சசிகலாவுக்கு துணையாக டிடிவி.தினகரனும் சிறைக்கு செல்வார்.. எச்சரிக்கிறாரா எச்.ராஜா?

சசிகலாவுக்கு துணையாக தினகரனும் சிறைக்கு செல்வார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி.தினகரன் சிறைக்கு செல்வது உறுதி என்றும் அவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளார். அவருக்கு துணையாக அந்நிய செலாவணிமோசடி வழக்கில் சிக்கியுள்ள டி.டி.வி. தினகரனும் சிறைக்கு செல்வார் என்று கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்த்தால் அத்திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் எச் ராஜா கூறினார். மேரும் நெடுவாசல் போராட்டத்தை பயங்கரவாத இயக்கங்கள் தூண்டி விடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.