தேவையான பொருட்கள் :
வரகரிசி – கால் கப்,
ஓமம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தண்ணீர் – அரை கப்,
மோர் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
மாங்காய், கேரட் – தலா 100 கிராம்,
பெரிய வெங்காயம் – 1,
எண்ணெய், பெருங்காயத்தூள் – தேவைக்கு.

செய்முறை :
* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வரகரிசியைக் கல் பொறுக்கி சுத்தம் செய்து, சிறிது ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும். விசில் போனவுடன் நன்றாக கடைந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஓமம், பச்சை மிளகாய், நறுக்கிய மாங்காய், நறுக்கிய கேரட், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு அரிசி கஞ்சி, வதக்கிய வெங்காய கலவை, மோர் சேர்த்து, நன்றாகக் கிண்டி, உப்பு, பெருங்காயத் தூள் தூவி கஞ்சியாகப் பருகவும்
* சத்து நிறைந்த வரகரிசி – மோர் கஞ்சி ரெடி.







