மாத பவுர்ணமி விரத வழிபாட்டின் பலன்

* சித்திரை மாத பவுர்ணமி – எமதர்மனின் கணக்கர் சித்ரகுப்தன் அவதரித்த நாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.

* வைகாசி மாத பவுர்ணமி – முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.

* ஆனி மாத பவுர்ணமி – காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும்.

* ஆடி மாத பவுர்ணமி – கஜேந்திர மோட்சம் நடந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை நல்கும்.

* ஆவணி மாத பவுர்ணமி – அன்றைய தினம் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும்.

* புரட்டாசி மாத பவுர்ணமி – இந்த நாளில் விரதம் இருந்தால் முன்னோர் களின் ஆசியைப் பெறலாம்.

* ஐப்பசி மாத பவுர்ணமி – அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.

* கார்த்திகை மாத பவுர்ணமி – கார்த்திகை தீபத் திருநாள். அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.

* மார்கழி மாத பவுர்ணமி – ஆருத்ரா திருநாள். அன்றைய தினம் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.

* தை மாத பவுர்ணமி – தைப்பூசத் திருநாள். இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

* மாசி மாத பவுர்ணமி – மாசி மகம் திருநாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் ஜெகத்தை ஆளும் வாய்ப்பு உண்டாகும்.

* பங்குனி மாத பவுர்ணமி – பங்குனி உத்திர நாளான அன்றுதான் முருகன் – வள்ளி திருமணம், சிவ- பார்வதி திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் வழிபாடு செய்தால் வரன்கள் வாசல் தேடி வரும்.