ஜெ. அண்ணன் மகள் தீபா வேட்புமனு தள்ளுபடியாகிறது? திட்டமிட்ட நாடகம் அரங்கேறுகிறதா?

சரியான தகவல்களை வேண்டுமென்றே மறைத்ததற்காக தீபா வேட்புமனு தள்ளுபடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளதாக கூறி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பு நடத்திவரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக நேற்று ஜெ. நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு தண்டையார் பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பிரவீண் நாயரிடம் வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.

இந்த வேட்புமனுவில் பல குளறுபடிகள் உள்ளன. இந்த குளறுபடிகளை தெரிந்தே தீபா செய்துள்ளதாக கூறப்படுகிறது. வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு இதை தீபா செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் அனைத்துமே அப்பட்டமாக தெரியும் குளறுபடிகளாகும்.

கணவர் பெயர் இள்லை பெரிய குளறுபடி என்ன தெரியுமா? தீபாவின் வேட்புமனுவில் தனது கணவர் பெயரை குறிப்பிடவில்லை. மேலும் தீபாவின் வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரமும் முழுமையாக குறிப்பிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பேரவை பெயர் இல்லை தீபா தான் தொடங்கிய பேரவையை இதுவரை பதிவு செய்யாததால், பேரவையின் பதிவு எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட முடியவில்லை. இதுபோன்ற இந்னும் சில காரணங்களால் தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் தீபா என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

கள நிலவரம் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற கள நிலவரத்தை அறிந்துகொண்டுஇ சதி காரணமாக தன்னால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை என ஸ்டன்ட் அடித்து அரசியலில் முன்னேறலாம் என தீபா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்கேநகரில் தோற்றால் அத்தோடு தனது அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும் என்பதால், இப்படி சில பல ஸ்டன்டுகளை அடித்து ஆதரவை பெருக்கலாம் என்பது அவரது திட்டமாக இருக்கலாம் என்கிறார்கள்.