சாதாரண தரப்பரீட்சைக்கு 15க்கு முன் விண்ணப்பிக்கவும்

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறிப்பிட்ட தினத்துக்குள் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் மூலமாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் குறிப்பிட்ட பரீட்சைக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப்படிவத்தை பதிவுத்தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.