இந்தியாவின்மாண்புகளை அழிக்கும் முயற்சியில் பா.ஜ.இ அரசு: சோனியா

 

புதுடில்லி: இந்தியாவின் மாண்புகளை அழிக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.இ அரசு ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டில்லியில் சோனியா தலைமையில் நடந்தது. இதில்இ ராகுல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் சோனியா பேசியதாவது: இந்தியாவின் மாண்புகளை அழிக்கும் முயற்சியில் பா.ஜ. அரசு ஈடுபட்டுள்ளது. பொருளாதாரம் மட்டுமல்லாமல் வீழ்ச்சி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவையும் சரிந்து வருகிறது. எங்கெல்லாம் அமைதி இருந்ததோஇ தற்போது அங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. பொறுமை இருந்த இடத்தில் அத்துமீறல் நடக்கிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்த நிலையில் தேக்கநிலை காணப்படுகிறது. இந்தியாவின் மாண்புகளையும் கொள்கைகளையும் மத்திய அரசு அழிக்க நினைக்கும் மத்திய அரசிடமிருந்து அதனை பாதுகாக்க நாம் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.