வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு காலவகாசம்

வடமாகாண சபை அமைச்சர்கள் இருவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கை தொடர்பில் அமைச்சர்கள் எதிர்வரும் 14 திகதிக்கு முன்னர் விளக்கமளிக்க வேண்டும் என முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் இன்றையதினம் நடைபெற்ற விசேட அமர்வின் போது முதலமைச்சரினால் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.