சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வந்தவாறு உள்ளன. இந்நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்படாத ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சிறைக்கு அருகே சசிகலாவின் உறவினர்கள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு தான் சசிகலா பெரும்பாலான நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் வருகிறது. சசிகலாவை உறவினர்கள் பார்க்க வரும் நாட்களில் மட்டும் தான் அவர் சிறைக்கு வருவார் என கூறப்படுகிறது. தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.