கணவன் கண் முன்னால் விபத்தில் சிக்கி பலியான கர்ப்பிணி மனைவி

சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி கணவன் முன்னிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் மாகாணத்தில் உள்ள Bulach நகரில் 39 வயதான கணவர் மற்றும் 38 வயதான மனைவி ஆகிய இருவர் வசித்து வந்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர், ஓட்டுனரை அழைத்துக்கொண்டு கணவருடன் கர்ப்பிணி மனைவி வெளியே சென்றுள்ளார்.

பின் இருக்கையில் கணவரும் மனைவியும் அமர்ந்திருக்க மற்றொருவர் காரை ஓட்டிச்சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் தாறுமாறாக சென்ற 4 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்திற்குள்ளாகியுள்ளன.

துரதிஷ்டவசமாக, கர்ப்பிணி பெண் சென்ற காரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் சிக்கிய தாயாரும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்ணின் கணவரும் 33 வயதான ஓட்டுனரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

விபத்தை நேரில் பார்த்தவர்களை அழைத்துள்ள பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.