அடுத்து வரும் இரு நாட்களில் இலங்கையை அச்சுறுத்த வரும் அடைமழை!

கடந்த சில நாட்களாக நிலவிய அடைமழையுடன் கூடிய காலநிலை தற்போது குறைவடைந்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை நாட்டின் தென் மேற்கு பிரதேசத்தில் தொடரும் என்று இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

முடிவடைந்த 21 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் 68.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு ,வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் காற்று மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். மழை பெய்யும் நேரங்களில் காற்றின் வேகம் மேலும் அதிரிக்கலாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 29ம் 30ம் திகதிகளில் மீண்டும் அடைமழை பெய்யலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.