இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் டெங்குநோய்த் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் வழக்கமான பாடசாலை சீருடைகளுக்கு மேலதிகமாக உடம்பை மூடும் வகையில் உடைகளை அணிவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்களது அரைக்காற்சட்டைகளுக்குப் பதிலாக முழுக்காற்சட்டைகளை அணிவதற்கும், மாணவிகள் தங்களது சீருடை கவுன்களுக்கு மேலதிகமாக கால்களை மூடும் ஆடைகளை அணிவதற்கும் இந்தத் தற்காலிக அனுமதி வழங்கப்படவுள்ளது எனவும், இன்னும் ஓரிரு தினங்களில் இதற்கான சுற்றுநிருபமொன்று பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் தற்காலிக ஏற்பாடு டெங்கு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு மாத்திரமே செல்லுபடியாகும்