நாடு பூராகவும் தாதியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடுபூராகவும் தாதியர்கள் இன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்தது.

இது தொடர்பில் அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் ஏற்பாட்டாளர் காமினி குமாரசிங்க கேசரிக்கு  மேலும்  குறிப்பிடுகையில், புத்தாண்டின் போது தாதியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு  முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனினும் இது தொடர்பாக பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்திய போதிலும் எவரும் கண்டுகொள்ளவில்லை என்றார்.