சத்து நிறைந்த சிறுதானிய முருங்கை கீரை அடை

தேவையான பொருட்கள் :

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு சேர்த்து – கால் கிலோ,
குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி சேர்த்து – கால் கிலோ,
முழு கருப்பு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை – தலா 4 டீஸ்பூன்,
வெங்காயம் – 2
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 10 பல்,
முருங்கை கீரை – 2 கைப்பிடி,
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

* கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.

* நன்றாக ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்ற எண்ணெய் விட்டு அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி இருபுறம் வேக விட்டு சுட்டு எடுக்கவும்.

* சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை ரெடி.