30 வினாடிக்கு ஒரு கோடி ரூபாய்: இந்தியா – பாகிஸ்தான் இறுதிப் போட்டி விளம்பர ரேட்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. உலகளவில் இந்த போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது விளம்பரங்களுக்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு நிறுவனமும் தன் விளம்பரம் வந்தால் போதும், பணம் ஒரு பிரச்சினையே இல்லை என்று நினைப்பதுண்டு.

இந்நிலையில் நாளைய போட்டியின்போது ஓவர்களுக்கு இடையில் விளம்பரங்களை ஒளிப்பரப்ப 30 வினாடிக்கு ஒரு கோடி ரூபாய் என்ற வகையில் விளம்பர ரேட் உயர்த்தப்பட்டுள்ளது. இது மற்ற போட்டிகளை விட 10 மடங்கு அதிகமாகும்.