கொழும்பு நகருக்குள் படகு போக்குவரத்து

கொழும்பு நகருக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நகருக்குள் பயணிகள் போக்குவரத்து படகு சேவையொன்றை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு நகருக்குள் அதிக எண்ணிக்கையான வாகனங்கள் பிரவேசிப்பதன் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்துள்ள அந்த அமைச்சு, இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்தது.

கொழும்பு நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களைப் பயன்படுத்தி பயணிகளுக்கான படகு சேவையொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது.