ராஜீவ் கொலை வழக்கு படத்தில் ராணா

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பான கதையை மையமாகக் கொண்டு சில படங்கள் வெளியாகி உள்ளன. இப்போது மீண்டும் அதே கொலை வழக்கை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஒரு படம் தயாராகிறது.

இதில் கதாநாயகனாக ராணா நடிக்கிறார். அவர் சி.பி.ஐ. அதிகாரியாக இந்த படத்தில் வருகிறார். இது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் வேடம். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு நாடு முழுவதும் தெரிந்த பிரபல நடிகராக ராணா மாறி இருக்கிறார்.

இது தவிர ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான கதைதான் இந்த படத்தின் மையகரு. எனவே, நாடு முழுவதும் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.