முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று அவரின் தம்பி ஓ.ராஜா, ராமேஸ்வரம் ராமாநாதசுவாமி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை செய்தார். பூஜையில் அவரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஐந்தாக உடைந்து கிடக்கும் அதிமுகவை ஒட்டவைக்கும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த நிலையில்இதற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தானே அந்தப்பதவியில் நீடிக்கவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்.
இதற்காக அவரின் சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் சிறப்பு யாகமும் செய்து வருகிறார். அதே போல அதிமுக அமைச்சர்கள், ஆதரவு எம்.எல்.ஏக்களை சரிக்கட்டும் வேலையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஓபிஎஸ் குடும்பத்தினர் கோவில் கோவிலாகச் சென்று அவருக்கு முதல்வர் நாற்காலி கிடைக்க வேண்டிக்கொண்டுள்ளனர். அவரின் தம்பி ஓ.ராஜா குடும்பத்தோடு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று காலை விசேஷ பூஜை நடத்தியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.