ரவீந்தர் கைதுக்கு பின் முதன் முறையாக மகாலட்சுமி போட்ட பதிவு..

ரவீந்தர்
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் யூடியூப் தளத்தில் பிக் பாஸ் பிரபலங்களை விமர்சித்து பிரபலமானார்.

கடந்த ஆண்டு ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் முதல் திருமண நாளை ஜோடியாக அவர்கள் கொண்டாடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டார்.

புகைப்படம்
ரவீந்தர், பாலாஜி என்பவரிடம் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று சொல்லி ரூபாய் 16 கோடி அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் போலீசார் ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மகாலட்சுமி தனது சோசியல் மீடியா தலத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார், “எல்லாம் கடந்த போகும்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு.

முக பொலிவுக்கு சீரியல் நடிகை கண்மணி என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகை கண்மணி
எவ்வளவோ மாடலிங், விளம்பரங்கள் என நடித்தாலும் ஒரு சீரியலில் டாப் ரோலில் நடித்தால் போது மக்கள் கவனத்திற்கு வந்துவிடுலாம். அந்த அளவிற்கு தொடர்கள் முக்கியமாக இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்காக உள்ளது.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் இரண்டாவது நாயகியாக நடித்து மக்களிடம் ரீச் பெற்றவர் தான் நடிகை கண்மணி.

இவர் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார், இப்போது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

முக பொலிவுக்கான டிப்ஸ்
முகத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், அரிசி மாவு, பப்பாளி என முழுக்க முழுக்க இயற்கை பொருட்களை மட்டும் தான் பயன்படுத்துவாராம்.

காலை எழுந்தவுடன் ஃபேஸ் வாஷ் செய்துவிட்டு முகத்தில் வைட்டமின் சி சீரம், வைட்டமின் சி க்ரீமை முகத்திற்கு அப்ளை செய்வாராம். வாரத்திற்கு ஒருமுறை பாதாம் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவி முகத்திற்கு மசாஜ் கொடுப்பாராம்.

ABC ஜுஸ் குடிப்பது கண்மணியின் அன்றாட வழக்கமாம்.

ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் தவிக்கும் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி
கடந்த 2005ம் ஆண்டு வெளியான சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின் நான் படத்தின் மூலம் நடிகரானார்.

நடிப்பு, இசை, படத்தொகுத்து என எல்லாவற்றிலும் கலக்கி வந்த விஜய் ஆண்டனி அண்மையில் படு சூப்பராக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

அவர் நடத்திய நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, சில வீடியோக்களும் வைரலாகி வந்தது.

நடிகரின் தவிப்பு
அண்மையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்பு தமிழக மக்கள் அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் விஜய் ஆண்டனிக்கு இப்படியொரு சோகம் ஏற்பட்டது வருத்தமாக இருக்கிறது என பதிவு போட்டார்.

அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் இப்போது விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார் என கேட்க, அதற்கு அவர் பல மணி நேரமாக அவர் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை, அவர் இப்படி கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை என டுவிட் போட்டுள்ளார்.

மகளை அடக்கம் செய்யும் நேரத்தில் கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி.. கடைசியாக மகளிடம் சொன்ன வார்த்தைகள்

மீரா மறைவு
விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மன அழுத்தம் காரணமாக அவர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளார் என தெரியவந்தது.

மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் மீரா. இதில் Love You All, miss You All எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

கடைசியாக மகளிடம் தாய்
இன்று காலை இறுதி சடங்குகள் முடிந்து பிறகு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்துள்ளனர். அப்போது கடைசியாக தனது மகளிடம் “கருவறையில் உன்னை சுமந்தேன்.. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்” என விஜய் ஆண்டனியின் மனைவி கதறி அழுது பேசியுள்ளார்.

திருமணம் ஆகி 1 வருடத்தில் இறந்த கணவர், மறக்க முடியாத நினைவுகள்-

ஸ்ருதி ஷண்முகப்பிரியா
சன் டிவியில் மெட்டி ஒலி என்ற தரமான தொடரை இயக்கிய திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இன்னொது சிறப்பான தொடர் நாதஸ்வரம்.

இந்த தொடரில் அமோகமாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த ஸ்ருதி அடுத்தடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.

இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் நடிப்பதையே நிறுத்திய ஸ்ருதி தனது கணவருடன் சுற்றுலா அதிகம் சென்றுள்ளார், அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

சந்தோஷமாக இவர்கள் வாழ்ந்து வர திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அரவிந்த் சேகர் உயிரிழந்துவிட்டார்.

ஸ்ருதியின் வீடியோ
கணவரின் உடல் மட்டும் தான் இல்லை ஆனால் அவரது ஆத்மா என்னுடன் தான் உள்ளது என கூறி வந்த ஸ்ருதி அந்த பெரிய இழப்பில் இருந்து வெளியே வர இயற்கையின் துணையை தேடியிருக்கிறார்.

அவர் அண்மையில் காட்டுக்குள் சென்று அவர் அவர் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஜெயம் ரவி
அப்பா எடிட்டர், அண்ணன் இயக்குனர் என சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து நடிகராக வந்தவர் தான் ஜெயம் ரவி.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 2003ம் ஆண்டு தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்தார்.

பின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் என தொடர்ந்து தனது அண்ணனின் இயக்கத்தில் நடித்து வந்தார்.

இடையில் சில இயக்குனர்களின் படங்களில் நடித்து வெற்றியும் காண்கிறார். கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இருந்தது.

சமீபத்தில் ஜெயம் ரவி கேரியரில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

சொத்து மதிப்பு
சமீபத்தில் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நடிகர் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது.

ஒரு படத்திற்கு ரூ. 2.5 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறும் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு ரூ. 73 கோடி முதல் ரூ. 75 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

KGF பட புகழ் நடிகர் யஷ் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

நடிகர் யஷ்
கன்னட சினிமாவை தாண்டி ஒரு சில வருடங்களுக்கு முன் இந்த நடிகர் யார் என்பதே மக்களுக்கு தெரியாது, ஆனால் இப்போது கேட்டால் நம்ம ராக்கி பாய் இவர தெரியாம இருக்குமா என ரசிகர்கள் அசால்ட்டாக பதில கூறுவார்கள்.

அந்த அளவிற்கு KGF என்ற படத்தின் மூலம் ஓட்டுமொத்த இந்திய மக்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருகிறார் யஷ்.

விரைவில் 3வது பாகம் தயாராகிறது என தகவல்கள் வந்தது, ஆனால் மற்றபடி படம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.

அடுத்த படம்
தற்போது நடிகர் யஷ் புதிய படத்தை இயக்கப்போகும் இயக்குனர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய விருது எல்லாம் பெற்றுள்ள மலையாள சினிமா இயக்குனர் கீது மோகன்தாஸ் தான் யஷ் 19வது படத்தை இயக்க இருக்கிறாராம்.

இப்போதைக்கு இந்த தகவல் மட்டுமே வந்துள்ளது.

திட்டமிட்டபடி வெளியாகும் மார்க் ஆண்டனி!..

மார்க் ஆண்டனி
விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தில் சுனில், செல்வராகவன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தடை நீக்கம்
நடிகர் விஷால் படங்களை தயாரிக்க சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியுள்ளார். அவர் பெற்ற ரூ.21.29 லட்சம் கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்று செலுத்தி உள்ளது.

ஆனால் இந்தக் கடனை நடிகர் விஷால் திரும்பி செலுத்தவில்லை என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனால் மார்க் ஆண்டனி படம் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மார்க் ஆண்டனி படத்தின் மீது இருந்த தடையை நீக்கியுள்ளது. தற்போது இப்படம் படக்குழு திட்டமிட்ட படி வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

லியோ படத்திலிருந்து இயக்குனர் லோகேஷ் வெளியேறிவிட்டாரா

லியோ
லியோ உலகம் முழுவதும் இருக்கும் விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும். இப்படத்தின் முதல் பாதி அருமையாக வந்துள்ளது என சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் கூட கூறினார்.

மேலும் லியோ திரைப்படம் இதுவரை ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. விஜய் – லோகேஷ் கூட்டணி என்பதினால் படத்தின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திலிருந்து வெளியேறிவிட்டார் எனும் செய்தி பரவி வந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், அது பொய்யான தகவல் தான். லோகேஷ் லியோ படத்திலிருந்து வெளியேற வாய்ப்பே இல்லை. சிலர் லியோ படத்தின் மீது கொண்டுள்ள கோபத்தினால் இப்படியொரு பொய்யான செய்தியை பரவி வருகிறார்கள்.

இதே போல் தான் தலைவர் 171 படத்தைலிருந்தும் லோகேஷ் வெளியேறிவிட்டார். அப்படத்தை லோகேஷ் இயக்கப்போவதில்லை என பொய்யான தகவலை பரப்பினார்கள். தங்களுடைய தனிப்பட்ட கோபத்தை பல கோடிகள் போட்டு எடுக்கப்படும் படங்களின் மீது சுமத்துவது மிகவும் தவறு. இனிமேல் ஆவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

வெறித்தனமாக வெளிவந்த தலைவர் 171 அறிவிப்பு

தலைவர் 171
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் தலைவர் 171.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து தலைவர் 171 படத்தையும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

அறிவிப்பு
இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தலைவர் 171 படத்தின் அறிவிப்பை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜெயிலர் படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், லோகேஷ் – சன் பிச்சர்ஸ் – ரஜினி கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 கண்டிப்பாக அதை விட மாபெரும் வசூலை குவிக்கும் என்கின்றனர்.

நான்கு நாட்களில் எதிர்பார்த்ததை விட மாபெரும் வசூல் செய்த ஜவான்.

ஜவான்
ஒரு படத்தின் வெற்றி அப்படத்தின் வசூலை வைத்தும், அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை வைத்து தான் கூறமுடியும். அப்படி வசூல் வேட்டையாடும் என எதிர்பார்த்து கடந்த வாரம் வெளிவந்த படம் தான் ஜவான்.

அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதையெல்லாம் அடித்து நொறுக்கி வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.

முதல் நாள் உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த ஜவான் படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல்
அதன்படி, ஜவான் படம் வெளிவந்து நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இனி வரும் நாட்களில் எதிர்பார்த்ததை விட மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என தெரிவிக்கின்றனர்.

ஜவான் பட வெற்றி அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய இயக்குனர் அட்லீ-

இயக்குனர் அட்லீ
தமிழ் சினிமாவில் கடந்த 7ம் தேதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜவான்.

ரூ. 300 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் மூலம் அட்லீயின் மார்க்கெட் எங்கேயே சென்றுவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பாலிவுட் பக்கம் சென்றதை தொடர்ந்து இப்போது அட்லீ டோலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது, புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜுனுடன் தான் இணைய இருக்கிறார் என்கின்றனர்.

உயர்ந்த சம்பளம்
ஜவான் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அட்லீயின் சம்பளம் ரூ. 60 கோடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த சம்பள உயர்வு விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது குறித்து கூறிய நடிகை அபிராமி

நடிகை அபிராமி
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் பெரிய ஹிட் கண்ட நடிகை அபிராமி.

மலையாளத்தில் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் வானவில், சமுத்திரம், சமஸ்தானம், விருமாண்டி வரை நடித்து பின் நீண்ட இடைவேளை எடுத்தார்.

அதன்பின் மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய இவர் இப்போது பல மொழிகளில் நடிக்கிறார்.

குழந்தை தத்தெடுப்பு
ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் அபிராமி செட்டில் ஆகியிருந்தார். பின் கடந்த வருடம் நடிகை அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து மகளுக்கு கல்கி என்றும் பெயர் வைத்தார்.

மகள் குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதைத்தான் செய்தேன்.

மகளுக்கு அப்படி ஏன் பெயர் வைத்தேன் என்றால் கல்கி ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன், பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

தான் இறக்கப்போவதை முன்பே கணித்துள்ள நடிகர் மாரிமுத்து-

நடிகர் மாரிமுத்து
தமிழ் சினிமாவை உலுக்கும் அளவிற்கு இன்று ஒரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது. அவர் வேறுயாரும் இல்லை எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரீச் பெற்றுள்ள ஆதி குணசேகரன் என்ற மாரிமுத்து தான்.

இன்று காலை 8.30 மணியளவில் வடபழனியில் உள்ள டப்பிங் ஸ்டூடியோவில் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார், அப்போது திடீரென மூத்து விட திணறியுள்ளார்.

உடனே தனது காரை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அதற்குள் அவர் உயிர் பிரிந்துள்ளது.

அவரின் மரண செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மரண பற்றி நடிகர்
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அடிக்கடி தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் ஏதோ தவறு நடக்க இருப்பது போல் தோன்றுவதாக அவர் கூறியிருக்கிறார்.

அந்த வீடியோ வைரலாக இறப்பது குறித்து அவருக்கு முன்பே ஏதோ தெரிந்ததா என ரசிகர்கள் வருத்தமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Divya K (@iamdivyakrishnan)

அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தில் விவேக் உடன் நடித்துள்ள மறைந்த நடிகர் மாரிமுத்து.

நடிகர் மாரிமுத்து
தமிழ் சினிமா தொடர்ந்து பல கலைஞர்களை கலந்துகொண்டு இருக்கிறது. அப்படி யாராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு தான் நடிகர் மாரிமுத்து.

மாரடைப்பு காரணமாக மரணமடைந்த மாரிமுத்து திரையுலகில் சமீபத்தில் தான் பிரபலமாக துவங்கினார். எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்து. ஆனால், அதற்குள் இப்படியொரு சோகம் நடக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்று காலை 11 மணி அளவில் அவருக்கு இறுதிச்சடங்கு நடந்து உடல் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வாலி படத்தில் மாரிமுத்து
மாரிமுத்து பல இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அப்படி அவர் துணை இயக்குனராக பணிபுரிந்தவர்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி படத்தில் விவேக் உடன் இணைந்து மாரிமுத்து நடித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் பார்த்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.

தமிழ் சினிமா
திரையுலகில் எப்போதுமே ஒரு ஆரோகியமான போட்டி இருந்துகொண்டே தான் இருக்கிறது. எந்த படம் அதிகம் வசூல் செய்யும், மக்கள் மத்தியில் அதிக அன்பை பெரும்.

எந்த படம் மக்களால் அதிகம் பார்க்கப்படும் என்று பல விஷயங்களில் போட்டி இருக்கிறது.

இந்நிலையில், நம் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் தமிழக மக்களால் திரையரங்கில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது. அப்படங்களில் டாப் 10 லிஸ்டை பார்க்கலாம் வாங்க..

அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்
திரிசூலம்
உலகம் சுற்றும் வாலிபன்
பாட்ஷா
எங்க வீட்டு பிள்ளை
நாட்டாமை
சந்திரமுகி
படையப்பா
சூர்யவம்சம்
வானதைப்போல
வசந்தமாளிகை

இதில் எம். ஜி. ஆர் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளிவந்த இரண்டு திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. ரஜினி நடித்த மூன்று திரைப்படங்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

மேலும் சரத்குமார் நடித்த இரு திரைப்படங்களும், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படமும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்.

மாரிமுத்து
இந்தம்மா ஏய் எனும் வசனத்தின் மூலம் தான் மட்டும் பிரபலமாகாமல், தான் நடித்த சீரியலையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் நடிகர் மாரிமுத்து.

இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகினர் பலரும் நேரில் வந்து மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

நேற்று மாலை மாரிமுத்துவின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த காலை 10 மணிக்கு மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்யப்படவுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மரணமடைந்தால், அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என கேள்வி எழுந்தது.

அவருக்கு பதில் இவரா
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மாரிமுத்து நடித்து வந்த இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை தகவல் என தெரியவில்லை. நடிகர் வேல ராமமூர்த்தி வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகர், மேலும் பிரபலமான எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரிமுத்து கடைசியாக நடித்துள்ள ரெட் சாண்டல் வுட் படத்தின் Sneak Peek இதோ!.

மாரிமுத்து
இயக்குனர், நடிகர் என்ப பல பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் மாரிமுத்து. சமீபத்தில் இவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Sneak Peek
இந்நிலையில் மாரிமுத்து கடைசியாக ரெட் சாண்டல் வுட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை குரு ராமானுஜம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கே.ஜி.அப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு, எம்.ஸ் பாஸ்கர், கணேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது ரெட் சாண்டல் வுட் படத்தின் Sneak Peek வெளியாகி இருக்கிறது.

இதோ பாருங்க

 

லியோ பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கம்.

லியோ
லியோ படத்தின் முதல் பாடல் நான் ரெடி தான் வரவா என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.

ரசிகர்கள் அந்த பாடலை கொண்டாடினாலும் அதில் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகள் இருந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது.

குறிப்பாக ‘அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க’ என விஜய் பாடிய வரிகள் சர்ச்சையில் சிக்கியது.

லிரிக்ஸ் மாற்றம்
இந்நிலையில் தற்போது அந்த பாடலின் வரிகளை படக்குழு மாற்றி இருக்கிறது. மேலும் புகை பிடிக்கும் காட்சிகளும் நீக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கான சென்சார் ரிப்போர்ட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து விஜய் ரசிகர்கள் தான் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.