முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தோம்: வங்காள தேச கேப்டன் மோர்தசா

சாம்பியன் கோப்பை அரை இறுதியில் இந்தியாவிடம் தோற்றது குறித்து வங்காளதேச கேப்டன் மோர்தசா கூறியதாவது:-

தமிம் இக்பால், முஷ்பிகுர் ரகிம் நல்ல பார்ட்னர் ஷிப் கொடுத்தனர். ஆனால் களத்தில் இருக்க வேண்டிய முக்கியமான நேரத்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நாங்கள் 330 ரன் வரை எடுத்திருக்க வேண்டும்.

இதுபோன்ற மிகப்பெரிய போட்டியில் விளையாட நாங்கள் முழுமையாக தயாராக வில்லை என்பதை காட்டுகிறது. முக்கிமான ஆட்டங்களில் மனரீதியாக வலுவாக இருக்கவேண்டியது அவசியம். 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் வலுவான அணியாக வருவோம் என்றார்.