மஹிந்த உறவினர்களுக்கு மற்றுமொரு நெருக்கடி நிலை

றக்பி வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினர்களுக்கு தற்போது நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாஜூடின் கொலை தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் உறவினர்களிடம் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

றக்பி வீரர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் உள்ள வாகன பதிவு புத்தகத்தின் பக்கங்கள் சில காணமல் போயுள்ளன.

இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரபல றக்பி வீரர் வசிம் தாஜூடின் 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி மர்மான முறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.