தேவையான பொருட்கள் :
வெற்றிலை – 6,
புளி – எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பழுத்த தக்காளி – 2,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
மிளகு – சீரகப் பொடி – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைத்து நீர் விட்டு கரைக்கவும்),
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
* தக்காளி, வெற்றிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
* நெய்யில் தனியாத்தூள், மிளகு – சீரகப் பொடியை வறுத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும்.
* உடனடியாக நறுக்கிய வெற்றிலையை போட்டு மூடிவிடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு பரிமாறவும்.
* சூப்பரான வெற்றிலை ரசம் ரெடி.







