தீக்கிரையானது சிரியா அகதிகள் முகாம்

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் காரணமாக வெளியேறிய அந்த நாட்டு மக்கள் தங்கியிருந்த அகதிகள் முகாம் மொத்தமும் தீ விபத்தில் சாம்பலாகியுள்ளது.

குறித்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுள்ளதாகவும் 6 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் தெரிய வந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் கடுமையாக போராடியும் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி தகிக்கும் கால நிலையும் நெருப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு ஒரு காரணம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.