வாடகை பாக்கி கொடுக்காத பிரபல நடிகர்: பொலிசில் புகார்

வாடகை பாக்கி தராத காரணத்தால் கன்னட நடிகர் சுதீப் மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் சுதீப், தான் தயாரித்து வரும் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்புக்காக பைகூர் கிராமத்தில் உள்ள தீபக் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் இருக்கும் பண்ணை வீட்டை தெரிவு செய்தார்.

அதற்கு வாடகையாக நாளொன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்பு முடிந்த பின்னர் அனைவரும் சென்றுவிட்டனர்.

தீபக்கிற்கு சேர வேண்டிய ரூ.1.5 லட்சம் வாடகை பாக்கியை தரவில்லையாம்.

தீபக் பல்வேறு முயற்சிக்குப்பின் சுதீப்பை தொடர்பு கொண்டு வாடகை குறித்து கேட்டுள்ளார், ஆனால், அவர் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து சிக்கமகளூரு மாவட்ட பொலிஸ் எஸ்.பியிடம் தீபக் புகார் செய்துள்ளார்.