ரவீந்தர்
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் யூடியூப் தளத்தில் பிக் பாஸ் பிரபலங்களை விமர்சித்து பிரபலமானார்.
கடந்த ஆண்டு ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் முதல் திருமண நாளை ஜோடியாக அவர்கள் கொண்டாடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டார்.
புகைப்படம்
ரவீந்தர், பாலாஜி என்பவரிடம் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று சொல்லி ரூபாய் 16 கோடி அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் போலீசார் ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மகாலட்சுமி தனது சோசியல் மீடியா தலத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார், “எல்லாம் கடந்த போகும்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு.
View this post on Instagram