நடிகர் விஜயகாந்த் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் 90களில் உச்சத்தில் இருந்த மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த். நடிப்பில் டாப்பில் வந்த விஜயகாந்த் அரசியலிலும் கலக்க ஆரம்பித்தார்.

இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், திரை உலகில் அறிமுகமான 1980ம் ஆண்டிலேயே நீரோட்டம்,சாமந்திப்பூ, தூரத்து இடி முழங்குது என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்தார்.

அவருக்கு ஆரம்பகாலகட்ட படங்களே நல்ல ஹிட் கொடுக்க நடிகராக மட்டும் இல்லாது தயாரிப்பாளராகவும் களமிறங்கினார்.

சொத்து மதிப்பு
அரசியலில் எதிர்க்கட்டி தலைவர் என்ற அளவிற்கு மளமளவென வளர்ந்து வந்த அவரது கட்சி இப்போதும் உள்ளது ஆனால் அந்த அளவிற்கு பெரிய அளவில் இல்லை.

விஜயகாந்த் அவர்களும் உடல்நலக் குறைவால் இப்போது விட்டிலேயே முடங்கிவிட்டார். உதவி என கேட்பவர்களுக்கு மனதார உடனே உதவும் நடிகர் விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகர்.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7 தான் தற்போதைய சின்னத்திரையின் ஹாட் டாப்பிக். இதில் யார்யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தினம்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது.

ரவீனா, ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்தரஜா, விஷ்ணு, சத்யா, அனன்யா, மூன்நிலா, பப்லு பிரித்விராஜ் உள்ளிட்டோர் தான் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் என கூறப்படுகிறது

புதிய போட்டியாளர்கள்
இந்நிலையில், தற்போது புதிய போட்டியாளர்கள் இருவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் வர்மா என்பவர் பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள இருக்கிறாராம். இவர் ஒரு நடன கலைஞர் ஆவார்.

மேலும் கடந்த பிக் பாஸ் 5ல் கலந்துகொண்ட நடிகை தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் வரும் அனைவரும் கண்டிப்பாக பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள போகிறார்களா என்று தெரியவில்லை. இந்த வாரம் இறுதியில் தெரிந்துவிடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் 20 போட்டியாளர்கள் யார் யார் என்று.

குக்வித் கோமாளி பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு!

குக் வித் கோமாளி
வேலை வேலை என பிஸியாக பரபரப்பாக இருக்கும் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது கஷ்டமான டாஸ்க்.

ஆனால் அப்படிபட்ட மக்களையும் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மூலம் காமெடி செய்து சிரிக்க வைத்து வருகிறார் புகழ்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கோமாளியாக கலந்துகொண்டு இவர் செய்த கலாட்டாக்கள் ஏராளம், சிரித்து சிரித்து மக்கள் வயிறு வலிக்கும் வரை சிரித்துள்ளார்கள்.

அப்படிபட்டவருக்கு இப்போது நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

நடிகரின் குழந்தை
நடிகர் புகழ் தனது நீண்டநாள் காதலி பென்ஸி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் கோலாகலமாக புகழின் மனைவிக்கு சீமந்தமும் நடந்தது.

இந்த நிலையில் புகழுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாம். குழந்தையின் கால் புகைப்படத்துடன் அவரே இந்த சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

டாடா பட வெற்றியை தொடர்ந்து தரமான இயக்குனர்களுடன் கைகோர்த்த கவின்

நடிகர் கவின்
சினிமா சாதிக்க வேண்டும் என சென்னை வரும் அனைவருக்குமே இந்த துறை வெற்றியை கொடுத்துவிடவில்லை. பல கஷ்டங்கள், உழைப்பை தாண்டி தான் சினிமாவில் எல்லா கலைஞராலும் சாதனை செய்ய முடிகிறது.

அப்படி சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்தவர்களில் ஒருவர் தான் கவின். ஆரம்பத்தில் கிடைக்கும் குறும்படங்கள், சீரியல்கள் என நடித்த அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது சரவணன்-மீனாட்சி என்ற தொடர் தான்.

அதன்பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய அவர் பிக்பாஸ் கலந்துகொண்டு கொஞ்சம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் கவினுக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது.

இப்பட வெற்றி மகிழ்ச்சியோடு திருமணத்தையும் முடித்துக் கொண்டார்.

அடுத்தடுத்த படங்கள்
இந்த நிலையில் நடிகர் கவினின் அடுத்தடுத்த படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடன இயக்குனர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வரும் கவின் அடுத்து விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை முடித்த கையோடு மாமன்னன் பட புகழ் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க இருக்கிறாராம்.

திடீரென சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியை கண்டு வருபவர்.

எந்தஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சின்னத்திரையில் நுழைந்து காமெடி நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, தொகுப்பாளர், விருது விழா என அடுத்தடுத்து தனது திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரை வந்து இப்போது சாதித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ரஜினி, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, கார்த்தி வரிசையில் கோலிவுட்டில் அடுத்ததாக வசூலில் கலக்கி வரும் நடிகராக உள்ளார்.

சம்பள விவரம்
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது.

2,3 படங்களுக்கு முன்பு சம்பள பிரச்சனை காரணமாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கப்போகும் படத்திற்கு டபுள் மடங்கு அதாவது ரூ. 70 கோடி வரை உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ்
எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் 2001ம் ஆண்டு அஜித்தை வைத்து தீனா என்ற படத்தை கொடுத்து இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

முதல் படமே அவருக்கு பெரிய ஹிட் கொடுக்க அடுத்து அவர் விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். இப்படமும் மிகப்பெரிய ஹிட், அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த் அந்தப் படத்தில் வேறொரு பரிமானத்தில் நடித்திருப்பார்.

பின் அடுத்தடுத்து சூர்யாவை வைத்து கஜினி இயக்கி வெற்றியடைய அப்படியே பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இதே படத்தை இயக்கி கலக்கினார்.

ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் என இயக்கி இருந்தார். விரைவில் சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் படம் இயக்குவதாக இருந்தது, ஆனால் இதுவரை படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சொத்து மதிப்பு
படத்துக்கு படம் தனது சம்பளத்தை உயர்த்தி வந்த ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் சொத்து மதிப்பு ரூ. 72 கோடி அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா?.

வாணி போஜன்
சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் பல பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வருகிறார்.

லிவிங் ரிலேஷன்ஷிப்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் இருக்கும் வரை என்னை யாரும் அப்படி பேசவில்லை.

ஒரு படத்தில் ஹீரோவோட நடித்துவிட்டால் அவர்களுடன் இணைத்து தவறாக எழுதி வைத்துவிடுவார்கள்.

என் இந்த மாதிரி எல்லாம் போடுகிறார்கள், வியூஸ் வேண்டும் எண்ணத்தில் எதாவது பொய்யான தகவலை பரப்புகிறார்கள் என்று வாணி போஜன் கூறியுள்ளார்.

கவர்ச்சியில் கலக்கும் லாஸ்லியா

லாஸ்லியா
பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டுமே இருந்து வந்த லாஸ்லியா, தற்போது கிளாமரும் தாராளமாக காட்ட தொடங்கி இருக்கிறார்.

எல்லைமீறிய கவர்ச்சி
இந்நிலையில் தற்போது லாஸ்லியா வெறும் சட்டை உடன் மட்டும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

சொந்த ஊரில் வீடு கட்டி சிலை வைத்துள்ள விஜயகுமார்

நடிகர் விஜயகுமார்
தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திர குடும்பமாக வாழ்ந்து வருபவர்கள் தான் விஜயகுமார் குடும்பம்.

1961ம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து கலக்கி வந்தவர் தான் விஜயகுமார்.

400 படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயகுமார் சின்னத்திரையிலும் சீரியல்கள் நடித்துள்ளார். இவருடைய மகன் அருண்குமாரும் இப்போது நிறைய ஹிட் படங்கள் கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

சொந்த வீடு
நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், 5 பெண்கள் பிள்ளைகள் மற்றும் 1 மகன் இருக்கிறார.

விஜயகுமார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது குடும்பத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டிற்கு செல்வாராம்.

தனது பெரிய குடும்பத்திற்காக சொந்த வீட்டில் 10க்கும் மேற்பட்ட பெட்ரூம்கள் வைத்து கட்டியுள்ளாராம். அதோடு அந்த வீட்டில் தனது மனைவிகளுடன் இருப்பது போல் ஒரு சிலையும், தனது தாய்-தந்தைக்கு ஒரு சிலையும் வைத்து கட்டியுள்ளாராம்.

சீரியல் நடிகையிடம் அத்து மீறிய முன்னணி இயக்குனர்

சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகை அர்ச்சனா மாரியப்பன். அவர் வில்லியாக பல தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும் பல திரைப்படங்களிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார்.

அதில் பல படங்களில் அவரது ரோல்கள் கவனம் ஈர்த்து இருக்கின்றன. இந்நிலையில் தற்போது அர்ச்சனா மாரியப்பன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் தன்னிடம் ஒரு பிரபல இயக்குனர் தவறாக நடந்ததாக கூறி இருக்கிறார்.

ஆடையை தூக்க சொன்னார்..
ஒரு படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிப்பதாக என்னை ஆடிஷனுக்கு அழைத்தார்கள். பெரிய இயக்குனர் அவர். பெயரை சொல்ல விரும்பவில்லை.

உதவி இயக்குனர்கள் வெளியே சென்ற பிறகு அந்த இயக்குனர் என் ஆடையை முட்டி வரை தூக்க சொன்னார். நர்ஸ் உடையில் எப்படி இருப்பாய் என பார்க்க வேண்டும் என கூறினார்.

திருமணம் பற்றி வதந்தி.. சாய் பல்லவி கடும் கோபமான பதிவு

சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார் என ஒரு வதந்தி கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.

அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வரும் SK 21 படத்தின் பூஜையில் மாலையுடன் இருக்கும் போட்டோவை crop செய்து சிலர் இப்படி ஒரு வதந்தியை பரப்பி இருக்கின்றனர்.

கோபமான பதிவு
இந்த செய்தி பற்றி தற்போது சாய் பல்லவி கடும் கோபத்துடன் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். “எனக்கு வதந்திகளை பற்றி கவலை இல்லை. ஆனால் அதில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டு இருக்கும்போது நான் பேசியே ஆக வேண்டும்.”

“படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட போட்டோவை கிராப் செய்து இப்படி தவறான நோக்கத்தில் பரப்புகிறார்கள். என் படங்கள் பற்றி நல்ல அறிவிப்பை வெளியிட விரும்பிய நேரத்தில் இப்படி வேலையில்லாதவர்கள் செய்யும் விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

“இப்படி ஒரு விஷயத்தை செய்வது இழிவானது” என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.

பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் வெளிவந்த லிஸ்ட்

பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 7வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே நிறைய புதிய விஷயங்களை புரொமோவில் கூறி வருகின்றனர், ஒரு வீட்டிற்கு பதிலாக இரண்டு வீடுகள் வேறு இருக்கிறது.

எனவே நிகழ்ச்சி எப்படி இருக்கும், எப்படிபட்ட போட்டிகள் இருக்கும், எந்தெந்த பிரபலங்கள் வரப்போகிறார்கள் என நிறைய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

உறுதியான போட்டியாளர்கள்
இந்த நிலையில் பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியாக கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் என சில பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது.

அவர்கள் யார் யார் என்றால் சீரியல் பிரபலங்கள் ப்ருத்விராஜ், மௌன ராகம் புகழ் ரவீனா, ஆபிஸ் சீரியல் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் பிகில் பட புகழ் இந்துஜா ஆகியோர் உறுதியான போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.

கமல், சிம்பு படத்தை நிராகரித்த டாப் இசையமைப்பாளர்..

எஸ்.டி.ஆர் 48
சிம்பு அடுத்ததாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் எஸ்.டி.ஆர் 48. இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

வரலாற்று கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். தேசிங் பெரியசாமி இயக்கம், சிம்பு நடிப்பு, கமல் தயாரிப்பு என மட்டுமே அறிவித்துள்ளனர்.

ஆனால், கதாநாயகி யார், இப்படத்திற்கு இசையமைக்க போவது யார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

நிராகரித்த அனிருத்
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் இடம் கேட்டுள்ளார்களாம். அடுத்த 6 மாதத்திற்கு நான் பிசி என அனிருத் கூறி எஸ்.டி.ஆர் 48 படத்தை நிராகரித்து விட்டாராம்.
இதனால் வேறொரு இசையமைப்பாளரை கமிட் செய்ய முடிவு செய்துள்ளனர். அனிருத்தின் நெருங்கிய நண்பர் சிம்புவிற்கே இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பெண்ணிடம் அநாகரீக செயலுக்கு கூல் சுரேஷ் மன்னிப்பு வீடியோ

நடிகர் மன்சூர் அலி கான் தற்போது சரக்கு சரக்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற போது மேடையில் நடிகர் கூல் சுரேஷ் பெண் தொகுப்பாளரிடம் எல்லைமீறியது எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

அந்த பெண்ணுக்கு கூல் சுரேஷ் திடீரென மாலை போட்டதால் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நடிகர் மன்சூர் அலி கான் மேடையில் கூல் சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்தார்.

மன்னிப்பு கேட்டு வீடியோ
இந்நிலையில் இந்த விஷயத்தை தான் விளையாட்டாக செய்துவிட்டதாகவும், அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூல் சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

“நான் விளையாட்டாக செய்தது இப்படி ஆகி விட்டது, அந்த பெண் பெயர் கூட எனக்கு தெரியாது. மாலை போட கூடாது என்பது அதை செய்ய பிறகு தான் எனக்கு தெரிந்தது” என கூல் சுரேஷ் கூறி இருக்கிறார்.

ஐந்து நாட்களில் மார்க் ஆண்டனி திரைப்படம் செய்த வசூல்..

மார்க் ஆண்டனி
கடந்த வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் ஒவ்வொரு நாளும் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது.

முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், விஷாலின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக மார்க் ஆண்டனி மாறியுள்ளது.

உலகளவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் இதுவரை எந்த ஒரு விஷால் படத்திற்கும் கிடைக்காத ஓப்பனிங் மார்க் ஆண்டனி படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து ஐந்து நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பொறி பறக்கும் லியோ புது போஸ்டர்..

விஜய் நடித்து இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனால் படத்தின் டீஸர் ட்ரைலர் உள்ளிட்டவை எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ரசிகர்களுக்காக ஒரு புது போஸ்ட்டரை இன்று மாலை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

போஸ்டர்
சரியாக 6 மணிக்கு லியோ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தீப்பொறி பறக்க்ம் அந்த போஸ்ட்டரை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

தயாரிப்பாளருடன் நடிகை திரிஷா திருமணமா?

திரிஷா
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தயாராகியுள்ளார்.

இதன்பின் கமலின் 234வது படத்திலும் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவின் திருமணம் குறித்து பல செய்திகள் இதற்குமுன் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று திரிஷாவின் திருமணம் திடீரென நின்றுபோனது. இதன்பின் திருமணம் குறித்து திரிஷா எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

திருமணம்
முழு மூச்சாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா, மலையாள திரையுலகில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது

ஆனால், அந்த தயாரிப்பாளரின் பெயர் என்ன என்பது குறித்து தெரியவில்லை. மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்தது எப்படி?- நடிகை விஜயலட்சுமி

விஜயலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மீடியாவிற்குள் வந்தவர் விஜயலட்சுமி. உடனே வெங்கட் பிரபு 2007ம் ஆண்டு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 28 படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன்பின் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம் என தொடர்ந்து படங்கள் நடித்தவர் 2018ம் ஆண்டு சின்னத்திரையில் நாயகி என்ற தொடரில் நடித்து வந்தார்.

பின் தொடரில் இருந்து வெளியேறி பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு விளையாடினார். அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளர் ஆனார்.

வெயிட் லாஸ்
குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பிறகு தனது உடல் எடை குறைப்பு பயணத்தை தொடங்கினாராம். காலை, மதியம், இரவு 3 வேளையும் காய்கறிகள், சூப் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாராம்.

கொழுப்பு நிறைய உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளாமல் புரோட்டீனை தேர்ந்தெடுத்தாராம்.

8 மாதங்களுக்கு பிறகு நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்தாராம். வாக்கிங் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியதாம். விஜயலட்சுமி யோகா, எடை அதிகம் தூக்காத சின்ன சின்ன எளிமையான பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தாராம்.