இலங்கை அணி கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும்: சங்கக்கரா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நம்பிக்கையுடன் ஆக்ரோஷமாக இலங்கை அணி விளையாட வேண்டும். அதனை இலங்கை அணி செய்தால் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கலாம். பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இருக்கும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது என்பது எளிதான காரியம் அல்ல.

உடல் தகுதி பெற்று மேத்யூஸ் இந்த ஆட்டத்தில் ஆடினால் அது இலங்கை அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும்.  அதேநேரத்தில் இலங்கை அணி தனது ரன்ரேட் விகிதத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதால் உபுல் தரங்கா தடைக்கு ஆளாகி இருப்பது பெரிய இழப்பாகும்.

அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து கொண்டு இலங்கை அணி பந்து வீச கூடுதலாக 39 நிமிடம் எடுத்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும்’ என்று தெரிவித்தார்.