அடுத்த 72 வது நாளில் என்ன பூகம்பம் வெடிக்குமோ? அச்சத்தில் சசிகலா உறவுகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து சரியாக 72 வது நாள், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

சசிகலா சிறை சென்ற அடுத்த 72 வது நாள், இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி பொலிசார் தினகரனை கைது செய்தனர்.

எனவே, அடுத்த 72 வது நாளில் சசிகலா குடும்பத்தில் என்ன அசம்பாவிதம் நடக்க போகிறதோ என்று குடும்ப உறவுகள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதனிடையே, சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், திருவிடைமருதூர் கோவிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவ்வாறு சசிகலா குடும்பத்தில் தொடர்ந்து சிக்கல் மேல் சிக்கல் ஏற்படுவதால், அதன் உண்மையான காரணம் என்ன என்பது அறியாமல் சசிகலா குடும்பம் விழிபிதுங்கி நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ஆம் திகதி காலமானார்.

இதனிடையே ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகளை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பும் பொது மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா இறந்த 72 வது நாளான பிப்ரவரி 14 ம் திகதி, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்தது.

அது முடிந்த ஒரு சில நாட்களிலேயே, சசிகலாவின் கணவர் நடராசன், உடல் நிலை பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, தேர்தலே நிறுத்தப்பட்டது.

அடுத்த சில நாட்களிலேயே, சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், மாரடைப்பால் உயிரிழந்தார். சசிகலாவால் அவரது இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சசிகலா கைது செய்யப்பட்ட நாளில் இருந்து சரியாக 72 ஆவது நாளில், அதாவது கடந்த 26 ம் திகதி தினகரன் கைது செய்யப்பட்டார்.

தற்போது டெல்லி காவல்துறையும், வருமான வரித்துறையினரும் தினகரனை விசாரணை செய்து வருகின்றனர். இதனால், சசிகலா குடும்பமே அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

மட்டுமின்றி போயஸ் தோட்டத்தின் செல்ல பிள்ளையாக கருதப்பட்ட இளவரசியின் மகன் விவேக்கை குறி வைத்து மத்திய அரசின் விசாரணை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், மத்திய உளவு பிரிவு மற்றும் தமிழக பொலிசாரின் விசாரணை சசிகலா குடும்பத்தை நோக்கி திரும்பி உள்ளது.

எனவே, தினகரன் கைதாகி அவதிப்பட்டு வரும், அடுத்த 72 வது நாளில், என்ன பூகம்பத்தை சந்திக்க நேருமோ என ஒட்டு மொத்த சசிகலா குடும்ப உறவுகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.