அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்பின் கடந்தகால மாடலிங் வாழ்க்கையைப் பற்றி வெளிவந்த கட்டுரையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக குறித்த நாளிதழ் நஷ்டஈடு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. பிறகு குறித்த செய்தியை அந்நிறுவனம் திரும்பப் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது குறித்த கட்டுரை வெளியானது.
அதற்கு கடந்த பெப்ரவரி மாதம் மெலனியா டிரம்ப் செய்தி காரணமாக தனக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக சுமார் 150 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கேட்டு வழக்குத்தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
லண்டன் உயர் நீதிமன்றத்தில் மெலனியா டிரம்ப் செய்தி நிறுவனம் வழங்கிய மன்னிப்பையும் ஏற்றுக் கொண்டார் என சர்வதேச செய்திகள் தெரவிக்கின்றன.