தேவையான பொருட்கள் :
கம்பு – ஒரு கப்,
பால் – ஒன்றரை கப்,
தயிர் – ஒரு கரண்டி,
கடுகு, உளுந்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2,
இஞ்சி – ஒரு துண்டு,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு.
செய்முறை:
* பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிவைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் இரண்டு முறை அடித்து, பிறகு புடைத்து, தோலை நீக்கவும். (ஒரு தட்டில் பரத்தி, ஊதினால் தோல் நீங்கிவிடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும்.
* உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, அதில் பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் கம்பு சாதத்தில் சேர்க்கவும்.
* கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.
* கம்பு தயிர் சாதம் ரெடி.