வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் புதுவடிவம் பெறும் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம்!!

புதுவருடப் பிறப்பு அன்று மாபெரும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) சித்திரைப் புத்தாண்டுடன் 50ஆவது நாள் நிறைவடைகின்றது.

இந்நிலையில், நாளைய தினம் வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பொது அமைப்புக்களையும் தங்களுடன் இணைந்து போராட வருமாறு காணாமற்போனோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுவரையிலான தமது போராட்டத்துக்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் எவையும் ஆதரவு வழங்காத நிலையில், புத்தாண்டு தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சமூகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.