தேவையான பொருட்கள் :
பொன்னாங்கண்ணி கீரை – 1 கட்டு
தக்காளி – 2
பாசிப்பருப்பு – 1 1/2 கப்
தாளிக்க :
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு
உளுந்தம் பருப்பு
சீரகம்
வெங்காயம் – 1
பொடி வகைகள் :
சீரக பொடி – 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசிப்பருப்பை சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* அதில் நறுக்கிய கீரையை சேர்த்து தண்ணீரையும், மிளகாய் தூளையும் சேர்த்து வேக விடவும்.
* முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து கீரையில் கொட்டி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
* சத்தான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் ரெடி.
* இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.