விவசாயிகளுக்காக மெரினாவில் கடலுக்குள் இறங்கிய இளைஞர்கள்! திணறிய பொலிசார்

டெல்லியில் 15 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் திரண்ட இளைஞர்கள் திடீரென கடலுக்குள் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஒரு மாபெரும் போராட்டத்தை சென்னை மெரினாவில் இளைஞர்கள் முன்னெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து மெரினா முழுவதும் பொலிசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும் மெரினாவிக்குள் நுழைந்த சில இளைஞர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிசார் அவர்களை கைது செய்ய கடலுக்குள் இறங்க மாணவர்கள் கடலின் உள் பகுதிக்குள் செல்ல தொடங்கினார்கள். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடலுக்குள் இறங்கி போராடிய இளைஞர்களை தற்போது பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.