இடமாற்றம் செய்யப்பட்டாள் ‘இசையரசி’

கடற்படையினரின் போர்க்கலங்களை தாக்கியழிக்கும் வல்லமை கொண்ட விடுதலைப் புலிகளின் ‘இசையரசி’ எனும் போர்க்கப்பல், புதுமாத்தளன் ராணுவ காட்சியறையில் இருந்து முல்லைத்தீவு யு35 பிரதான வீதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த கப்பல் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய ஆயுதங்களை, கடந்த எட்டு வருட காலமாக ராணுவத்தினர் காட்சியப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் ராணுவத்தினரால் இக் கப்பல் நகர்த்தப்பட்டுள்ளது. போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினரால் இக் கப்பல் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.