யாழில் வானில் இருந்து வீழ்ந்த மர்மப்பொருள்! 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

v10

யாழில் வானத்தில் இருந்து வீழந்த ஒருவகையான திரவம் காரணமாக 18 மாணவிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 18 பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வானில் இருந்து வீழ்ந்ததாக கூறப்படும் திரவம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.