்றுள் ஐஷுவைப் கதாபாத்திரத்தை பிடிக்காததால் என்னைத் திட்டி வருகின்றனர்.

ஒருவர் நடித்த கதாபாத்திரம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவரை இழிவாகவும் அவமரியாதையாகவும் பேசுவது பரவாயில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள் என ஹரிணி சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

விஜயின் கடைசி படத்தை தயாரிக்க போவது இவர் தானாம்!

தளபதி 69
தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 69 படத்தின் பற்றியும் பேசப்பட்டு வருகிறது.

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை ஹெச். வினோத் தான் இயக்க போகிறார் என உறுதியாக சொல்லப்படுகிறது. மேலும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV Entertainment தான் இப்படத்தை தயாரிக்கும் என தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் தகவல்
அதாவது DVV Entertainment நிறுவனம் தளபதி 69 படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்களாம். இதனால் தளபதி 69 படத்தை யார் தயாரிக்க போகிறார் என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 69 படத்தை நடிகர் விஜய் தனது சொந்த தயாரிப்பில் எடுக்கப்போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. தேர்தல் முடிந்தபின் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகைதர சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

முதலைகளின் நடமாட்டம்
அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் சாயாஜி ஷிண்டே பாரதி

நடிகர் சாயாஜி ஷிண்டே பாரதி படத்தில் சுப்ரமணிய பாரதியாராக நடித்து அதிகம் பிரபலம் ஆனவர். அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர ரோல்கள் என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.

நெஞ்சு வலி
இந்நிலையில் நேற்று நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவரது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதை நீக்க angioplasty சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sayaji Shinde (@sayaji_shinde)

சிவனொளிபாதமலை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!

சிவனொளிபாத மலை பருவகாலத்தை முன்னிட்டு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிவனடிபாத மலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், எந்த காலமும் இல்லாத வகையில் இந்த முறை அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வருகை தருவதனால் நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து விருந்தினர் விடுதிகளும் நிறைந்துள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை பொலிஸார் வழங்கி வருவதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

அதேபோல் உள்நாட்டு யாத்திரிகர்கள் இம்முறை சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய புகையிரதம் மற்றும் அரச பேருந்துகள் மூலமாகவும் அதிகளவில் வருகை தந்து விட்டு திரும்பியுள்ளனர்.

எதிர்வரும் மே மாதத்தில் வரும் பூரணை தினமான வைகாசி விசாக நாளுடன் சிவனடி பாத மலை பருவகாலம் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முளைகட்டிய பயறை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

காலை உணவு என்பது ஒவ்வொரு நாளின் மிக முக்கியமான உணவாகும். காலை உணவிற்கு பல்வேறு வெரைட்டிகள் இருந்தாலும், முளை கட்டிய பயறு வகைகளை காலை உணவாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கொண்டைக் கடலை, பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சைப்பயறு, போன்ற பயறு வகைகளையும் கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற தானியங்களையும் முளை கட்டி உணவாகப் பயன்படுத்தலாம்.

முளை கட்டிய பயறு வகைகள் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

இரத்த சோகையை போக்கும்
முளை கட்டிய பயறில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகை போன்ற கடுமையான பிரச்சனைகளை குணப்படுத்தும் எனவே அனிமியா பிரச்சனையால் நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் காலை உணவில் முளை கட்டிய பயறை சேர்த்துக்கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
முளை கட்டிய பயறில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளதன் காரணமாக, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்த உனவாக கருதப்படுகின்றன.நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல, இது நீரிழிவு நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களுக்கு, ஏற்ற உணவாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
முளை கட்டிய பயறு உண்பதால் ரத்த ஓட்டம் சீராகும் என்றும், ரத்தம் உறைதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் மேலும், முளை கட்டிய தானியங்களில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் கலந்துள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றுவதன் மூலம் உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.

கண்பார்வை கூர்மைக்கு உதவும்
முளை கட்டிய பயறு வைட்டமின் ஏ நிறைந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, இது கண் பார்வை கூர்மைக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தினசரி உணவில் இதை சாப்பிட்டால், கண்பார்வை மேம்படும். கண் நோய் அண்டாமல் கண்களை பாதுகாக்கலாம்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்
நார்ச்சத்து நிறைந்த முளை கட்டிய பயறு செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவியாக இருக்கும். மேலும், அமிலத்தன்மை, புளித்த ஏப்பம், வாயுத் தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. கூடுதலாக, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனும் குறையும்.

சரும ஆரோக்கியத்திற்கு உதவும்
தினமும் காலை உணவாக முளை கட்டிய பச்சை பயறை சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் உணவில் முளைத்த சந்திரனை சேர்க்க வேண்டும். முளை கட்டிய தானியங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைத்து, முதுமையை தடுப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது.

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள, தமிழ் புத்தாண்டு தொடங்கும் இந்த வாரம் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் பலர் தங்கள் கிராமங்களுக்கு செல்ல தயாராக உள்ளனர்.

அவர்களுக்காக இம்முறையும் விசேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்கமைய பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை 1,400 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக 12 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பதுளைக்கு 2 விசேட புகையிரதங்கள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்தார்.

இதேவேளை, பெலியத்தவில் இருந்து மருதானை வரையிலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் 4 விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு மேலதிக ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஏப்ரல் 13 ஆம் திகதிக்கு பின்னர் கொழும்புக்கு வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டு கஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

மின்சாரம் தாக்கியதில் 19 வயது இளைஞன் பலி!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை வீதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் தனது வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார் .

சம்பவத்த்தில் திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் எனும் இளைஞனே உயிரிழந்தவராவார்.

திங்கட்கிழமை (08 ) தனிமையில் இருந்து தனது வீட்டில் வெல்டிங் – இரும்பு ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் தனது சகோதரி மற்றும் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் இன்று செவ்வாய்கிழமை (09) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மடடக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீச்சட்டியுடன் நடிகர் கஞ்சா கருப்பு

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர். அவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார்.

ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் சொத்துக்களை இழந்து வாடகை வீட்டுக்கு செல்லும் நிலைமைக்கு வந்துவிட்டார்.

தீச்சட்டி
இந்நிலையில் இன்று கஞ்சா கருப்பு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னிசட்டி உடன் வந்து வழிபாடு நடத்தினார்.

தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என சொல்லி வேண்டுதலுடன் அக்னிசட்டி எடுத்து வந்ததாக கஞ்சா கருப்பு அதன் பின் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

திருமணம் செய்யாமைக்கான காரணத்தை கூறிய நடிகை மும்தாஜ்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்த நடிகை மும்தாஜ் திருமணம் செய்யாததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

நடிகை மும்தாஜ்
டி ஆர் ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனலிசா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ்.

முதல் படம் சுமாராக ஓடினாலும், இவரது கவர்ச்சியான நடனம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

அதையடுத்து, மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, கவர்ச்சி பிரபலமாகவும் மாறினார்.

குஷி படத்தில் விஜய்யுடன் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடலுக்கு மிகவும் கிளாமராக நடனமாடி இன்றும் மறக்கமுடியாத நடிகையாக இருக்கின்றார். இந்த பாடல் மட்டுமின்றி மல மல மருதமல்லே என்ற பாடலும் பயங்கர ஹிட்டாகியது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மொழிகளிலும் நடித்தார். பின்பு ராஜாதி ராஜ படத்தில் வில்லியாக நடித்த மும்தாஜ் அதன் பின்பு சினிமாவிலிருந்து விலகினார்.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நோயால் அவதிப்பட்டு வருவதாக அந்நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

திருமணம் செய்யாத காரணம் என்ன?
சமீப காலமாக புர்காவில் மட்டும் இருக்கும் மும்தாஜ், அல்லாஹ்வை மனதார தான் ஏற்று கொண்டதாகவும், இதற்கு முன் தான் செய்த விஷயங்களை நினைத்து வருந்துவதாகவும் கூறினார்.

திருமணம் செய்யாததற்கான காரணம், இவருக்கு 25 வயதாக இருக்கும் போது ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் திருமண வாழ்வில் இருக்க முடியாது என்பதை உணர்ந்த இவர் திருமணம் செய்யாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

படத்துக்கு படம் பல கோடி சம்பளம் பெறும் நடிகர் அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமாவில் இப்போது இளம் நடிகர்கள் தான் ராஜ்ஜியம் செய்து வருகிறார்கள், அதிலும் மெகா குடும்பத்தில் இருந்து பலரும் கலக்கி வருகிறார்கள்.

அப்படி தெலுங்கு சினிமாவில் 21 ஆண்டுகள் வெற்றிகரமாக ஹீரோவாக இருந்து வருகிறார் அல்லு அர்ஜுன். அண்மையில் அவரின் முழு உருவ மெழுகுச் சிலை துபாயில் உள்ள மேடம் துஸாண்ட்ஸ் மியூசியத்தில் திறக்கப்பட்டது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியான வெளியான புஷ்பா திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அடுத்த படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை கூட பெற்றிருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.

சொத்து மதிப்பு
மெகா குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த அல்லு அர்ஜுன் படத்துக்கு படம் பல கோடி தனது சம்பளத்தை ஏற்றிக்கொண்டே வருகிறார். அவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 460 கோடி என கூறப்படுகிறது.

அவரது ஆண்டு வருமானம் ரூ. 90கோடியாம், ஒரு படத்துக்கு அவர் ரூ. 65 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

தற்போது நடித்துவரும் புஷ்பா 2ம் பாகத்திற்காக அவர் ரூ. 100 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.