திருடர்_கூட்டம் இயக்குனர் கதிரின் அடுத்த படைப்பு |கோடாலி|

திருடர்_கூட்டம், குற்றம் போன்ற தரமான குறும்படங்களை இயக்கிய இயக்குனர் கதிரின் அடுத்த படைப்பு |கோடாலி| இந்த குறும்படத்தின் முதல் பார்வையை தற்ப்போது வெளியிட்டுள்ளார் இயக்குனர் கதிர் ,துவாரகன் சித்தரா, லூகிஸ் , கவிராஜ் , ஹரிஸ் , பிரனா , மித்ரா , சிந்து, அச்சுதன், யாதுலன் போன்ற பல கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகி வரும் |கோடாலி| படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்kodali

ரஜினிக்கு அரசியல் தகுதி கிடையாது: சுவாமி தாக்கு!

தமிழகத்தில் தற்போது இருக்கும் பாஜகவின் நிர்வாக அமைப்பை வைத்துக்கொண்டு மாற்று அரசியலை கொண்டுவர முடியாது என பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தமிழகத்தைப் பொறுத்தவரையில் வாக்காளர்கள் சுயமாக வாக்களிக்கக் கூடியவர்கள்.

இளைய தலைமுறை வாக்காளர்கள் தேசிய சிந்தனையுடன் இருக்கிறார்கள். மேலும், அரசியலுக்கு ரஜினிகாந்த் எந்த விதத்திலும் தகுதியானவர் இல்லை.

மேலும், தமிழக அரசியல் குறித்து தெரியாத அவர், எதிலும் நிலையானவர் அல்ல. மேலும் ரஜினிகாந்த் மூலம் சசிகலாவுக்கு எந்த ஒரு அரசியல் சவாலும் வரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

எனவே, தற்போது இருக்கும் தமிழக பாஜகவை கலைத்துவிட்டு, பொறுப்பை என்னிடம் கொடுத்தால் மாற்று அரசியல் உண்டாகும் என கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு வெற்றி! அடி பணிந்தது மத்திய அரசு: அதிரடி அறிவிப்பு வெளியானது

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியிலிருந்து நீக்கிய மத்திய அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கட்டாய விடுமுறை பட்டியலில் தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் பண்டிகையைச் சேர்க்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

இதே போல் ஜல்லிக்கட்டு விடயத்திலும் ஓர் நல்ல தீர்ப்பு வரும் என தமிழர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலையில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் புதியவிலை 44 ரூபாவாக குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பொதுமக்களின் பங்கு அவசியம் : சந்திரிக்கா!!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் மாத்திரம் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது என தேசிய நல்லிணக்கம் தொடர்பான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் புதிய கலையரங்கத்தில் நேற்று தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து அதன் கீழ் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக தமிழ் தலைவர்களும், முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய மக்களின் தலைவர்களும் முன்னின்று செயற்பட்டனர்.

இதேபோன்று அனைவரும் தேசிய ஐக்கியத்திற்காக செயற்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான நியாயமான உரிமையை அனுபவிக்கும் நடைமுறை இருக்க வேண்டும்.

இன ரீதியில் பிளவுபடாது, இலங்கையர் என்ற சிந்தனையில் செயற்படுவோமாயின், எதிர்கால சமூகத்தினருக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்று சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தவுள்ள தேசிய மற்றும் நல்லிணக்க ஒருங்கிணைப்பு வாரத்தின் நோக்கம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தி எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படும் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

சிறப்பான எதிர்காலத்தையும் இதன் மூலம் இவர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும்.

இதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு செய்பவர்களாக இவர்கள் விளங்குவார்கள் எனவும் சந்திரிக்கா குமாரதுங்க கூறியுள்ளார்.

வடமாகாண பாடசாலைகளுக்கு 13 ஆம் திகதி விடுமுறை!

வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்திற்கு முன்தினமான எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை தினத்திற்று பதிலாக எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை இடம்பெறும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினமான 12 ஆம் திகதி பௌர்ணமி தின விடுமுறை நாளாக உள்ளதாலும், எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினமாக அமைந்துள்ளதை கருத்திற் கொண்டும் வெள்ளிக்கிழமை (13) பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பிளவுபடுத்தும் அரசமைப்பை கொண்டுவர முயற்சி: நாமல்!

நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், இவை குறித்து கருத்து வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு கைது செய்யப்படுவதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கைது செய்யப்பட்டதையடுத்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். சுன்னாகம் நிலத்தடி நீரினை குடிக்கலாமா..? வேண்டாமா..? வழக்கு ஒத்திவைப்பு

யாழ். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.

குறித்த பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீரினை குடிக்கலாமா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை முறையான அறிக்கை எதுவும் நீதிமன்றில் சமர்பிக்கப்படவில்லை என நீதவான் ஏ.யூட்சன் தெரிவித்திருந்தார்.

பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் மற்றும் வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பில் இதுவரை எதுவித ஆக்கப்பூர்வமான நடிவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விடையம் தொடர்பில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு நீதிமன்றம் இருமுறை அழைப்பாணை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி வெள்ளத்தில் போயுள்ளது : ரோஹித அபேகுணவர்தன

தற்போது நாட்டில் நல்லாட்சி வெள்ளத்தில் போயுள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதையடுத்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

ஜனநாயகமும், நல்லாட்சியும் நாட்டு மக்களின் வயிற்றுக்கு, வாய்க்கும் நன்றாக விளங்கியுள்ளது.

நாட்டில் இடம்பெறும் அநீதிகள் தொடர்பில் கருத்து வெளியிடுபவர்களை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, குற்றப் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தான் தற்போது நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திர விரதம்!

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம். மார்கழி மாதம் என்பதே சிறப்பான மாதம் தான். அந்த மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு சேர்ப்பதாகும். ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது, அதன் மதிப்பு பன்மடங்காகும்.

ஆகவே மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும். நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு நாள் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ‘ஆகா! அற்புதம்! அற்புதமான காட்சி!’ என்று மனமுருகி சத்தம் போட்டார். அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தேவியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.

கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். ‘சுவாமி! என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன?’ என்றனர்.

‘திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன்’ என்றார் மகாவிஷ்ணு. மேலும் அவர், சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ‘ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டும் என்றால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா!’ என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு.

ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பலகாலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.

திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள். ‘களி’ என்பது ஆனந்தம் என்று பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.

மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்ரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.

கோத்தபாயவிற்கும் கைது ஆபத்து..! பின்னணியில் ரணில் மகிந்த கூட்டா? குழப்பத்தில் அரசியல்..!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் ரீதியான பழிவாங்கல் என்றே அவர் தரப்பு கூறுகின்றது.

இந்த நிலையில் இந்த கைது அரசியல் ரீதியான ஒரு நாடகமே. இது மகிந்த – ரணில் இணைந்து செயற்படுத்திய நாடகமாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்து கோத்தபாயவிற்கும் கைது ஆபத்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அரசியல் ரீதியான எதிரிகளாகவே வலம் வருகின்றனர் மகிந்த தரப்பினரும் ரணில் தரப்பினர்களும் என்பது வெளிப்படையாகவே தெரிந்த உண்மை.

இந்த நிலையில் தன்னை கைது செய்ய ரணில் உத்தரவிட்டுள்ளதாக இன்று ஊடகங்களுக்கு தெரிவித்த விமல் வாகன முறைக்கேடு தொடர்பிலேயே தான் கைது செய்யப்படப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் விமல் நிதி மோசடி விசாரணை பிரிவு அலுவலகத்தில் முன்னிலையானதும் இன்று காலை. என்றாலும் இரண்டு நாட்களுக்கு முன்னரே விமல் கைது செய்யப்பட உள்ளார் என மகிந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி விமலின் கைது ரணிலின் உத்தரவா? அல்லது மகிந்தவின் உத்தரவா என்பதும் சந்தேகமே. அதேபோன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவு எடுக்கும் முடிவுகள் நடைமுறைக்கு வரும் முன்னரே மகிந்த அறிந்து கொண்டது எப்படி?

விமலின் கைதினை முன்னரே அறிந்து கொண்ட மகிந்த தன் புதல்வர் நாமலின் கைதினை முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லையே.

நாமல் கைது செய்யப்பட்ட போது மகிந்த கூறியது “யாரை எப்போது இந்த நல்லாட்சியும் ரணிலும் கைது செய்வார்கள் என்பது தெரியாது, ரணிலின் இஸ்டம் போலவே நிதி மோசடி விசாரணைப் பிரிவு செயற்பட்டு வருகின்றது” என்பது.

என்றாலும் இப்போது மகிந்தவிற்கு ரணிலின் திட்டம் தெரிந்து போனது எவ்வாறு இந்தக் கேள்விக்கு ரணிலும் மகிந்தவும் மட்டுமே பதில் கூற முடியும்.

முன்னாள் ஜனாதிபதி என்ற செல்வாக்கு அவருக்கு இருக்கின்றது என்றால் நீதியும் கூட அவருக்கு கீழ் படிந்தா நடந்து வருகின்றது என்றும் ஓர் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அரசியல் ரீதியில் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாகவே மகிந்தவும் ரணிலும் இருந்துவரும் நிலை தொடர்ந்து வருகின்றது.

ஆனாலும் இப்போது நடைபெற்ற விமலின் கைது பிரதமரின் திட்டமா அல்லது மகிந்தவின் திட்டமா இல்லை இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகமா என்ற வகையிலும் சிந்திக்கத் தூண்டுவதாக அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வாகன முறைக்கேடு தொடர்பில் விமல் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் இப்போது வந்ததா? நல்லாட்சி வந்ததன் பின்னர் மாதாந்தம் விமல் குறித்த குற்றச்சாட்டுக்காக நிதி மோசடி விசாரணை வந்து சென்றதே அதிகம்.

ஆனால் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் அதுவும் மகிந்த கூறியதைப்போலவே. இதே வகையிலான கைது ஒன்றே அண்மையில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தியின் கைதும் கூட.

இவற்றினை தொகுத்து நோக்கும் போது வெளியில் கீரியும் பாம்புமாக மோதிக் கொள்ளும் ரணில் மைத்திரி மகிந்த கூட்டுச் செயற்பாடுகளையே செய்து வருவதாக கூறப்படுகின்றது.

விமல் இன்று கைது செய்யப்பட உள்ளமை மகிந்த அறிந்திருந்தார். அதேபோன்று கோத்தபாய இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.

ஏற்கனவே கோத்தபாய லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் விசாரணை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளி வந்த நிலையிலேயே கோத்தபாய வெளிநாட்டுக்கு பறந்து விட்டார்.

இதன் மூலம் கோத்தபாயவிற்கும் கைது ஆபத்து இருந்து அதன் காரணமாகவே அவர் அவசர வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இவை அனைத்துமே அரசியல் ரீதியான இலாபநோக்கு செயற்பாடுகள் மாத்திரமே எப்படியும் கைது செய்யப்பட்டவர் பிணையில் விரைவில் வெளிவருவார் என்றும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தில் 32ஆவது பட்டமளிப்பு விழா!

யாழ். பல்கலைக்கழகத்தில் 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த பட்டமளிப்பு விழா நாளைய தினமும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இதேவேளை, பட்டமளிப்பு விழாவின் போது 2151 மாணவர்கள் பட்டங்களை பெற்று கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இந்த பட்டமளிப்பு நிகழ்வில் பெற்றோர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானை நாடும் இலங்கை!

ஈரானில் இருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொகமட் செய்ரி அமிரானியுடன் கலந்துரையாடல்கள் மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஈரான் தூதுவர்,

இலங்கைக்கு தேவையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி தொடர்பில் ஈரானிற்கு விஜயம் மேற்கொண்டு ஆராயுமாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் சேனாரத்னவிற்கு, ஈரான் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மாடு மேய்க்கும் மகிந்த..! வைரலாகும் காணொளி!

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் முக்கிய புள்ளி அவருக்கு அரசியல் ரீதியான செல்வாக்கு அண்மைக்காலமாக குறைந்து வருகின்றது.

அவர் மீது பல்வேறு வகையான விமர்சனங்களும் எழுப்பப்பட மக்கள் மத்தியில் அவருக்கு காணப்பட்ட செல்வாக்கு குறைந்து வருகின்றது.

இந்த காரணங்களினால் அவருடைய ஆதரவாளர்களும் கூட மகிந்த நல்லவரா? கெட்டவரா என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கும் நிலை உருவாகிவிட்டது.

ஆனாலும் மகிந்த தனது பழைய செல்வாக்கை மீட்டுக் கொள்ள அதிகாரத்தை, ஆட்சியை கைப்பற்ற கடுமையாக முயற்சித்து வருகின்றார் அத்தோடு வெளிப்படையான கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில் அவருக்கு உதவும் வகையில் அவருடைய ஆதரவாளர்கள் மும்முரமாக இணைந்துள்ளார்கள்.

அந்தவகையில் மகிந்த எப்போதோ நடித்த திரைப்படத்தின் காணொளியை வெளியிட்டு, விவசாயத்திற்காக மகிந்த பாடுபட்டு வருவதை காட்டும் வகையில் விமர்சித்து வருகின்றனர்.

மகிந்த இலங்கையின் கலைத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ஒருவர், அத்தோடு அம்பாந்தோட்டையில் விவசாய காணிகள் அந்நியர்களுக்கு கொடுக்கப்படுவதை தட்டிக் கேட்பவர் மகிந்தவே.

எமது தலைவருக்கு எதுவும் முடியும் என பலவகையில் மகிந்த இந்தக் காணொளி மூலமாக விமர்சிக்கப்படுகின்றார்.

இதேவேளை மகிந்த கடந்த காலத்தை மீட்டிப்பார்த்து அதனை மக்கள் மத்தியில் காட்டி ஆதரவு திரட்டும் வகையிலும் கலைஞர்களிடமும் ஆதரவு தேடும் வகையிலும் இந்த காணொளி மீண்டும் இப்போது பரப்பப்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா பறந்தார் கோத்தபாய!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அமெரிக்கா நோக்கி சென்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கா பயணத்தில் அவரது மனைவி அனோமா ராஜபக்சவும் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 2.50 மணிக்கு டோஹா கட்டார் நோக்கி பயணித்த ஈ.கே.349 என்ற விமானத்தில் கோத்தபாய பயணித்துள்ளார்.

அமெரிக்காவில் தனது சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக கோத்தபாய அமெரிக்க சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விமல் கைது!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச,பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமல் வீரவங்சவை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,விமல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் செல்லத் தவறிய ஹிருணிக்கா!

2015ம் ஆண்டு தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம்தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்காபிரேமசந்திர இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிருணிக்கா பிரேமசந்திரவிறகு சுகயீனம் காரணமாகவே அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என அவரது வழக்கறிஞர் இன்றைய தினம் நீதிமன்றில்அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் ஹிருணிக்கா உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இருப்பினும்,ஏனைய எட்டு பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர்ஒருவர் கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜாதிக ஹெல உறுமய வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயார்! சி.வி.கே. பதிலடி

வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமாகவே செயற்பட்டு வருகின்றது.

எந்த காலத்திலும் இனவாதம் பேசவில்லை. நாம் இனவாதம் பேசுகின்றோம் என ஹெல உறுமய வழக்கு தொடர்ந்தால் நாம் வழக்கை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை இனவாதம் பேசுவதை நிறுத்தவேண்டும் இல்லையேல் வழக்குத் தொடருவோம் என ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர் பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையில் நாம் எந்த காலத்திலும் இனவாதம் பேசவில்லை.

தெற்கில் உள்ள இனவாத ஊடகங்களும் இனவாத அரசியல் வாதிகளுமே மாகாண சபையின் பிரேரணைகளை நிறைவேற்றுவதை முழுமையாக ஆராயாது இனவாத செய்திகள் வந்ததும் அவர்களே இனவாதத்தை பேசுகின்றார்கள்.

தெற்கில் இருந்து உற்பத்தியாகும் கள்ளை வடக்கில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் விற்பனை செய்யவேண்டாம் என்பதே எமது கோரிக்கை.

குறிப்பாக வடக்கில் உள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கங்கள் தமது சமூகத்தை பாதுகாப்பதற்கு அதற்கேற்ப செயற்படவே உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அத்தகைய பணியை செய்யவேண்டிய தேவை உள்ளது. கூட்டுறவாளர்கள் தமது செயற்பாட்டை செய்ய வேண்டும். இதன் மூலமே தமது நோக்கத்தை அடையவேண்டும்.

அதனைவிடுத்து தெற்கில் உள்ள கள்ளை கூட்டுறவு சங்கத்தில் விற்பதன் விளைவு பாதிப்பை ஏற்படுத்துவதால் கூட்டுறவு சங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

ஏனைய இடங்களில் விற்பதற்கு தடைசெய்யவில்லை.வடக்கு மாகாண சபைக்கான கீதம் அமைத்தலை பொறுத்தவரை அது அனைத்து மாகாணங்களிலுமுள்ள ஒன்றாகும் எமது சபையில் இல்லாது இருந்தது.

இதனை உருவாக்க முயற்சி எடுத்தால் அது வடக்கிற்கான தேசிய கீதம் என கூற முடியாது.இனவாத ஊடகங்கள் செய்தி வெளியிட்டவுடன் அந்தச் செய்தியை ஆராயாது வடமாகாண சபை தொடர்பில் பேசுவது முட்டாள் தனம்.

ஒரு விடயத்தை பேசவேண்டும் என்றால் அதனை ஆராய்ந்து செயற்படவேண்டும். இதை விடுத்து இனவாதத்தை தாங்களே செயற்படுத்தி விட்டு எம் மீது பழிபோடுவது விசமத்தனம்.

எம்மீது வழக்குப் போடுவது என்றால் போடட்டும். நாம் அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.

30 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக நடைபெறுவதற்கு தண்ணீர் இன்றியமையாத காரணியாகும்.

எனவே நாம் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் எண்ணற்ற பலன்கள் ஏற்படும்.

தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு அறியலாம்,

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புதங்கள்
  • ஒருவர் தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் செயல்முறையை பின்பற்றுவதன் மூலம், அவரது உடம்பில் ரத்த அழுத்தம் சீரான முறையில் இருக்கும்.
  • நமது அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். எனவே தினமும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், உடல் எடை விரைவில் குறையும்.
  • வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம், நீரில் உள்ள சத்துக்கள், வயிற்றுப் படலத்தில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்கிறது.
  • உடலின் இன்சுலின் அளவு சீராக்கப்படுகிறது. இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடிகிறது.
  • மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவதற்கு, முக்கிய காரணம் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். எனவே தினமும் இந்த செயல்முறையை தவறாமல் பின்பற்றி வந்தால், பத்தே நாட்களில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • அன்றாடம் நமது வாழ்நாட்கள் முழுவதும் தொடர்ந்து இந்த செயல் முறையை பின்பற்றி வந்தால், புற்றுநோய் 180 நாட்களில் முற்றிலும் குணமாகிவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வருவதன் முலம், அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட முடிகிறது. இதனால் என்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
  • இதயத்தில் இரத்த அழுத்தம் சீராக இருப்பதால், இதய நோயில் இருந்து விடுபடலாம். மேலும் நமது உடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உறுப்புகள் மற்றும் சருமம் பொலிவோடு இருக்கும்.

நீங்கள் இஞ்சி டீ பிரியரா? அதனால் எவ்வளவு ஆபத்து தெரியுமா?

இஞ்சியை ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அஜீரணம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, குமட்டல், வயிற்றுப் போக்கு மற்றும் இதர நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணத்தை இஞ்சி பெற்றுள்ளதால், இஞ்சி டீ ஒரு சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது.

ஆனால் எவ்வளவு சிறந்த உணவாக இருந்தாலும் அதை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் அது நமக்கு நஞ்சாக மாறிவிடும்.

இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடித்தால், அது நமது செரிமான அமைப்பை பாதித்து, வாயில் எரிச்சல், வயிற்றுப் போக்கு, குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
  • நம் உடலில் அமில உற்பத்தியை அதிகரிக்க செய்து, அசிடிட்டியை உண்டாக்கும். மேலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள், இஞ்சி டீயை அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து, ஹைபோகிளைசீமியா நோயை ஏற்படுத்தும்.
  • இஞ்சி டீயில் ஆஸ்பிரின் அல்லது ஐபூப்ரோஃபெனில் உள்ளதால், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கண்டிப்பாக இஞ்சி டீயை பருக கூடாது. ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய படபடப்பை உண்டாக்குகிறது.
  • இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால், அமைதியற்ற நிலை மற்றும் தூக்கமற்ற நிலைகள் ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் அதிகமாகி, உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • அறுவை சிகிச்சைக்கு முன்பாக அல்லது நெடுங்காலமாக இஞ்சி டீயை பருகி வருபவர்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில் அதற்கு காரணம் மயக்கத்திற்காக கொடுக்கப்படும் மருந்து இஞ்சி டீயுடன் எதிர் செயலாற்றும். இதனால் அறுவை சிகிச்சை செய்த இடத்தில், புண் மற்றும் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • பித்தப்பை கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், அதிகமாக இஞ்சி டீயைக் குடித்தால், பித்தநீர் அதிகமாக சுரந்து மிகுந்த வலி ஏற்படும். எனவே அதிகமாக இஞ்சி டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • இஞ்சி டீ குடிக்கும் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும். அதனால் எந்தளவு பருகினால் ஒருவருக்கு இரைப்பை பிரச்சனை ஏற்படும் என்பதை கணிப்பாக கூற முடியாது. எனவே அளவாக குடிப்பது நல்லது.
  • இஞ்சி பயன்படுத்துதலும் கர்ப்பமும் சர்ச்சைக்குரிய விஷயமாகும். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு இஞ்சி டீ சிறந்த மருந்தாக இருந்தாலும், வயிற்றில் உள்ள சிசுவிற்கு அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, கருச்சிதைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.