10வது ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய குஜராத் அணித்தலைவர் ரெய்னா, முதல்முறையாக மைதானத்துக்கு வந்த தனது மகளுக்கு அதை அர்ப்பணித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கு ஊதா தொப்பியும் வழங்கப்படுவது வழக்கம்.
பெங்களூருல் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணித்தலைவர் ரெய்னா, முதல்முறையாக மைதானத்துக்கு தனது மகளை அழைத்து வந்தார்.
நேற்று பெங்களூரு உடன் நடைபெற்ற ஆட்டத்தில் 34 ஓட்டங்கள் எடுத்து 309 ஓட்டங்களுடன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் ரெய்னா. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அசத்தல் வெற்றிப்பெற்றது.
இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரெய்னா பதிவிட்டுள்ளதாவது, குஜராத் அணிக்கு இந்த வெற்றி மிகவும் தேவையானது. நான் கைப்பற்றிய ஆரஞ்சு தொப்பியை எனது மகள் மகள் கிரேசியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.