அலுவலகத்தில் வேலை செய்வோர்க்கும், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் டீ, காபி பருகவில்லை என்றால் தலையே வெடித்துவிடும்.
பெரும்பாலோனர்க்கு அதிக சூட்டில் இருக்கும் பானங்கள் தான் மிகவும் பிடிக்கும். ஆனால் அதிக சூட்டில் பானங்களை பருகினால் புற்றுநோயினை உண்டாக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக புற்றுநோய் ஆய்வு அமைப்பினை சேர்ந்த 23 ஆராய்ச்சியாளர்கள் 10 நாடுகளில் சுமார் 1000 பேரிடம் நடத்திய ஆய்வில் அதிக வெப்பநிலையில் உள்ள பானங்கள் புற்றுநோயினை உண்டாக்குகிறது என கண்டறிந்துள்ளனர்.
149F அல்லது 65C வெப்பநிலையில் உள்ள பானமானது மிக எளிதாக உணவுக்குழாய் புற்றுநோயினை உருவாக்குகிறது.
ஆசியா, தெற்கு அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் தயாரிக்கப்படும் Mate என்னும் டீ -யானது 149F/65C விட அதிக வெப்பநிலையில் உள்ள இந்த டீயானது நேரடியாக குழாய் மூலம் உறிஞ்சி குடிக்கப்படுகிறது.
இதனால் உணவுக்குழாய் புற்றுநோய் எளிதாக உண்டாகும் அபாயம் உள்ளது. மேலும், பொரித்த உணவுகள், புகையிலை போன்றவற்றினை அதிகளவு உபயோகிப்பதாலும் புற்றுநோய் உண்டாகும் அபாயமுள்ளது.
இத்தகைய பானங்களுடன் ஒப்பிடும் போது காபியானது பாதுகாப்பதானதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த பானங்களை காட்டிலும் காபி பருகும் போது புற்றுநோய் ஏற்படுவது குறைகிறது. காபி குறைந்த வெப்பநிலையில் இருந்தாலும் அதை அடிக்கடி பருகாமல் இருப்பது நலம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதே போன்று அதிக வெப்பநிலையில் உள்ள நீரை குடித்தாலும் புற்றுநோய் உண்டாகும்.
எனவே பானங்களை அதிக வெப்பநிலையில் அருந்தாமல் சற்று குளிர்ந்தபின் அருந்துவது நல்லது. புகையிலை போன்றவற்றினை தவிர்ப்பது புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.