இலங்கை துறைமுகங்களின் பாதுகாப்பானது எமது நாட்டு இராணுவத்தினருக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர்.
ஜப்பானின் கியோதோவில் நடைபெறும் ஜப்பானிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் வருடாந்த கூட்டத்திலும் கலந்து கொள்வதற்காகவே அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
இலங்கையின் எந்த துறைமாக இருந்தாலும் அதனை வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கமாட்டோம்.
இலங்கை துறைமுகங்களின் பாதுகாப்பானது எமது நாட்டு இராணுவத்தினருக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையில், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, அறிவியல், கலாசார துறைகள் சம்பந்தமாக இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெறவுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய முன்னாள் பிரதமர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், அந்நாட்டு அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, கலாநிதி.சரத் அமுனுகம, மலிக் சமரவிக்ரம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.