புத்தாண்டில் மோட்டார் சைக்கிள் பந்தயம் ; சமீபத்தில் திருமணம் முடித்தவருக்கு காத்திருந்த விபரீதம்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பிரதேசத்தில் ஆலங்கேணி பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் முத்துராசா சாந்தன் என்ற 21 வயதுடைய இளைஞன்  மின் கம்பந்தத்தில் மோதியதால் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமானார்.

இவர் அண்மையில் திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தவருடைய உடல் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.