முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோரியான காந்தினி விசித்ரா ராஜபக்ச நேற்றைய தினம் காலமானார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
கொழும்பு மலர் சாலைக்கு சகோதரியின் உடலை கொண்டு செல்லும் போது, மஹிந்த ஒரு கையால் தூக்கியிருந்தார்.
ஒரே இரத்தத்தில் பிறந்த சகோதரியின் உடலை ஒரு கையில் தூக்கி சென்ற அண்ணன் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் சகோதரியின் இறுதி கிரியை இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவின் சகோதரியான காந்தினி விசித்ரா ராஜபக்ச ரணவக்கவின் பூதவுடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் உடஹமுல்ல பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
துசித ரணவக்க என்பவரின் அன்பான மனைவியான அவர் மூன்று பிள்ளைகளின் அன்பான தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.