ஒரு குற்றவாளிக்கு சிறைத்தண்டனை கொடுப்பதே, அவர் தனது தவறை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் சசிகலா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த போதிலும் குற்றங்கள் செய்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ”விவிஐபி என்ற அடிப்படையில் பாதுகாப்பு விதிகள் சசிகலாவுக்கு கடுமையாக பின்பற்றப்படுகிறது. ரூபா சொல்வது போல சிறப்பு வதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை’ என்று கூறினார்.